Sunday 27 August 2017

பூதக்கல் ஸ்ரீ சர்ப சித்தர் பீடம்


கண்ணை மூடி உட்கார்ந்தால் ஒளி அதிர்வாக காட்சி அளிக்கும் 1200 வருட சக்தி வாய்ந்த பழமையான சித்தர், (ஜீவ சமாதி-பூதக்கல் ஸ்ரீ சர்ப சித்தர் பீடம்

1200 வருடத்திற்கும் பழமையான ஜீவ சமாதி இருக்கும் இடம் அசிரிரி மூலம் சித்தர் அடிகளார் ஜி.டி. ரவிச்சந்திரன் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டு, கடந்த 16 ஆண்டுகளாக பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும் போன ஜென்மத்தில், சித்தர் தொடர்பு உள்ளவர்கள் மட்டுமே தேடி சென்று பார்க்க கூடிய ஜீவா சமாதி என்பதால் மிகவும் சக்தி வாய்ந்ததாக காட்சி அளிக்கிறது. மற்ற ஜீவா சமாதிகள் போல் அல்லாமல் பூதக்கல் போல் காட்சி அளிக்கும் இந்த சமாதியை சுற்றி பாம்புகள் வருமாம், மேலும் இவை மக்களை இதுவரை எதுவும் செய்ததில்லை.
சூழ்ட்சும ரகசியம்:
இந்த சமாதியின் மேல் உள்ள பூதக்கல் பஞ்சபூத சக்திகளை கட்டுபடுத்தும் ஆற்றலை தன்னகத்தே கொண்டுள்ளதால் சகல வித தோஷங்களை போக்கும் சக்தி வாய்ந்ததாக காட்சி அளிக்கிறது. இன்னுமொரு அற்புதம் என்னவென்றால் சமாதி அருகே கண்ணை மூடி தவம் செய்தால், ஒளி உருவமாக சித்தர் காட்சி அளித்து வருகிறார். இந்த சித்தர் காளஹஸ்தியில் இருந்து வந்தாக கண்டறியப்பட்டுள்ளது. 1200 வருடங்களுக்கு முன் உருவான சமாதி என்பதால் பல இயற்கை சீற்றங்களை தாண்டி இன்றும் நிலையாக உள்ளது, முன்பொரு காலத்தில் இயற்கை சீற்றத்தினால் மழையும், புயலும் இந்தப் பகுதி முழுவதையும் கடுமையான பாதிப்புக்குள்ளாக்கியிருந்தது. ஆனால் சர்ப சித்தர் சமாதியாகியிருந்த இந்த இடம் மட்டும் அமைதியாக இருந்துள்ளது. 15 நாட்கள் ஒரு புறம் சாய்ந்தும் 15 நாட்கள் ஒரு புறம் சாய்ந்தவாறும் காட்சி அளிப்பது அற்புதத்தின் எல்லை என்றே கூறலாம், பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் செய்தவர்கள் மட்டுமே இந்த பதிவை படிக்கவும், இந்த சமாதிக்கு செல்ல முடியும் என்பது சித்தர் வாக்கு. பஞ்ச பூதங்களை கட்டுபடுத்தும் கல் என்பதால் எந்த சேதமும் இன்றி இன்றும் நிலையாக உள்ளது. மேலும் இந்த கோவிலில் அம்மன் அருகே உள்ள சிலை, அசிரிரி மூலம் கனவு வந்ததன் மூலம் ஏரியில் இருந்து எடுக்கப்பட்டது, இந்த கல்வெட்டிலும், அற்புத விஷயங்கள் அடங்கி இருப்பது ஆச்சர்யமே! நேரில் சென்று பார்த்தால் அற்புதத்தை உணர முடியும். பிராதான அல்லது சமாதியாக காட்சி அளிக்கும் கல்வெட்டில், மிகவும் பெரியதாக ஒரு லிங்க வடிவில் ஒரு கல் உள்ளது இதற்கு அடியில் தான் ஸ்ரீ சர்ப சித்தர் ஜீவ சமாதி அடைந்து உள்ளார் அந்த லிங்கத்தின் மீது சந்திரன் /சூரியன் உருவம் பதிக்க பட்டு உள்ளது பிரணவ மந்திரம் பதிக்க பட்டு உள்ளது பஞ்ச பூதங்களை குறிக்கும் விதமாக ஐந்து தலை நாகம் போன்ற அமைப்பு அந்த லிங்கத்தின் மீது உள்ளது நியாயமாக எதை வேண்டியதை தரும் சர்ப சித்தரை காண கீழ் கொண்ட முகவரிக்கு செல்லவும். சமாதிக்கு செல்லும் பொது முகவரியை விலாவரியாக எழுதி கொண்டு எடுத்து செல்லுங்கள்.
ஓம் ஸ்ரீ சர்ப சித்தர் ஆதி ஜீவ பீடம்
 கோவிந்தராஜ் நகர், மாங்காடு,
சென்னை-122.
கைப்பேசி எண்:9789826263.

மாங்காடு தாண்டி செல்லும் போது பட்டு மாங்காடு ரோடு இடது புறமாக வரும், உள்ளே சென்று வலப்புறத்தில் வாழை தொப்பை ஒட்டிய சிமெண்ட் ரோடு(கோவிந்தராஜ நகர் ) உள்ளே செல்லவும், அங்கு இருப்பவர்களிடம் ஜீவ சமாதி என கேட்டால் வழி சொல்லுவார்கள்

ஓம் நமசிவாய
சர்வம் சிவமயம்

அகத்தியர் இறைச்சித்தன்
சித்தர்கள் பீடம்
அகத்தியர் ஜீவ நாடி வாசிக்கும் இடம்
கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம்.
கைபேசி : 73738 38104, 95850 18295, 73738 35583

இணையதள வரைபட முகவரி
https://www.google.co.in/maps/place/11%C2%B016'03.0%22N+77%C2%B002'19.1%22E/@11.2593361,77.0383308,14z/data=!4m14!1m7!3m6!1s0x3ba8e53c391a7a2f:0xcc90c25cbc48be5!2z4K6q4K-K4K6Z4K-N4K6V4K6y4K-C4K6w4K-NLCDgrqTgrq7grr_grrTgr43grqjgrr7grp_gr4EgNjQxNjk3!3b1!8m2!3d11.2568639!4d77.0406147!3m5!1s0x0:0xa13082299b858af8!7e2!8m2!3d11.2675005!4d77.0386273?hl=ta



No comments:

Post a Comment