Tuesday 29 August 2017

சித்தர்கள் பின்பற்றிய நீர் உணவு

காலை, நண்பகல், இரவு என்று வேளைக்கு
வேளை வகை வகையான உணவுகளையும்
நேரம் கிடைக்கும் போதெல்லாம் கண்ட கண்ட
பண்டங்களையும் பணியாரங்களையும் தின்று
உடலைக் கெடுத்துக் கொண்டு, வாழ்நாளைக்
குறைத்துக் கொள்ளாமல், இயற்கை உணவாகிய
நீர் உணவை அருந்தி வந்தால் உடம்பில் நோய்
அண்டாது, நீண்ட நாள் வாழலாம்.

காலையில், காலைக் கடன்களை முடித்து பல்
துலக்கிய பின்பு காபி, டீ முதல் எந்த
உணவையும் உட்கொள்ளக்கூடாது. அதிக
அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பசி
எடுக்கும் போதெல்லாம் தண்ணீரையே
குடிக்கவேண்டும். உடம்பிலுள்ள
நச்சுத்தன்மைகள் சிறுநீர் மூலம், மலக் குடல்
மூலம் வெளியேறிவிடும். தொடக்கக்
காலத்தில் எவ்வளவு நேரம் நீர் மட்டுமே
அருந்திக் கொண்டு இருக்க முடியுமோ
அதுவரை இருக்கவும். அதிகமாகப் பசி
எடுக்கும்போது, சாதாரணமான உணவு
வகைகளை உட்கொள்ளலாம். சாதாரண உணவு
வகைகளை உண்ணும்போது, கொழுப்பு சேர்த்த
பொருள்களை நீக்கிவிட வேண்டும். வேண்டிய
அளவுக்கு வேகவைத்த காய்கறிகளைக்
குறைந்த அளவு உப்பு சேர்த்து உண்ணலாம்.

சப்பாத்தி, முட்டை கோஸ் சாப்பிடலாம்.
தொடக்கக் காலத்தில் ஒருவேளை உணவைக்
குறைத்துக் கொண்டு நாளொன்றுக்கு இரண்டு
வேளை உணவு மட்டும் உட்கொள்ள
வேண்டும்.

இவ்வாறு பழகப் பழக நீர் உணவுக்கு
ஏற்றாற்போல் உடம்பின் தன்மைகள்
மாறிவிடும். அதன்பிறகு இரண்டு வேளை
உணவிலிருந்து ஒருவேளை உணவு மட்டுமே
உட்கொள்ள வேண்டும். தண்ணீர் குடித்துக்
கொண்டே இருக்க வேண்டும். இவ்வாறு, நீர்
உணவு முறையை மேற்கொண்டு வந்தால்,
அவரவர் உடல் எடையைப் பொறுத்து, அதற்கு
ஏற்றாற்போல் உடல் எடை குறையும். பின்பு
உடல் எடை குறைவது நின்று விடும்.

எவ்வாறென்றால், அவரவர் உடல் எடையில்
எவ்வளவு நச்சுப் பொருள்கள் உள்ளனவோ
அவை வெளியேறும் போது உடல் எடை
குறையும். நச்சுப்பொருள் இன்றி
தூய்மையான உடலைப் பெறுகின்றபோது
எடை குறைவது நின்றுவிடும். எடை
குறைவது நின்றுவிட்டால், உடல்
தூய்மையாகிவிட்டது என்று பொருள்.
தொடர்ந்து நீர் அருந்திக் கொண்டு வந்தால்,
உடல் ஒரே மாதிரியாக இருக்கும். எந்த
மாற்றமும் ஏற்படாமல் நிலையாக இருக்கும்.
உடலிலிருந்து நோய்கள் அனைத்து
நீங்கிவிடும். உப்புச்சத்து உடலிலிருந்து
நீங்கிவிட்டால், கண்பார்வை மேலோங்கிக்
கூர்மையாகும், பற்கள் வளமாகும். வியர்வை
தோன்றாது. துர்நாற்றம் வீசாது. குளிக்க
வேண்டும். பல் துலக்க வேண்டும். மலம்
கழிக்க வேண்டும் என்னும் நிலை ஏற்படாது.

கழிவுகள் உடம்புக்குள் இல்லையென்றான
பின்பு கழிவுகள் வருவது எப்படி? உணவை
எத்தனை வேளை உண்கிறோமோ அதற்குத்
தகுந்தவாறே நன்மைகள் கிடைக்கும். உணவு
உண்பது குறையக்குறைய நன்மைகள்
பெருகும். மூன்று வேளை உணவை உண்பவர்
நோயாளியாக இருப்பர். இரண்டு வேளை
உண்பவர் வாழ்க்கை இன்பத்தை நுகர்ந்து
கொண்டிருப்பர்.

ஒருவேளை உணவை உண்பவர் யோகியாக
இருப்பர் என்பதை நினைவில் கொள்ள
வேண்டும். சரி, நீங்கள் சொன்னபடி நீர்
உணவுமுறையை உண்டு வந்தால்
ஆரோக்கியமான வாழ்க்கை அமையுமா என்று
கேட்கிறீர்களா? ஆம். அதற்கு உதாரணமாக
சிலரின் வாழ்க்கையைப் பற்றிக் குறிப்பிட
வேண்டும்.

ஜைன மதத்தைச் சார்ந்த ஐகஐமுனி
சுவாமிஜிக்கு அப்போது வயது 65. அவர்
1997
ஆம் ஆண்டு மே முதல் நாள் முதல் 1998
ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் நாள் வரை 365
நாள்கள் நீர் உணவை மட்டுமே உண்டு
வாழ்ந்தார். நீர் உணவையும் இரண்டு, மூன்று
வேளை உண்ணாமல், ஒரு வேளை மட்டுமே
அருந்தியிருக்கிறார். மருத்துவர்கள் சோதித்துப்
பார்த்தபோது, அவருக்கு எந்தக் குறைபாடும்
இல்லை என்று கண்டறிந்திருக்கிறார்கள். நீர்
உணவு முறையை சுமார் எட்டு ஆண்டுகள்
ஆய்வு செய்தவர் கோவையைச் சார்ந்த
திரு.எஸ்.வெங்கடேசன் என்பவர். இவர் ஒரு
பொறியாளர். 93 கிலோ எடை கொண்டவர்.

13.7.94
இல் நீர் இவர் முறையைத்
தொடங்கியிருக்கிறார். 4.4.95ல் இவரின் எடை
62
கிலோவாகக் குறைந்திருக்கிறது. சுமார் 9
மாதங்கள், ஒரு வேளை உணவை மட்டும்
உண்டு, மற்ற வேளைகளில் நீர் அருந்திக்
கொண்டு, 25.10.94 முதல் 7.11.94 வரை
இமயமலையிலுள்ள கங்கை உற்பத்தியாகும்
கோமுகம் சென்று வந்துள்ளார்.

அப்பயணத்தின்போது, 18 கிலோமீட்டர் தூரம்,
மலையேற்றப் பயணம் மேற்கொண்டிருக்கிறார்.
நீர் உணவுமுறைக்கு ஆதாரமாக மேலும் ஒரு
தகவல் கிடைக்கிறது. அமெரிக்க நாசா
விஞ்ஞானிகள் நீர் உணவு முறையைப் பற்றி
அறிவியல் முறைப்படி ஆய்வு செய்து
அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள்.

கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சார்ந்த மெக்கானிக்கல் என்ஜினியர், ஹுராரத்தன்
மேனக் (வயது 64) என்பவர், 441 நாட்கள்
உணவு எதுவும் உண்ணாமல் சூரிய ஒளி,
காற்று, நீர் ஆகியவற்றை மட்டுமே உண்டு
சுறுசுறுப்பாக இருந்ததை ஆய்வுத் திட்டம்
பி.ஸி.வி என்று பெயர் சூட்டி ஆய்வு
செய்தார்கள். முதற்கட்ட ஆய்வில், ‘மனிதன்
உயிர் வாழ மிக மிகக் குறைந்த அளவு உணவே
போதும்என்று தங்கள் ஆய்வு முடிவை
அறிவித்திருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் வாழ்ந்திருந்த சித்தர்களும்
முனிவர்களும் மேற்கொண்டு வந்திருந்தநீர்
உணவுமுறை நாகரிக வளர்ச்சியின்
காரணத்தினாலும் மேலை கீழை நாடுகளின்
பழக்க வழக்கங்களின் படையெடுப்பினாலும்
கடைப்பிடிக்கப்படாமல் தடைப்பட்டு
வந்துள்ளது. இதனால், இயற்கையான
வாழ்க்கை முறையிலிருந்து செயற்கையான
வாழ்க்கையில் மோகம் கொண்டு நோய்க்கு
இடமளித்து அல்லல்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.

குடலைக் கழுவி உடலை வளர்க்கும் நீர்
உணவு முறையால் இரைப்பைக்கு ஓய்வு
கிடைக்கிறது. பழைய திசுக்கள்(இழையம்)
மாறி, புதிய திசுக்கள்(இழையம்) வளர்கின்றன.

உணவுக்குழாய் தூய்மையாகிறது. கல்லீரல்
போன்ற செரிமான உறுப்புகள், சிறுநீரகங்கள்,
வியர்வை நாளங்கள் புத்துணர்வு
பெறுகின்றன. நுரையீரலில் தேங்கியிருக்கும்
காபன் போன்ற கழிவுகள் வெளியேறுகின்றன.
உடம்பிலுள்ள உள்ளுறுப்புகள் அனைத்தும்
தன்னைத் தானே அக சுத்தி செய்து
கொள்கின்றன. உடற்பருமன், சர்க்கரை நோய்,
வயிற்றுப்புண், இரைப்பு, இளைப்பு, நாட்பட்ட
தோல் நோய், நரம்பு நோய்கள், பெண்களுக்கு
மாதவிலக்கு தொடர்பான பிரச்னைகளும்
நீங்குகின்றன. உடம்பில் நோய் எதிர்ப்பாற்றல்
மிகுகிறது. அதனால் ஆட்கொல்லி நோய்களான
புற்றுநோய், எய்ட்ஸ் போன்ற நோய்களையும்
இல்லாமல் செய்யும் நிலை ஏற்படுகிறது.
உடலில் சுறுசுறுப்பும் ஆரோக்கியமும்
இளமையும் பொலிவும் வந்தடைகிறது.
பட்டினிச்சாவு தடுக்கப்பகின்றது. நீண்ட நாள்
வாழ வழி கிடைக்கிறது.

3 comments:

  1. சித்தர் புகழ் போற்றுவோம்

    ReplyDelete
  2. நீர் உணவு என்றால் கஞ்சி, கூழ் போன்றவையும் தானே.. விளக்கவும் ஐயா

    ReplyDelete
  3. என்னிடம் வந்து தகவல் செயதியை இங்கே பதிவு செய்து வைத்தேன். என் சொந்த அனுபவம் கிடையாது. ஆனால் அதில் கூறி உள்ளது வெறும் நீர் மட்டுமே

    ReplyDelete