Thursday 31 August 2017

சித்தர்களின் உடல் தன்மை

ஆதி சூன்யத்தில் இருந்த உயிருக்கு ,இறைவன் மனித பிறவி கொடுப்பதன் நோக்கமே,அந்த மனிதன் முழு'விழிப்பு'தன்மை உண்டாகி,இறைவனோடு இரண்டற கலப்பதற்கே .இறைவனோட இரண்டற கலப்பதற்கு ,மனிதனுக்கு என்ன வேண்டும்?சித்தர்கள் காட்டிய வழியில் யோகத்தின்மூலம் பெறப்படுகிற ஒளி உடல் வேண்டும் .உடல் என்பது ஸ்தூலமாகும் .உயிர் என்பது சூட்சுமமாகும் .இந்த உயிரின் தன்மையை,யோகத்தின் மூலம்உடலுக்கு ஏற்ப்படுதினால் கிடைப்பது ஒளி உடல் ஆகும் .இதுவே சித்தர்களின் யோக ரகசியமாகும் .'யோகம் என்பது நம் உடலை கடந்து உயிரின் முழு 'விழிப்பு' தன்மையோடு ,இணைந்து இருப்பதாகும் .இந்தஉயிரின் அதே சூட்சும தன்மையை,நம்முடைய ஸ்தூல உடலுக்கும் ஏற்படுத்தும் போது,உயிரின் தன்மையை உடலும் அடைந்து ,ஒளி உடல் பெறுவதாகும் .'நம்முடைய உயிரின் பல சூட்சும பகுதிகளை,யோகத்தின் மூலம் நாம் இயக்கி,அந்த சூட்சும பகுதிகளோடு தொடர்பு கொள்ளும் போது இப்பிறவி என்பது, நமக்கு முதலில் கொடுக்கப்பட்ட பிறவி இல்லை என்பதுவும்,பல பிறவிகள் கடந்து வந்த நிலையையும்,அந்தபலப்பிறவிகளின் காரண காரிய கர்மவினைகளின்படியே நம்முடைய ஒவ்வொரு பிறவியின் அனுபவமும் இருக்கின்றது என்கிற உண்மையை உணரும் போது ,உயிர் தன்னுடைய இயல்பு தன்மையான 'விழிப்பு 'தன்மையைஅடைய துவங்குகிறது .
2016/04/05, 10:18 AM - தி. இரா. சந்தானம்: பிறவாமல் இருக்க வேண்டுமென்றால்,நாம் முதலில் இறவாமல் இருக்க வேண்டும்.அப்பொழுது தான் பிறவி என்னும் நிலை நமக்கு ஏற்படாது.இந்த நியதிக்கு மாறாக,உடலளவில் மரணத்தை அடைந்தவர்கள்,யாரும்'சித்தர்கள்'என்று குறிப்பிட முடியாதவர்கள் ஆகிறார்கள்.சித்
தர்கள் இன்றும் கூட இறப்பின் தொடர்புக்கே செல்லாமல்,இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.சித்தர்களும் நம்மை போலவே சரசரியான உடலோடு இவ்வுலகில் பிறந்தவர்களே.''அவர்களுக்கு ஏற்பட்ட உண்மை ஞானியரின் தொடர்பு,அவர்களைமெல்ல மெல்ல மரணமிலா நிலை வரை கொண்டு சென்று இருக்கிறது''சித்தர்களின் உடல் மிக உயர்ந்த ஒளியின் தன்மைக்கு ஏற்றவகையில் 'யோகத்தின்' மூலம் மாற்றப்பட்டுஇரு
க்கிறது.அவர்களின் உடல் ஒளி ஊடுருவும் தன்மையில் இருப்பதால்,ஒளி அவர்களின் உடலில் உள்ளே சென்று வெளியே போய் விடும்.''சுத்த சத்துவ உடல்''என்னும் நிலை,ஒளி ஊடுருவும் தன்மைக்கு மாற்றப்பட்டு இருக்கும்.இதன் காரணமாகவே சித்தர்களின்,உடல் நம்முடைய பார்வைக்கு தெரியாமல் மறைந்து இருக்கிறது.ஆனால் எந்தவிதமான குறைவும் அடையாமல்,நம்முட


ைய அருகிலேயே இருந்து வருபவர்கள் சித்தர்கள்.ஏன் ஒளி ஊடுருவும் தன்மைக்கு உடலை,மாற்றி அமைக்கிறார்கள் சித்தர்கள்

No comments:

Post a Comment