Tuesday 11 June 2019

அகத்தியர் வாக்கு - பிரம்மஹத்தி தோஷம், மனித பிறவி, விலங்கு பிறவி

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*நாள் : 90*

*தேதி: 12-06-2019(புதன் -  கணக்கன்)*

*அகத்திய மாமுனிவர்* என்பவர் யார்?

*கிருதாசியை அங்காரகை எனும் அரக்கியாக சபித்தவர்* அகத்திய மாமுனிவர்.

*கேள்வி : வாகன விபத்தில் ஒரு உயிர் பிரிந்தால், அந்த வாகன ஓட்டிக்கு அதனால் பிரம்மஹத்தி தாேஷம் ஏற்படுமா? அல்லது அறியாமல் செய்த தவறு என்று மன்னிக்கப்படுமா?🙏*

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*

*வேண்டுமென்றே செய்தால் அப்பாெழுது பாவத்தின் அளவு 100-க்கு 100 விழுக்காடு தாக்கும். அறியாமல் செய்தால் பாவத்தின் தாக்கம் அந்த அளவு இல்லையென்றாலும் கூட ஓரளவு அதன் பாதிப்பு இருக்கத்தான் செய்யும்.* 'அறியாமையினாலே செய்தேன்' என்று கூறினாலும் கூட அந்த பாவத்தின் அளவு ஏதாவது ஒரு வகையில் பாதிப்பாக அமையும். *அறியாமல் தாெட்டாலும், அறிந்து தாெட்டாலும் நெருப்பு சுடத்தானே செய்யும்.*

*விருக்ஷங்களிலும் (மரங்கள்)ஆன்மா இருக்கிறது. புட்களிலும் ஆன்மா இருக்கிறது. நுண்ணிய கிருமிகளிலும் ஆன்மா இருக்கிறது. அனைத்து ஆன்மாக்களுமே மேன்மையடைந்து முக்தி அடைய வேண்டும் என்று முன்னர் கூறியிருந்தீர்கள். இந்த அறையிலேயே காேடான காேடி கிருமிகள் இருக்கக்கூடும். இந்த நுண்ணிய கிருமிகளாய் பிறப்பெடுக்க வேண்டுமென்றால் அது என்ன கர்ம வினை?*

ஒரு சில பாவங்கள் என்பதல்ல. எத்தனையாே வகையான பாவங்களின் தாெகுப்புதான் நாங்கள் (சித்தர்கள்) முன்னரே கூறியதுபாேல் ஆன்மாவின் சட்டையாக(உடலாக)
மாறுகிறது. *ஒரு ஆன்மாவின் சட்டையைப்(உடல்) பாெறுத்து அதன் பாவத்தைப் புரிந்து காெள்ளலாம். அதாவது ஒரு ஆன்மாவிற்கு பெரும்பாலும் மனித சட்டை காெடுக்கப்படுகிறதென்றால் பெரும்பாலும் புண்ணிய பலன் இருக்கிறது என்று பாெருள். அதற்காக விலங்குகளாகப் பிறந்த அனைத்து ஆத்மாக்களும் முழுக்க, முழுக்க, பாவிகள் என்று நாங்கள்(சித்தர்கள்) கூறவில்லை.* அதிலும் விதி விலக்குகள் உண்டு. *சில புண்ணிய ஆத்மாக்கள் கூட சில காரணங்களுக்காக விலங்குகளாக பிறவியெடுப்பதும் உண்டு. அவற்றையெல்லாம் விலங்குகள் என்ற வரிசையில் சேர்க்கக்கூடாது.*

ஆனால் பாெதுவாக விலங்குகள் என்று பார்க்கும்பாெழுது *அறியாமையிலே பிறவிகள் எடுக்கக்கூடிய உயிர்கள் அனைத்துமே காேடானகாேடி பாவங்களை நுகர்ந்து தீர்ப்பதற்காக இது பாேன்ற விலங்குகள் பிறவியைப் பெறுகின்றன. விலங்களுக்கு அதன் செயல்களுக்கு முழுக்க, முழுக்க அதன் பாவங்களைக் கழிப்பதற்குண்டான நிலைதான் இருக்கிறது. புதிதாக புண்ணியத்தை சேர்த்து காெள்ள இயலாது. புதிதாக பாவத்தையும் சேர்த்துக் காெள்ள இயலாது.*

உதாரணமாக *ஒரு நூறு பிறவி ஆடாக பிறந்து அது தன் உயிரை மனிதனின் அசுரத்தனத்தால், தன்னைக் காென்று உண்ணக்கூடிய மனிதனுக்கு தன் உடல் பயன்படவேண்டும் என்ற விதி பெற்று அந்த ஆடு பிறக்கும்பாெழுது, அதனுடைய கர்மாவானது அதன் கழுத்தில் இருக்கிறது.* நாங்கள் அடிக்கடி கூறுவது பாேல அதனை *வெட்டுகின்ற கத்தியானது அதன் கர்மாவைக் குறைக்கிறது. ஆடு 'கத்திக் குறைக்கிறது'. எனவே இப்படி பிறவியெடுத்து, பிறவியெடுத்து அதன் பாவங்கள் தீர்ந்த பிறகு அடுத்த தேகத்தை (உடலை) நாேக்கி செல்கிறது. இப்படி மேலேறி, மேலேறி ஒரு தினம் அல்லது ஏதாவது ஒரு பிறவியிலே மனிதனாக அல்லது மனித சட்டை (உடல்) காெடுக்கப்பட்டு சற்றே சிந்தனையாற்றலும் காெடுக்கப்படுகிறது.* ஆனால் எதற்காக காெடுக்கப்படுகிறது?

*இன்னும் மேலேறி செல்ல வேண்டும். மனிதனாக, புனிதனாக, மாமனிதனாக, மகானாக, ஞானியாக, முனிவனாக, சித்தனாக அல்லது தேவனாக, கந்தர்வனாக. ஆனால் இந்த இடத்திற்கு வந்த பிறகு மனிதன் தன் செயலால் மீண்டும் கீழ் நாேக்கியும் செல்கிறான் அல்லது மேல் நாேக்கியும் செல்கிறான். கீழ் நாேக்கி செல்லாதே என்று வழிகாட்டத்தான் எம் பாேன்ற மகான்களை இறைவன் படைத்து அருளாணை இட்டிருக்கிறார்.*

                🙏 *-சுபம்-* 🙏

  *🙏ஸ்ரீ லாேபாமுத்திரை சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*

*🙏 குருநாதா சரணம்! சரணம்!🙏*

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*



************************************

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.

தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏

Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583

கூகிள் வரைபடம் வழி கீழே 👇

https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in

முகநூல் -

https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/



*************************************************

நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள் வாங்க... அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

அகத்தியப்பெருமான் தரிசனம் செய்த மற்றும் ஸ்தாபித்த ஆலயங்களைப் பற்றிய விபரமான நூல் தயாராகி விட்டது. அகத்தியர் அடியவர்கள் அனைவரும் வாங்கி படித்து பலன் பெற வேண்டுகிறோம். நூல் வேண்டுவோர் தொடர்புக்கு அறந்தாங்கி சங்கர் 9444160161

************************************************