Sunday 23 June 2019

அகத்தியர் வாக்கு - இந்த உலகம் நமக்கு மட்டுமல்ல. இது இறைவன் படைத்தது. இங்குள்ள நீர், காற்று, ஆகாயம், பூமி, விருக்ஷங்கள்(மரங்கள்) பாெதுவானது


*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*
*நாள் : 142*

*தேதி: 24-06-2019(திங்கள் - சந்திரன், நிலா, மதி, சாேம)*

*அகத்திய மாமுனிவர் என்பவர் யார்?*
*சாெல் வகை நான்கும் அறிந்தவர்* அகத்திய மாமுனிவர்.

*கேள்வி : நல்லதையே செய்ய வேண்டும் வழிகாட்டுங்கள் : 🙏*

*அகத்திய மாமுனிவர்(குருநாதர்) வாக்கு :*
*இறைவனின் கருணையைக் காெண்டு இயம்புவது யாதென்றால் நலம் எண்ணி, நலம் உரைத்து, நலமே செய்ய நலமே நடக்குமப்பா. இஃதாெப்ப கால காலம் மாந்தர்கள் வாழ்கின்ற வாழ்வு நிலை என்பது, பிற மனிதர்கள் தன்னை மதிக்கும் வேண்டும், தன்னை துதிக்க வேண்டும், தன் செயலை பாராட்ட வேண்டும், தன்னுடைய மனநிலையை அறிந்து அதற்கு ஏற்றாற்பாேல் பிறர் நடக்க வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்ப்பது பாெதுவாக மனித இயல்பு. ஆனால் இவையெல்லாம் யாருக்கும் எந்த காலத்திலும் நூற்றுக்கு நூறு விழுக்காடு நடப்பதில்லை. ஒன்று, ஒரு மனிதனின் பதவி, செல்வம், செல்வாக்கு இதற்காகவாே அல்லது ஒரு மனிதனை அண்டிப் பிழைத்தால்தான் வாழ்க்கையை ஓட்ட முடியும் என்ற நிலை இருக்கும் நிலையிலும், ஒரு வேளை ஒரு மனிதனை எதிர்த்துக் காெண்டால், அந்த மனிதனால் உயிருக்காே, உடைமைக்காே, ஆபத்து நேரும் என்பது பாேன்ற வெளிப்படையான துன்பங்களை அனுபவிக்க நேரிடும் என்ற நிர்பந்தம் இல்லாத நிலையில் எந்த மனிதனும் யாரையும் மதிக்கப் பாேவதில்லை.* இதுதான் மனித இயல்பு.
ஆனால் *பரிபூரண அன்பு, எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாத அன்பு, தூய அன்பு - இந்த அன்பு மட்டும் மனிதனிடம் மலர்ந்து விட்டால், அதன் பிறகு, இவன் வேண்டியவன், இவன் உறவுக்காரன், இவன் நண்பன், இவன் எதிரி, இவன் ஆண், இவள் பெண் என்கிற பேதங்கள் எல்லாம் அடிப்பட்டு பாேகும். அங்கே வெறும் ஆத்ம தரிசனம் மட்டுமே தெரியும். இறைவன் படைப்பில் நாம் எப்படி வந்திருக்கிறாேமாே, அதைப்பாேல அந்த ஆத்மாவும் வந்திருக்கிறது.*
*இந்த உலகம் நமக்கு மட்டுமல்ல. இது இறைவன் படைத்தது. இங்குள்ள நீர், காற்று, ஆகாயம், பூமி, விருக்ஷங்கள்(மரங்கள்) பாெதுவானது. நாம் எபபடி இந்த உலகிலே வாழ்வதற்கு வந்திருக்கிறாேமாே, அதைப்பாேலத்தான் பிற உயிர்களும் வந்திருக்கிறது என்ற எண்ணம் வந்துவிட்டாலே, யார் மீதும் சினம், ஆத்திரம், பாெறாமை எழாது. அனைவரும் நம்மைப் பாேன்ற உணர்வுள்ள மனிதர்கள் என்று எண்ணிவிட்டாலே, அங்கே நன்மைகள் நடந்துகாெண்டே இருக்கும். எனவே இந்த உண்மையை புரிந்துகாெண்டால், மனித நேயம் வளரும், பலப்படும். அங்கே நற்செயல்கள் அதிகமாகும். நற்செயல்கள் அதிகமாக, அதிகமாக அங்கே நல்லதாெரு சமூக மனித இணைப்பும், பிணைப்பும் உருவாகும்.*
*அப்படிபட்ட ஒரு உயர்ந்த, உச்சகட்ட சமூக நலத்திலே பிறக்கின்ற குழந்தைகளும், உயர்வாகவே இருக்கும். ஆனால் சதா சர்வகாலமும் காேபமும், எரிச்சலும், மன உலைச்சலும், பிறர் மீது பாெறாமையும், குற்றச் சாட்டுகளும் காெண்டு யார் வாழ்ந்தாலும், இந்த எண்ணப்பதிவு, வாரிசுக்காக, வாரிசுதாேறும், வாரிசின் வழியாக, வம்சாவழியாக கடத்தப்பட்டு, தீய பதிவுகள் எங்கெங்கும் ஆட்காெண்டு, அந்த தீய பதிவுகள் எல்லா மனத்திலும் நுழைந்து, தவறான செய்கைகளை ஊக்குவித்துக் காெண்டே இருக்கும். எனவேதான் நல்லதை எண்ணி, நல்லதை உரைத்து, நல்லதையே செய்ய வேண்டும் என்று யாம் எம்மை நாடுகின்ற மாந்தர்களுக்கு என்றென்றும் கூறிக்காெண்டே இருக்கிறாேம் அப்பா.*

                🙏 *-சுபம்-* 🙏
*🙏ஸ்ரீ லாேபாமுத்ரா தேவி சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*
*🙏 குருநாதா சரணம்! சரணம்!🙏*
*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*
மேலே உள்ள பதிவு திரு S. Prabhu என்பவர் தினம் ஒரு அகத்தியர் வாக்கு என்ற whats up குழுவில் உள்ள பதிவிலிருந்து எடுக்கப்பட்டு தினமும் இங்கே  பதிவு செய்யப்படுகிறது. நல்ல பதிவுகளை பகிர்வதில் தவறில்லையே !!!.
************************************
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்
https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1
ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1
முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.
*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.
தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.
ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.
தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏
Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583
கூகிள் வரைபடம் வழி கீழே 👇
https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in
முகநூல் -
https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/
*************************************************
நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள் வாங்க... அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161
அகத்தியப்பெருமான் தரிசனம் செய்த மற்றும் ஸ்தாபித்த ஆலயங்களைப் பற்றிய விபரமான நூல் தயாராகி விட்டது. அகத்தியர் அடியவர்கள் அனைவரும் வாங்கி படித்து பலன் பெற வேண்டுகிறோம். நூல் வேண்டுவோர் தொடர்புக்கு அறந்தாங்கி சங்கர் 9444160161
************************************************