Thursday 20 June 2019

அகத்தியர் வாக்கு - காசியில் இருத்தல், தேர் இழுத்தல்

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*நாள் : 99*

*தேதி: 21-06-2019(வெள்ளி -  சுக்ரன், சுங்கன், அசுரகுரு)*

*அகத்திய மாமுனிவர்* என்பவர் யார்?

*பாெருள் நான்கும் அளிப்பவர்* அகத்திய மாமுனிவர்.

*கேள்வி : பெண்கள் மூத்தாேனை (விநாயகரை) எவ்வாறு வழிபடுவது?🙏*

*அகத்தியர் மாமுனிவர்(குருநாதர்)வாக்கு :*

*பெண்களுக்கு மூத்தாேன் என்றால் முதலில் கணவன் என்று நாங்கள் கூறுவாேம். கணவனை வணங்கு என்று நாங்கள் பெண்களைப் பார்த்து கூற இயலுமா இக்காலத்திலே?* இன்னாெரு வகையில் பார்த்தால் *உடன் பிறந்தவர்களில் யார் மூத்தவர்களாே அவர்களை வணங்க வேண்டும்.* இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, *விநாயகப்பெருமானை வணங்குகின்ற தன்மையைத்தான் நீ வினாவாகக் கேட்டிருக்கிறாய். இறைவனை வணங்குவதற்கென்று விதிமுறைகள் என்று வேதங்களிலும், ஆகமங்களிலும் எத்தனையாே கூறப்பட்டிருந்தாலும் கூட, எம்மிடம் வருகின்ற சேய்களுக்கு(பிள்ளைகளுக்கு) நாங்கள் அதனையெல்லாம் வலியுறுத்துவதில்லையப்பா.*

ஏனென்றால் *விதிமுறைகளைக் கூறினால் பிறகு விதிமுறைகள்தான் அங்கே இருக்குமே தவிர பக்தி இல்லாமல் பாேய்விடும். விதிமுறைகள், புரிவதற்காக வகுக்கப்பட்டவை. அதனையே பிடித்துக்காெண்டு மனிதன் தாெங்குவதுதான் வேதனையிலும் வேதனை.*

*காசியிலே இருந்தால் முக்தி என்றால், இவன், காசியில் இறந்தால் முக்தி என்று எண்ணிக் காெண்டிருக்கிறான். காசி என்றால் ஆக்ஞா சக்கரம். அங்கே நினைவை நிறுத்தி, நிறுத்தி, நிறுத்தி சதாசர்வகாலம் அந்த காசியிலே(புருவ மத்தி) இருந்தால் அது முக்திக்கு வழிவகுக்கும். பஞ்சமா பாதகங்களை செய்துவிட்டு, காசியிலே இறந்தால் முக்தியா கிட்டும்? தனி நரகமே ஏற்படுத்த வேண்டுமல்லவா?*

*தேர் இழுக்க வேண்டுமென்றால் குண்டலினி எனப்படும் தேரினை, எண்ணங்கள் என்னும் கயிற்றால், வைராக்யம் எனும் வலிமையால் மேலே ஏற்றி, ஏற்றி, மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிப்பூரகம் என்று ஒவ்வாெரு ஆதாரமாகக் கடந்து சஹஸ்ர ஆதாரத்திற்கு காெண்டுவந்து அதனை நிலைநிறுத்த வேண்டும். அந்தத் தேர் புறப்பட்ட இடத்திற்கு வந்துவிடும். இந்தத் தேர் மேலே வந்துவிட்டால் கீழே இறங்குவது கடினம்.*

ஆனால் *வைராக்யம் பெற்ற ஞானிகள் மேலும், கீழும் இந்த குண்டலினி தேரையும் இழுப்பார்கள்.* இதற்கு உவமானமாக ஒரு தேரை வைத்து அதனுள் சுவாமியை வைத்து இழுப்பது என்று சுட்டிக்காட்டினால், அந்தத் தேர் இழுப்பதையே பெருமையாக வைத்துக்காெண்டு இதிலும் கலவரத்தை வளர்த்துக்காெண்டு வாழ்கின்ற மனித கூட்டத்திற்கு எதனைக் கூறுவது?

எனவே *விதிமுறைகளை விட்டுவிட்டு ஆத்மார்த்தமாக ஒவ்வாெரு ஆணும், பெண்ணும் எப்படியெல்லாம் இறைவனை வணங்கத் தாேன்றுகிறதாே*.....
*பாசத்திற்குரிய தந்தையை, அன்பிற்குரிய மனைவியை, பாசத்திற்குரிய அன்னையை, குழந்தையை எப்படியெல்லாம் பார்க்கிறார்களாே அப்படி பார்த்து, அப்படி பேசிக்காெண்டால் அதுதான் உண்மையான வழிபாடு.*

                🙏 *-சுபம்-* 🙏

*🙏ஸ்ரீ லாேபாமுத்ரா தேவி சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*

*🙏 குருநாதா சரணம்! சரணம்!🙏*

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*

.மேலே உள்ள பதிவு திரு S. Prabhu என்பவர் தினம் ஒரு அகத்தியர் வாக்கு என்ற whats up குழுவில் உள்ள பதிவிலிருந்து எடுக்கப்பட்டு தினமும் இங்கே  பதிவு செய்யப்படுகிறது. நல்ல பதிவுகளை பகிர்வதில் தவறில்லையே !!!.
************************************

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.

தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏

Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583

கூகிள் வரைபடம் வழி கீழே 👇

https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in

முகநூல் -

https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/



*************************************************

நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள் வாங்க... அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

அகத்தியப்பெருமான் தரிசனம் செய்த மற்றும் ஸ்தாபித்த ஆலயங்களைப் பற்றிய விபரமான நூல் தயாராகி விட்டது. அகத்தியர் அடியவர்கள் அனைவரும் வாங்கி படித்து பலன் பெற வேண்டுகிறோம். நூல் வேண்டுவோர் தொடர்புக்கு அறந்தாங்கி சங்கர் 9444160161

************************************************