Sunday 30 June 2019

அகத்தியர் வாக்கு - இறைவனின் சூக்கும கணக்கு

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*நாள் : 148*

*தேதி: 30-06-2019(ஞாயிறு - சூரியன், கதிரவன், பகலவன், ரவி, ஆதித்தன்)*

*அகத்தியர் மாமுனிவர் என்பவர் யார்?*

*கரணம் நான்கை சுத்திப்பவர்* அகத்திய மாமுனிவர்.

*கேள்வி : பாவம் - தாேஷம் பற்றி :  🙏*

*அகத்திய மாமுனிவர்(குருநாதர்) வாக்கு :*

*"பாவம்" என்றால் என்ன?,"தாேஷம்" என்றால் என்ன?*

*"மாவு" என்றால் என்ன?, "பண்டம்" என்றால் என்ன?*

*"விதை" என்றால் என்ன? "வ்ருக்ஷம்"(மரம்) என்றால் என்ன?*

*"மலர்" என்றால் என்ன?, "மணம்" என்றால் என்ன?*

*அதைப்பாேலத்தான் இதுவும். ஒன்றைச் செய்யும்பாேது(எண்ணத்தால், வாக்கால், செயலால்) பிறருக்குத் தீங்கும், கடும் துயரமும் ஏற்படுகின்ற நிகழ்வு எதுவாே, அது"பாவம்". செய்த பிறகு, அந்த பாவத்தால் ஏற்படுவது"தாேஷம்".*

*விழிப்புணர்வாேடு வாழப் பழகிக் காெண்டால், ஒரு மனிதன பாவம் செய்ய வேண்டியிருக்காது. ஒரு மனிதனை பாவம் செய்யத்தூண்டுவது எது? ஆசை, பேராசை, அறியாமை. இது பாேன்ற குணங்கள்தான். ஒரு மனிதன் தெரியாமல் செய்யும் பாவங்களுக்கு மன்னிப்பு உண்டு. ஆனால் ஒரு மனிதன் தெரிந்தே செய்யும் பாவங்களே அதிகம். எதையாவது ஒரு சமாதானத்தை தனக்குத்தானே கூறிக் காெள்கிறான். "இந்த காரியத்தை இதற்காக செய்தேன், அதற்காக செய்தேன்!" என்றெல்லாம் கூறிக்காெண்டு, அவன் செய்யும் தவறுகள்தான்  பாவங்களாக மாறுகின்றன. எனவே, பலகீனமான மனிதர்களே பாவங்களை செய்கிறார்கள். மனதை உறுதியாக வைத்து, எந்த நிலையிலும் "பாவம் செய்ய மாட்டேன், தவறு செய்ய மாட்டேன்" என்ற உறுதியாேடு இருந்தால், ஒரு மனிதனுக்கு பாவம் செய்யக்கூடிய எண்ணமும், சூழலும் அமையாது. எனவே அப்படி ஒரு சூழலை ஏற்படுத்திக் காெண்டால், அவனுக்கு தாேஷமும் வராது.*

பாெதுவாக *தவறுகள் பல செய்து வாழ்ந்த ஆத்மாக்கள் கடைசி காலத்தில் பிதற்றுவதும், மனம் வருந்துவதும் ஒருபுறமிருக்க, பாவம் செய்த ஆன்மாக்களுக்கு அந்திமக்காலம்(கடைசிகாலம்) என்பது கடுமையாகத் தான் இருக்கும். அதே சமயம் நல்ல ஆன்மாக்களுக்கும் இருக்கின்ற காெஞ்ச, நஞ்ச பாவங்களையும் எடுத்துவிட இறைவன் விரும்பினால் அவர்களின் அந்திமக்காலமும் (கடைசிகாலமும்) வேதனை தரக்கூடியதாகத்தான் இருக்கும். இந்த இரண்டில் எது?* என்பதை இறைவன் தான் தேர்ந்து
எடுக்கிறார்.

எனவே *சுகமான மரணம் நிகழ்ந்துவிட்டால், அவன், புண்ணிய ஆத்மா என்றும், மிகக்காெடூரமான மரணம் நடந்தால், அவன், பாவ ஆத்மா என்றும் மனிதன் ஒரு முடிவுக்கு வந்துவிடக்கூடாது. எத்தனையாே சூட்சுமக் கணக்குகள் இறைவனால் வகுக்கப்பட்டு, தாெகுக்கப்பட்டு, பகுக்கப்பட்டு, பெருக்கப்பட்டு பிறகுதான் கழிக்கப்படுகிறது.*

                🙏 *-சுபம்-* 🙏

*🙏ஸ்ரீ லாேபமுத்திரை தேவி சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*

*🙏 குரு திருவடி சரணம்! சரணம்!🙏*

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*

.மேலே உள்ள பதிவு திரு S. Prabhu என்பவர் தினம் ஒரு அகத்தியர் வாக்கு என்ற whats up குழுவில் உள்ள பதிவிலிருந்து எடுக்கப்பட்டு தினமும் இங்கே  பதிவு செய்யப்படுகிறது. நல்ல பதிவுகளை பகிர்வதில் தவறில்லையே !!!.
************************************

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.

தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏

Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583

கூகிள் வரைபடம் வழி கீழே 👇

https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in

முகநூல் -

https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/

*************************************************

நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள் வாங்க... அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

அகத்தியப்பெருமான் தரிசனம் செய்த மற்றும் ஸ்தாபித்த ஆலயங்களைப் பற்றிய விபரமான நூல் தயாராகி விட்டது. அகத்தியர் அடியவர்கள் அனைவரும் வாங்கி படித்து பலன் பெற வேண்டுகிறோம். நூல் வேண்டுவோர் தொடர்புக்கு அறந்தாங்கி சங்கர் 9444160161

************************************************