Friday 28 June 2019

அபிராம பட்டர் அருளிய - இனிப்பிற‌வாநெறி அடைய‌, அம்பிகையை நேரில் காண, சிற‌ந்த‌ ந‌ன்செய் நில‌ங்க‌ள் கிடைக்க‌

இனிப்பிறவாநெறி அடைய

கொடியேஇளவஞ்சிக் கொம்பேஎனக்கு வம்பே பழுத்த
படியே மறையின் பரிமளமேபனி மால் இமயப்
பிடியேபிரமன் முதலாய தேவரைப் பெற்ற அம்மே.
அடியேன் இறந்து இங்கு இனிப் பிறவாமல் வந்து ஆண்டு கொள்ளே.

அம்பிகையை நேரில் காண

நாயகிநான்முகிநாராயணிகை நளின பஞ்ச
சாயகிசாம்பவிசங்கரிசாமளைசாதி நச்சு
வாய் அகி மாலினிவாராகிசூலினிமாதங்கி என்று
ஆய கியாதியுடையாள் சரணம்-அரண் நமக்கே.

சிறந்தன்செய் நிலங்கள் கிடைக்க

வந்தே சரணம் புகும் அடியாருக்குவானுலகம்
தந்தே பரிவொடு தான் போய் இருக்கும்--சதுர்முகமும்,
பைந் தேன் அலங்கல் பரு மணி ஆகமும்பாகமும்பொற்

செந் தேன் மலரும்அலர் கதிர் ஞாயிறும்திங்களுமே.