Tuesday 31 October 2017

ஞானஸ்கந்தர் ஜீவ நாடி பதிவு

சித்தர்கள் ஜீவ நாடி இரகசியங்கள் பகுதி-41


ஸ்ரீஞானஸ்கந்தர் ஜீவ நாடியில் வருகின்ற வாக்குகள் 100% மிகத்துல்லியமாக இருகின்றது. ஒருவர் வந்து நாடி கேட்க அமர்ந்த உடனேயே அவர்களுக்கு மிகச் சிறப்பான முறையில் பாடல் வடிவில் முருகப்பெருமான் ஜீவ நாடியில் தோன்றி வாக்குரைக்கின்றார். அதேபோல் ஜீவ நாடி கேட்டு அதில்  வருகின்ற ஆலய வழிபாடுகளை மேற்கொண்ட உடனே பல மாறுதல்கள் வருவதாக பலர் ஆச்சரியத்துடன் வந்து கூறுகின்ற போது முருகப்பெருமானின் கருணையை எண்ணி ஆனந்திக்கும் நிலை ஏற்படுகின்றது. ஒரு அர்ச்சகர் வந்து ஜீவ நாடி கேட்க அமர்ந்தார். அவருக்கு மிகச்சிறப்பான பலன்களை உரைத்து வந்த முருகப்பெருமான் தீடீரென ஒரு சூட்சுமத்தை உரைத்தார். அப்போது ஜீவ நாடியில் ஒரு ஆனியில் ஒரு ஜப மாலை தொங்கும்  காட்சி வந்தது. உடனே ஜபம் செய்ய வேண்டிய இந்த ருத்திராட்ச மாலையை இப்படி ஆனியில் மாட்டி வைத்து இருக்கின்றாய். அதுமட்டுமில்லாமல் தினசரி ஜபம் செய்வது கிடையாது. ஜப மாலையை யார் கண்ணிலும் படாமல் வைத்திருக்க வேண்டும். இப்படி அனைவர் கண்ணிலும் படும் படியும் அதுவும் இரும்பு ஆனியில் மாட்டி வைத்திருப்பது மிகவும் குற்றமாகும். அது ஐந்து முக ருத்திராட்சம் 54 மணி கொண்ட மாலை சரியா என்றார் முருகப்பெருமான் வந்தவர் தேம்பி அழுது கொண்டிருந்தார். தொடர்ந்து உரைத்தார் முருகப்பெருமான்… பொதுவாக ஒரு குரு தனது சீடனைத்தினந்தோரும் ஒரு குறிப்பிட்டஎண்ணிக்கைக்கு மந்திரத்தை ஜபம்செய்யும்படி உபதேசிக்கிறார். ஜபத்தைஎண்ணிக் கணக்கிடுவதை விரல்களின்மூலமாகச் செய்யலாம்: அல்லது ஒரு ஜபமாலையைக் கொண்டு செய்யலாம்: அல்லதுமனதிற்குள்ளேயே செய்யலாம். ஜபமாலைசாதகனின் மனதை ஒரு முகப்படுத்துவதற்குஉதவி செய்கிறது. ருத்ராக்ஷம், சந்தனம்,இலந்தை தாமரைக்கிழங்கு, ஸ்படிகம், பவழம்,தாமரை மணி, துளசிமாலை போன்றவற்றால்ஆன பலவித ஜப மாலைகள் இருக்கின்றன.ஒரு சிலர் மனித அல்லது விலங்குகளின்எழும்புகளான ஜபமாலைகளையும்உபயோகிக்கிறார்கள். அமானுஷ்ய சக்திவிரும்புகிறவர்களுக்கு மனித அல்லதுவிலங்குகளின் எழும்புகளைஉபயோகிப்பார்கள். ஜபிக்கும் மந்திரத்தைப்பொருத்தே உபயோகிக்கும் ஜபமாலையும்அமைகிறது. ஜபமாலை 108, அல்லது 54மணிகளைக் கொண்டதாகும். ஒருவர்உபயோகிக்கும் ஜபமாலையை அவரைத்தவிர வேறு எவரும் உபயோகிக்க கூடாது.மேலும் சாதகன் ஒரு குறிப்பிட்டமந்திரத்தையே ஒரு மாலையின் மூலம்ஜபிக்க வேண்டும். ஒரே மாலையில் மூலம்வெவ்வேறு மந்திரங்களை ஜபிக்க கூடாது.

ஒரு மந்திரத்தை ஒருவன் ஒரு லட்சம் முறைஜபித்தால் அந்த மந்திரம் சேதனமாகஉயிருள்ளதாக ஆகிவிடுகிறது. ஜபம் செய்தமந்திரத்தை 10ல் ஒரு பங்கு யாகமாகவும்,அர்க்யமாகவும் செய்ய அந்த குறிப்பிட்டமந்திரம் முழு பலத்தை பெற்று விடும். நல்லஊக்கத்தோடு ஒருவன் ஒரு மந்திரத்தைசரியான உச்சரிப்பில் ஒரு முறை ஜபித்தாலும்அவனது மனம் தூய்மையடைந்துவிடுகிறதுஎன்று ஜப விதானம் என்ற நூல் கூறுகிறது.இறைவனைப் பற்றி நினைக்கவிரும்பாதவர்கள் இருக்கும் இடங்கள், எங்குபுனிதமான மனிதர்கள்கௌரவிக்கப்படுவதில்லையோ, எந்தஇடத்தில் மனிதர்கள் ஈகையிலும் எளியவாழ்க்கையிலும் விருப்பமில்லாதவர்களாகஇருக்கிறார்களோ, அந்த இடங்கள் ஜபம்பழகுவதற்கு ஏற்றவையல்ல. மாறாக, அவைபிரதிகூலமான பலனை தருபவை.தினந்தோரும் நாம் குறிப்பிட்டநேரங்களிலேயே ஜபம் செய்ய வேண்டும்.அப்படி செய்து வந்தோமானால் நம்மனதிலும் அந்த நேரங்களில் ஜபம்செய்வதற்குரிய தகுந்த மாற்றங்களும்ஏற்படுகின்றன. நமது மனதுக்கும்,உடலுக்குமிடையே ஒரு சரியான நல்லஇணைப்பு ஏற்படுகிறது. அது எதுபோன்றதென்றால், நாம் தினந்தோரும் ஒருகுறிப்பிட்ட நேரத்திலேயே உணவுஉட்கொள்ளுகிறோமென்றால், அந்த நேரம்வந்தவுடன் நமக்குப் பசியும் தானாகவேதோன்றுகிறதல்லவா?

ஒரு குறிப்பிட்டநேரத்தில் நாம் தூங்கச்செல்கிறோமென்றால், அந்த நேரம்வந்தவுடன் நமக்குத் தூக்கமும்வந்துவிடுகிறதல்லவா? அது போன்றுதான்நாம் குறிப்பிட்ட நேரங்களில் ஜபம்செய்வதென்பதுமாகும். அந்த நேரம்வந்தவுடன் நமது மனமும் ஜபம் செய்யநம்மைத் தூண்டும். இவ்விதம் குறிப்பிட்டநேரங்களில் தவறாமல் ஜபம் பழகுவதால்நமது மனதின் ஆற்றல்கள் வளர்ந்துவலுப்பெற்று  நாம் நல்ல ஆன்மீகமுன்னேற்றமும் காண முடிகிறது.விடியற்காலை, நண்பகல், மாலைசந்தியாகாலம், நடு இரவு ஆகியவை ஜபம்செய்வதற்குரிய மிகவும் விசேஷமானகாலங்கள். இவற்றைத் தவிர பௌர்ணமி,அமாவாசை, அஷ்டமி, ஏகாதசி திதிகளோடுகூடிய நாட்கள், மற்ற விஷேச பூஜைதினங்கள் மற்றும் கிரஹண காலங்கள்,ஆகியவை ஜபம் செய்வதற்கு மிகவும்சிறந்தவையாகும். உச்சரிப்பு புனிதமந்திரமானது தெளிவாக உச்சரிக்கப்படவேண்டும். ஒரு எழுத்து மாறினாலும் அல்லதுத்வனியில் சத்தம் ஏற்றம்,குறைவுஇருந்தாலும் பிரதினுகூலம் எதிர்மறைபலன்கள் தந்துவிடும். நாம் ஜபம்செய்யும்போது நமது உடல், மனம், ஆன்மா,நினைவு முழுவதும் ஆகிய மூன்றும்ஒருங்கிணைந்தே செயல்பட வேண்டும்.பெரும்பாலும் நமது வாய் மந்திரத்தை ஜபம்செய்கிறது. ஆனால் நமது மனமோ அதில்ஈடுபாடில்லாமல் தனித்து நிற்கிறது. அவைஇரண்டும் இணைந்தாலும், நமது ஆன்மாநினைவு முழுவதும் அதில் விருப்பமில்லாமல்ஒதுங்கிவிடுகிறது. ஆனால் இவை மூன்றும்இணைந்தாலோ மந்திரம் நமது உள்ளத்தின்ஆழமான அடுக்குகளிலிருந்து எழும்புவதைநாம் அறியலாம். அந்தச் சமயத்தில் புனிதமந்திரத்தால் ஏற்படும் தெய்வீக அதிர்வுகள்நமது உடலில் ஏற்படுத்தும் அது பேரானந்தநிலையை நமக்குள் தோற்றுவிக்கும்.வார்த்தையால் விவரிக்க முடியாத பேரின்பநிலை நமக்கு கிடைக்கும். அதும் நீ அர்ச்சகராக இருப்பதால் இந்த ஜபம் விரைவில் பலன் தரும். தவறு செய்வது மனித இயல்பு ஆனால் இந்த தவறு நடந்ததால்தான் உன் குடும்பம் இப்படி ஒரு கஷ்டமான சூழ்நிலையில் இருக்கின்றது. என்று சொன்ன முருகப்பெருமான் மேலும் பல உபதேசங்களைத் தொடர்ந்தார். ருத்திராட்சம் என்பன தெய்வத்தன்மையும்,மருத்துவக் குணங்களும் ஒருங்கேகொண்டவை. ருத்திராட்ச மணிகளைத்தரிப்பதால் உடம்பிற்கும் உள்ளத்திற்கும்உயிருக்கும் பல நன்மைகள்விளைவிக்கின்றன. ருத்திராட்ச மணிகள்உடலுக்கு சுகத்தையும் ஆரோக்கியத்தையும்தருகின்றன. உடம்பில் வாதம், பித்தம், கபம்என்ற மூன்றும் ஒன்றையொன்று முந்தாமல்ஒரே சீராக வைத்திருக்க ருத்திராட்ச மணிகள்துணை செய்கின்றன. தீய சக்திகள்உடம்பைத் தீண்டாமல் கவசமாக நின்றுருத்திராட்ச மணிகள் காக்கின்றன. உடம்பில்நோய்கள் வராமல் தடுக்கின்றன. இதைஅணிவதால் உள்ளம் அமைதியடைவதோடு,பக்குவமடைகிறது. உள்ளத்தில் பக்திஉணர்வுகள் பெருகின்றன. தீய எண்ணங்கள்தோன்றுவதில்லை. அனைத்துக்கும் மேலாகருத்திராட்சம் தரித்தவர் சிவபக்தர் என்றபெருமிதக் களிப்பை உள்ளம் அடைகிறது.மந்திர ஒலிகளை ஈர்க்கும் சக்தியைருத்திராட்ச மணிகள் இயல்பாகக்கொண்டிருக்கின்றன. எனவே மந்திரங்களைஉச்சரிக்கும் போதும், பக்திப் பாடல்களைப்பாராயணம் செய்யும் போதும், அவற்றின்முழுப்பலன்களை உடலும், உள்ளமும் உயிரும்பெறுவதற்கு ருத்திராட்சத்தின் துணைஅவசியம் தேவைப்படுகிறது. சிவாலயவழிபாட்டின் போது ருத்திராட்ச மணிகளைஅணிந்து வரும் அடியவர்கள், சிறப்பாகச்சிவதரிசனம் செய்ய நந்தியும்சண்டிகேஷ்வரரும் உதவி புரிகிறார்கள்.ஆயிரம் ருத்திராட்ச மணிகளை அணிந்துவருபவரைப் பார்த்து இவர் சிவனே என்றுதேவர்கள் பணிகிறார்கள் என்று இவற்றின்மேன்மையைப்  பிரமோத்தர காண்டாம்என்றும் நூல் கூறுகிறது. ஐந்து முகருத்ராக்ஷத்தை மட்டுமே கிரஹஸ்தர்கள் குடும்ப வாழ்க்கையில் உள்ளவர்கள்பயன்படுத்தலாம். ஏக முகி எனஅழைக்கப்படும் ஒருமுக ருத்ராக்ஷம்சன்யாசிகள் மட்டுமே அணியவேண்டும்.பிறர் வீட்டில் உள்ள சாலிக்ராமம் மற்றும்விக்ரஹம் போல வைத்து பூஜை செய்யலாம்.நான்கு முக ருத்ராக்ஷத்தைபயன்படுத்தினால் கலை நயம், சங்கீதஞானம் போன்ற கலையாற்றல் வளரும்.குழந்தை பிறப்பு இல்லாமல்சிரமப்படுபவர்களுக்கு நான்கு முகருத்ராக்ஷத்தை பயன்படுத்துவதால் தடைநீங்க வாய்ப்பு உண்டு. துடிப்பு இல்லாமல்சோர்வுடன் இருக்கும் பன்னிரெண்டுவயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆறுமுக(ஷண்முகி) ருத்ராட்சம் நல்ல பலனைஅளிக்கும். மணவாழ்க்கையில் வாழ்க்கைத்துணைவருடன் பிரிவு உள்ளவர்கள் கௌரிசங்கர் என்ற ருத்ராட்ச வகையை அணிந்தால்மண வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டு.தனியாக ஒரே ஒரு ருத்ராக்ஷம் அணிவதைவிட மணிமாலையாக அணிவது நல்லது.பஞ்சமுக ருத்ராக்ஷத்தை தவிர வேறுவகையான ருத்ராக்ஷம் அரிது. எனவே நமதுபஞ்ச ப்ராணன்களில் சக்தி நிலை மேம்பட108 மணிகள் கொண்ட ஐந்துமுகருத்ராக்ஷத்தை அணிந்தால் அனைத்துமேம்பாட்டையும் பெறலாம். இத்தகைய அரிய அபூர்வ விளக்கங்களைக் கூறிய முருகப்பெருமான் அவருக்கு ஒரு பரிகாரமும் உரைத்தார். அதுதான் அடுத்த ஆச்சரியம். அருணகிரிநாதருக்கு ஜப மாலை ஒன்றை திருவாவினன்குடி எனும் தலத்தில் முருகப்பெருமான் கொடுத்ததாக அருணகிரிநாத சுவாமிகளே ஜப மாலை தந்த சற்குருநாதா திருஆவினன்குடி பெருமாளே என்று திருப்புகழில் பாடி இருகின்றார். ஜப மாலைக்கு செய்த குற்றத்திற்காக நீ மூன்று முறை திருஆவினன்குடி சென்று என்னை வணங்கி வா அது முதல் உனது வாழ்வு முன்னேற்றம் காணத்துவங்கும். வீடு கட்டும் யோகம் வரும். உன் மனைவிக்கு இருக்கும் நோய் நீங்கும். உனது கடன் நீங்க வழி பிறக்கும். எனவே இந்த ஆலய வழிபாட்டை தவறாமல் மேற்கொண்டு வாழ்வில் வளம்பெறுமாறு ஆசி கூறி முருகப்பெருமான் ஜீவ நாடியில் இருந்து விடைபெற்றார். திருவாவினன்குடி  முருகனின் மூன்றாம் படை வீடாகும். பழனி மலையின் அடிவாரத்தில் அமைந்த அறுபடை வீடுகளில் ஒன்றான இக் கோயில் குழந்தை வேலாயுத சுவாமி கோயில் என அழைக்கப்படுகிறது. நாரதர் சிவனுக்கு அளித்த ஞானப்பழம் தனக்கு கிடைக்காததால், முருகர் கோபம் கொண்டு ஆண்டியின் கோலம் பூண்டு இந்த திருத்தலத்தில் தங்கிவிட்டதாக புராணங்களில் கூறப்படுகிறது.  சங்ககாலப் புலவரான நக்கீரரும், பிற்காலத்தவரான அருணகிரிநாதரும் திருவாவினன்குடி முருகனைக் குறித்துப் பாடல்கள் பாடியுள்ளனர். அகத்தியர் இங்கு தவம் புரிந்து முருகனிடம் தமிழிலக்கணம் பயின்றதாகப் புராணங்கள் கூறுகின்றன. பழனி மலைஅடிவாரத்தில் வையாபுரி ஏரிக்கரையில்அமைந்துள்ளது திருவாவினன்குடி. இது தனிஊராக விளங்கிய திருத்தலம்.அருணகிரிநாதர் "ஆவினன்குடிப் பெருமான்''என்றும் "ஜபமாலை தந்த சற்குருநாதன்''என்றும் போற்றும் குழந்தை வேலாயுதசுவாமிஇங்குதான் எழுந்தருளியுள்ளார். இந்தத்திருவாவினன்குடி ஒரு காலத்தில் அடர்ந்தநெல்லிவனமாக இருந்தது. இந்தநெல்லிவனத்தில் யாரெல்லாம் தவம்செய்திருக்கிறார்கள் தெரியுமா? ஏதோ ஒருகாரணத்துக்காக மஹாவிஷ்ணுவால்புறக்கணிக்கப்பட்ட ஸ்ரீமஹாலட்சுமி,அவருடன் பூமாதேவி, விஸ்வாமித்திரர்,படையையே வென்றுவிட்டேன் என்றஅகங்காரத்தால் தனது வலிமையை இழந்தகாமதேனுப் பசு, உயிர்கள் அனைத்தும்தன்னால்தான் வாழ்கின்றன என்றுகர்வப்பட்டு அதனால் சிவனின் சாபத்திற்குஆளான சூரியன், தட்சனது யாகத்தில் கலந்துகொண்ட காரணத்திற்காக ஸ்ரீவீரபத்திரமூர்த்தியால் தண்டிக்கப்பட்ட அக்னி -இவர்கள் எல்லோரும் இங்கு சாபவிமோசனம் பெற தவ வாழ்வுமேற்கொண்டிருக்கிறார்கள்! இங்குள்ளகுழந்தை வேலாயுத சுவாமியை வழிபட்டுவரம்பெற்று சாப விமோசனமும்அடைந்ததால் இப்பகுதியின் பெயர் "திரு ஆஇனன் குடி' என்று ஆனது. திரு -மகாலட்சுமி,ஆ- காமதேனுப் பசு, இனன் - சூரியன், கு -பூமாதேவி, டி - அக்னி என இத்தலத்திற்குப்பெயர் தந்த ஐந்து தேவர்களின்திருவுருவங்கள் இக்கோயில்உட்பிரகாரத்தின் தெற்கு, தென்மேற்கு மூலப்பகுதியில் உள்ளன.

இப்படி மகிமை வாயந்த திருத்தலத்தில்தான் முருகப்பெருமான் வழிபாடுன் செய்யச் சொல்லி இருகின்றார். இப்படியெல்லாம் நடக்குமா என்ற எண்ணம் வருவது இயற்கையே. எந்த ஒன்றையும் நமது அனுபவத்தில் பார்ர்க்கும்போதுதான் உண்மை எது பொய் எது என்று உணர முடியும். இரண்டு ஆண்டுகளாக முயற்சி செய்கின்றேன் ஜீவ நாடி கேட்க முடியவில்லை என்று பலர் சொல்கின்றார்கள். முருகன் பார்வை உங்கள் மீது எப்போது விழ வேண்டும் எனும் விதியமைப்பு வரும்போதுதான் உங்களுக்கு ஜீவ நாடி கேட்டுக்கொள்ள சாத்தியமாகின்றது. அடுத்து நாம் என்ன மன நிலையில் வந்து ஜீவ நாடி கேட்க அமருகின்றோமோ அதற்கு தகுந்தவாறுதான் முருகன் வாக்குரைக்குன்றார். யாருக்கு 100% நம்பிக்கை இருக்கின்றதோ அவர்களுக்கே 100% துல்லியமாக ஜீவ நாடியில் வாக்கு வருகின்றது. சிறிதளவு நம்பிக்கை இருப்பவர்களுக்கு சிறிதளவே பலனும் பலிதமும் வருகின்றது என்பது எனது 20 ஆண்டுகால அனுபவம். அதேபோல் ஒருவருக்கு வருவது போல் மற்றவருக்கு வருவதிலை ஒருவருக்கு சுமார் 1 மணி நேரமும் அதற்கு மேலும் கூட ஜீவ நாடியில் வாக்கு வருகின்றது. ஒரு சிலருக்கு சுமார் 5 நிமிடம் வாக்கு வருவதே பெரிய விசயம். எனக்கு ஜோதிடம் தெரிந்தாலும் நான் பலன் உரைப்பதில்லை. முருகப்பெருமான் என்ன உரைகின்றாரோ அதை மட்டுமே உரைப்பது எமது பணி. நமக்கு ஜோதிடம் தெரியும் என்பதற்காக முருகன் வாக்கை விளக்க முற்படுவதில்லை. காரணம் முருகன் என்ன நோக்கத்தில் உரைக்கின்றார் என்பதை அறிவது கடினம்.

No comments:

Post a Comment