Monday 30 October 2017

அகத்தியர் நல் வாக்கு - பிரார்த்தனை

ஜீவ நாடி வாசிக்க கீழ்கண்ட முகவரி அல்லது தொலை பேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும் : அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583


விதியை மதியால் ஆய்வு செய்யலாம். ஆட்சி செய்ய இயலாது. அகுதொப்ப விதி, மதி என்பதையெல்லாம் தாண்டி, பிரார்த்தனை என்ற எல்லைக்கு வந்துவிடு. அதே உன்னை காலா காலம் காத்து நிற்கும். சென்றது, செல்ல இருப்பது என்றெல்லாம் பாராமல், உள்ளுக்குள் பார்த்து, பழகு. பழகப் பழக, விதி உனக்கு சாதகமாக மாறும். பக்குவம் பெறுவதற்குத்தான் அனுபவங்கள். அந்த அனுபவங்கள்தான், மனோபலத்தை அதிகரிக்கும் வழியாகும். மனோபலம் இல்லாது, தெய்வ பலம் கூடாது. மனோபலத்தை உறுதி செய்யவும், வளர்த்துக் கொள்ளவும், துன்பங்களைத் தாங்கி கொள்ளத்தான் வேண்டும். அகுதொப்பத்தான், பல்வேறு சோதனைகளும், வேதனைகளும் மனிதனை விரட்டுகின்றன. அவற்றை கண்டு மனம் தளராது, எதிர்த்து, இறையருளோடு போராடினால், இறுதியில் நலமே நடக்கும். உனது வாழ்விலும் கடை வரையிலும் நலமே சேரும். அகுதொப்ப இயன்ற பிரார்த்தனைகளை, தர்மங்களை செய்து கொண்டு எமது வழியில் தொடர்வதை தொடர்க. யாவும் நலமே நடக்கும். பூரண நல்லாசிக

No comments:

Post a Comment