Tuesday 31 October 2017

அகத்திய பெருமான் மனம் மணக்கும் அருள்வாக்கு

அகத்தியப் பெருமானின் அருள் வாக்கு

எம்மை நாடும் மனிதர்கள் இன்னும் பக்குவப்படவேண்டும். எங்கள் கருத்துக்களை உள்வாங்கி, உள்வாங்கி, அவரவர்கள் சுய ஆய்வு செய்து, சித்தர்கள் யாங்களே கூறினாலும் கூட, அவற்றிலே மெய்ப்பொருள் எந்த அளவிற்கு இருக்கிறது, என்று ஆய்ந்து, தன்னைத்தானே உயர்த்திக் கொள்ள வேண்டும். ஏனென்றால், மனம் செம்மையாகவேண்டும். மனம் உயரவேண்டும். மனம் விரிவடைய வேண்டும். மனம் ஆழமாக இருக்க வேண்டும். மனம், மணக்கின்ற மனமாக வேண்டும். அப்பேர்ப்பட்ட மனதிலே தான் இறை வந்து அமரும்.

No comments:

Post a Comment