Sunday 29 October 2017

ராம நாமம் பற்றி அகத்தியர்

அகத்தியப் பெருமானின் அருள் வாக்கு

ராம நாமம் ஜெபித்தார்கள், சம்பாதிக்கு சிறகு முளைத்தது, என்றெல்லாம் படிக்கும் பொழுது, இது சாத்தியமா என்று கேட்கத் தோன்றும். அப்படியானால், ஒரு பறவையை பிடித்து, சிறகுகளை அரிந்துவிட்டு, ராம நாமம் ஜெபித்தால் சிறகுகள் முளைக்குமா? என்றால், ராம நாமம் சக்தியுடையது. சிறகென்ன, கரங்கள், கால்கள் கூட ஒரு மனிதனுக்கு முளைக்கும். ஆனால், ராம நாமத்தை சொல்கிறவர்கள், பக்குவமடைந்து, ஆத்ம சுத்தியோடு, பற்றற்ற தன்மையோடு, பல காலம் ராம நாமத்தை ஜெபித்து, ஜெபித்து, ஜெபித்து, ஸித்தி பெற்று இருந்தால், உடனடியாக நடக்கும். மனம் ஒன்றாத பிரார்த்தனைகள் பலனளிக்காது. மந்திரங்களும், வழிபாடுகளும் ஒன்றுதானப்பா. அதை கையாளும் மனிதனை பொறுத்துதான், உடனடி முடிவும், தாமதமான முடிவும். எனவே, விளைவு எப்படி இருந்தாலும் பாதகமில்லை என்று தொடர்ந்து பிரார்த்தனை செய்யச் செய்ய, பலன் கிடைக்கும் நாள் நெருங்கி வரும். 

No comments:

Post a Comment