Sunday 22 October 2017

அகத்தியர் வாக்கு - ஞானம் அடைய என்ன செய்ய வேண்டும்


அகத்தியப் பெருமானின்  அருள் வாக்கு



ஞானம் அடைய வேண்டும், ஞானத்தை நோக்கி செல்ல வேண்டும் என்றாலே, தாய், தந்தை, உற்றார், உறவினர், சூழல், ஏதுவாக இருந்தாலும், கர்மத்தின்படி நடக்கிறது என்று அமைதியாக இருக்க வேண்டும். தாய் கஷ்டப்படுகிறார், தந்தை சிரமப்படுகிறார், என்று எண்ணும்பொழுதே மீண்டும் மனிதன், மாயவலைக்குள் சிக்கிவிடுகிறான். எனவே, ஒவ்வொரு உடலும், தோற்றமும் ஒவ்வொரு மனிதனுக்கும், ஒவ்வொரு விதமாகப் படைக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும். பெற்று வந்த கர்மங்களின் படி அதன் வாழ்வின் போக்கும், சிந்தனைகளும், சந்திக்கின்ற அனுபவங்களும் அமைகின்றன. இருந்த போதிலும், துயரங்களை எல்லாம் களைந்து வாழ வேண்டும், என்ற ஆசை இல்லாத உயிரினம் இல்லை. இவற்றுக்கெல்லாம் ஒட்டுமொத்த ஒரே வழி, பிரார்த்தனை. (பித்ரு தோஷங்களும், தந்தை வழி, தாய் வழி, முன்னோர் வழி பெற்ற சாபங்களும் தொடர்வதால், இந்த நிலை). பசு மாடுகளுக்கு உணவு, ஆலயத்தில் மீன்களுக்கு உணவு, ராமேஸ்வரத்தில் தில யாகம் செய்து, குறைத்துக் கொள்ளலாம். எந்த ஒரு மனிதனுக்கும் துன்பங்கள் இருக்கிறதென்றால், முன்வினை இருக்கிறது என்று பொருள். முன்வினை குறையக்குறைய, துன்பங்கள் குறைந்துகொண்டே வரும். இந்த வினைப்பயனை பெரும்பாலும் அனுபவித்து தீர்ப்பது ஒரு வகை, தர்மத்தால் தீர்ப்பது ஒரு வகை. இறை வழிபாட்டால் தீர்ப்பது ஒரு வகை. 

No comments:

Post a Comment