Tuesday 21 July 2020

ஸ்ரீ ராம மந்திரம்

🏹🏹🏹🏹ஸ்ரீ ராமச்சந்திரனை                                                                                                            🏹🏹🏹🏹தஸரத சக்ரவர்த்தி மட்டும்                                                                                                                                           🏹🏹🏹🏹ராமா என்று அழைத்து வந்தாராம். தந்தை என்ற முறையில் இந்த அதிகாரம் அவருக்கு மட்டும் உண்டு.

🏹தாயான கௌஸல்யா மகனை ராமபத்ர என்று அழைத்து வந்தாள் .இது தாயின் வாத்ஸல்யம் நிரம்பியதாக உள்ளது.

🏹சிற்றன்னை கைகேயி ராமச்சந்த்ர என்று அழைப்பாள் .குழந்தையாக இருந்தபோது ஸ்ரீ ராமன் ஆகாயத்தில் இருக்கும் சந்திரன் வேண்டும் என்று அழுதபோது கைகேயி ஒரு கண்ணாடியில் சந்திரனின் பிம்பத்தை காண்பித்து ஸமாதானப் படுத்துகிறாள்.இந்த காரணத்தினால் ராமச்சந்த்ர என்ற பெயர் பொருத்தமாக உள்ளது.

🏹ப்ரம்ம ரிஷிகளான வசிஷ்டர் ஸ்ரீ ராமனை பரதத்துவம் என்று அறிந்து வேதஸே என்று அழைத்தார் .

🏹அயோத்யா நகரத்து ப்ரஜைகள் எல்லோரும் எங்களுடைய ரகுவம்ஸத்து அரசன் என்ற அர்த்தத்தில் ரகுநாத என்று அழைத்து வந்தனர் .

🏹ஸீதாதேவி நாத என்றே அழைத்து வந்தாள் .அப்படி அழைப்பதற்கு ஸீதாதேவிக்கு மட்டுமே உரிமை உண்டு.

🏹மிதிலை நகரத்து மக்கள் அனைவரும் எங்களது ஸீதாதேவியின் பதி என்ற அபிமானத்தினால் ஸீதாயபதயே என்று கூறி வந்தார்கள்.

அந்த ஸ்லோகம் : --
🏹ராமாய ராமபத்ராய ராமச்சந்த்ராய வேதஸே
🏹ரகுநாதாய நாதாய ஸீதாய பதயே நம :... !!!

இது மிகவும் ப்ரஸித்தமான ஸ்லோகம் .ஆனால் இந்த பத ப்ரயோகங்களில் இருக்கும் உள் அர்த்தம் மனதைத் தொடுவதாகும் .
இப்படிப்பட்ட ராமனுக்கு நமஸ்காரங்கள்                                                                                                                                         .🏹🏹🏹🏹🏹🏹🏹🏹

No comments:

Post a Comment