Saturday 4 July 2020

குரு பௌர்ணமி நாடி தகவல்

நேற்று தனிப்பட்ட முறையில் எனக்கு பொகளூர் அகத்தியர் ஜீவ அருள் நாடி பீடத்தில் குருபௌர்ணமி அன்று மாலையில் எனக்கு நாடி வாசித்து கூறப்பட்டது
நேற்று குரு பௌர்ணமி நாள் ஆனதால் காலை முதல் மாலை வரை யாகங்கள் அபிஷேகங்கள் அலங்காரங்கள் ஆகியவை குருநாதர் அகத்திய பெருமானுக்கு செய்விக்கப்பட்டு அழகாக வழிபாடு மேற்கொள்ளப்பட்டது
பல அன்பர்கள் நிதி உதவி அளித்து நிறைய பூஜை பொருட்கள் திருப்திகரமாக வாங்கப்பட்டு மிகச் சிறந்த முறையில் உயர்ந்த தரமான பொருட்களால் சிறப்பு பூஜைகள் நடந்தேறியது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்
 நேற்று மாலை 6 மணி அளவில் எனக்கு ஜீவ நாடி வாசிக்கும் போது குருநாதர்  அவர்கள் இந்த உலகம் முழுவதும் இருக்கும் இந்த நிலை மார்கழி மாதம் 8ஆம் தேதிக்கு மேல் மாற்றம் பெறும் என்று அறிவித்து உள்ளார்
எனவே டிசம்பர் மாதம் 20ஆம் தேதி வரை இந்த பிரச் சினைகள் நீடிக்கும் என்று தெரிகிறது
மேலும் குருநாதர் அகத்தியர் உரைக்கும் போது பிரச்சனை தீரும் என்று கூறவில்லை மாறாக மாற்றம் கிடைக்கும் என்று கூறி உள்ளார்
எனவே பிரச்சனை இருக்கும் ஆனால் ஆனால் மருந்து கண்டுபிடிக்கப்பட்டு அந்த மருந்து வேலை செய்து இறப்பு விகிதம் 0 ஆக குறைக்கப்படும் என்பது என்னுடைய புரிதல்
மேலும் குருஜி இறை சித்தர் அவர்கள் கூறும்போது இன்று குரு பௌர்ணமி அன்றும் போன வருடம் போல சந்திர கிரகணம் பகலில் வருகிறது இதுபோல கிரகணங்கள் உலகத்திற்கு உண்டு பொதுவாக உலகத்திற்கு வரும் கிரகணங்களை மனிதர்கள் கணித்து சந்திர கிரகணம் சூரிய கிரகணம் என்று இருவகை படுத்தி கூறுகிறார்கள் ஆனால் பல கிரகணங்கள் பிரபஞ்சத்தில் நவக்கோள்களில் உண்டு

 பூமிக்கு எப்படி சந்திரகிரகணம் சூரியகிரகணம் ஆகியவை இருக்கிறதோ அதேபோல கேதுவுக்கு கிரகணம் உண்டு ராகுவுக்கு கிரகணம் உண்டு சனிக்கிரகம் உண்டு குருவுக்கு கிரகணம் உண்டு. எனவே பல வகையான கிரகணங்கள் நமக்கு தெரியாமல் நவகிரகங்களுக்கு நடந்துகொண்டே இருக்கின்றன அதில் பார்க்கும்போது இந்த வருடம் 36 வகையான கிரகணங்கள் நடக்க இருப்பதாக கூறுகிறார்கள்

இது வந்து மிக மிக அதிக எண்ணிக்கையில் இந்த வருடம் இருப்பதாக கூறுகிறார்கள் கோள்கள் அனைத்தும் அருகருகே சஞ்சாரம் செய்வதால் இந்த மாதிரி கேடுகள் கிரகணங்கள் பிரபஞ்சம் முழுவதும் ஏற்படுவதால் உலகமும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது என்று குருஜி அவர்கள் கூறினார்கள் மேலும் இந்த வைரஸ் கிருமி எப்போதும் இருந்து கொண்டே இருந்தது என்பது தான் உண்மை.
 இதுவரை இம்மாதிரி பாதிப்புகள் இருக்கவில்லை, ஆனால் இப்போது பல வகையான கிரகணங்கள் அனைத்து கோள்களிலும் நடப்பதினால் இந்த வைரஸ்கள் எழுச்சி பெற்று சக்தியூட்டப்பட்டு மனிதனை தாக்கி அழிக்க துவங்கி உள்ளன
எல்லாமே இந்த கோள்களின் அமைப்பினால் வந்த சிக்கல்கள் பல நூறு வருடங்களுக்கு ஒருமுறை இந்த கிரகணம் நிலை போல இந்த பிரபஞ்சத்திற்கு வரும்
அப்படி ஒரு நிலை இப்போது கலி காலத்தில் மக்களுக்கு வந்துள்ளது
அனைவரும் சித்தர் வழியில் செல்வோம் அகத்தியர் நாமத்தை ஜெபிப்போம் நிச்சயமாக அகத்தியர் அனைவரையும் காப்பார் அழைத்தால் அக்கணமே வருவார் எம் குருநாதர் அகத்தியர் என்பதை பணிவுடன் தெரிவித்து கொள்கிறோம் நன்றி ஓம் அகத்தீசாய நம

தி. இரா. சந்தானம்

No comments:

Post a Comment