Saturday 25 July 2020

அகத்தியர் பீடத்தில் இருந்து செய்தி, பீடத்தின் செல்ல பிராணி இறைவனடி சேர்ந்தது

அனைவருக்கும் வணக்கம்

 ஓம் அகத்தீஸ்வராய நமக

நமது பீடத்தில் வளர்க்கப்பட்டு வந்த பைரவர் வாகனம் செல்ல பிராணி எல்லோராலும் அன்புடன் டாமா என்று அழைக்கப்படும் பைரவ வாகனம் அவர்கள் நேற்று இறைவனடி சேர்ந்தார்கள் என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம்

ஒரு வகையில் பார்த்தால் அவர் கடந்த நான்கு வருடங்களாக நமது அகத்தியர் ஜீவ நாடி பீடத்தில் இருந்து அங்கே வரும் பக்தர்களுடன் பழகி அவர்கள் அளிக்கும் உணவினை உண்டு அகத்தியர் பூஜையினை கண்டு களித்து நன்றாக வாழ்ந்து வந்த காரணத்தினால் மிகுந்த புண்ணியம் தேடிக்கொண்டார்

புண்ணியத்தின் மிகுதியால் இந்த பிறவியில் கர்மங்கள் ஒழிந்து விரைவில் அடுத்த நிலைக்கு மனித நிலைக்கு செல்வதற்காக விரைவில் நான்கு வயதிலேயே தனது உடலை உண்ணா நோன்பு இருந்து நீத்து உள்ளார்

கடந்த 2 நாட்களாக தொடர்ந்து அவர் அகத்தியர் குடில் பார்த்து அமர்ந்து கொண்டு இருந்துள்ளார் பின்னர் எதிரில் உள்ள விநாயகர் ஆலயத்தில் வாயிலில் அமர்ந்து விநாயகரை உற்று நோக்கியபடி இருந்து உள்ளார். இரண்டு நாட்களாக இவ்விதம் இருந்த நிலையில் நேற்று சனிக்கிழமை 25.07.2020 அன்று உயிர் பிரிந்து உள்ளது

 அனைவருக்கும் வணக்கம்
அகத்தியர் ஜீவ அருள் நாடி பீடத்தின் சார்பில்
சந்தானம் நன்றி வணக்கம்
ஓம் அகதீஸ்வராய நமஹ


No comments:

Post a Comment