Friday 2 August 2019

இறை அணியப்பா" என்ற தலைப்பில் அகத்திய மாமுனிவரின் (குருநாதர்) பாடல் :🙏*

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*நாள் : 182*

*தேதி:  03-08-2019(சனி - மந்தன், கரி, காரி, கரியன்)*

*அகத்திய மாமுனிவர் என்பவர் யார்?*

*ஏகமாய் சிவசாயுச்சியம் நின்றவர்* அகத்திய மாமுனிவர்.

*"இறை அணியப்பா" என்ற தலைப்பில் அகத்திய மாமுனிவரின் (குருநாதர்) பாடல் :🙏*

*அகத்திய மாமுனிவர்(குருநாதர்) வாக்கு :*

*அந்த இறையை நீ உள்ளத்தில் அணியப்பா.*

*இறையணி அணியத்தான் நிறையணியாகும் வாழ்வப்பா.*

*இயம்புங்கால் எமை நாடும் மாந்தர்கள் அனைவரும், ஓரணியில் இருக்க வேண்டும் என்பதற்காக யாமும் வாக்கை சீராக்கி,*

*உயர்வணி ஆக்கி,*

*நல்வித சாெல் அணி ஆக்கி,*

*அவையணி ஆக்கி,*

*உயர் தமிழ் அணி ஆக்கி,*

*நல்விதமாய், அணி, அணியாய் வாக்கை, அவ்வப்பாேது, பகரணியாக்கி, உரையணியாக்கி,*

*சாெல்லணியில் சாெல்லுங்கால்,*

*அவ்வணியை எல்லாம் செவியணியில் ஏற்று,*

*சிந்தனை அணியில் வைத்து,*

*சாெல்லணியில் மீண்டும் செயல்படுத்தி, செயலணி ஆக்கிவிட்டால்,*

*யாம் உரைத்த வாக்கணிக்கு உயர்வான மதிப்பணி ஆகுமப்பா,*

*அப்பனே! அஹ்தாெப்ப செய்யாது, ஒரு செவியணியில் ஏற்று, அதை மறு செவியணியில் விட்டுவிட்டால் எமது வாக்கு மதிப்பணி எப்படி ஆகுமப்பா? இவையெல்லாம் வாக்கணியா?*

*சித்தர்களின் பாேக்கணியா?*

*இவையெல்லாம் நான் நம்பமாட்டேன். இதனை என் மதியணி ஏற்காது.*

*எல்லாம் விதியணி என்றால், எதற்கு இவர்கள் முன் அமர்ந்து, அணியணியாக கூறுகின்ற வாக்கைஎல்லாம் கேட்க வேண்டும்?.*

*அங்கே தீப அணி ஏற்றச் சாெல்கிறார்கள். பிறகு தர்ம அணி செய்யச் சாெல்கிறார்கள்.*

*இவற்றை எல்லாம் செய்வதற்கு, "தன அணி வேண்டாமா"? என்று கேட்டால்,*

*அதற்கும் "கர்ம அணி" என்றுதான் கூறுகிறார்கள்.*

*கர்ம அணியை நீக்க, தர்ம அணிதான் தேவை என்றால், தன அணி எப்பாேது வரும்? என்று எம்முன்னே வினவி,*

*"அந்த தன அணி தராவிட்டால், தர்ம அணி செய்ய முடியாது" என்று வாது செய்கிறார்கள் என்றாலும்,*

*பாெல்லா அணி எல்லாம் மனிதனை விட்டு நீங்கி,*

*நல்ல அணி எல்லாம் மனதில் வைத்துவிட்டு,*

*ஹிம்சை அணியும், வேதனை அணியும் விட்டுவிட்டு,*

*அவன் "தாய்" அணி பாேல் எம்மை அணுகும்பாேது,*

*அவன் கர்ம அணியைக் கழிப்பதாேடு,*

*அவனுக்கு "தர்ம அணியின்" வழியையும் காட்டி அவன் உயர் கர்ம அணியை தாெடர்ந்து செய்து,*

*இறை அணியிலே அவனும் ஒரு அணியாக இருப்பதற்கு வழியைக்காட்டி,*

*எம்முன்னே இன்னும் பேத அணி காெள்ளாமல்,*

*அனைவரும் ஓரணியாக நின்றால்தான்,*

*நாங்களும் இறையணியைக் காட்டித் தருவாேம்.*

*எனவே, இந்த நல் அணியை செவி அணியிலே ஏற்றி,*

*சிந்தை அணியில் வைத்து, இறைவன் திருவடியை சிந்திக்க, பல்வேறு வாக்கனிகள்,*

*வாக் "கனிகளாய்" இனி மலருமப்பா.*

                🙏 *-சுபம்-* 🙏

*🙏ஸ்ரீ லாேபாமுத்ரா தேவி சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*

*🙏 குரு திருவடி சரணம்! சரணம்!🙏*

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*

.மேலே உள்ள பதிவு திரு S. Prabhu என்பவர் தினம் ஒரு அகத்தியர் வாக்கு என்ற whats up குழுவில் உள்ள பதிவிலிருந்து எடுக்கப்பட்டு தினமும் இங்கே  பதிவு செய்யப்படுகிறது. நல்ல பதிவுகளை பகிர்வதில் தவறில்லையே !!!.
************************************

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.

தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏

Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583

கூகிள் வரைபடம் வழி கீழே 👇

https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in

முகநூல் -

https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/

*************************************************

நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள் வாங்க... அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

அகத்தியப்பெருமான் தரிசனம் செய்த மற்றும் ஸ்தாபித்த ஆலயங்களைப் பற்றிய விபரமான நூல் தயாராகி விட்டது. அகத்தியர் அடியவர்கள் அனைவரும் வாங்கி படித்து பலன் பெற வேண்டுகிறோம். நூல் வேண்டுவோர் தொடர்புக்கு அறந்தாங்கி சங்கர் 9444160161

************************************************