Saturday 3 August 2019

அகத்தியர் வாக்கு பாடல், ஓதிய கிரி

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*நாள் : 183*

*தேதி: 04-08-2019(ஞாயிறு - சூரியன், கதிரவன், பகலவன், ஆதித்தன், ரவி)*

*அகத்திய மாமுனிவர் என்பவர் யார்?*

*அயனம் இரண்டையும் அறிந்தவர்* அகத்திய மாமுனிவர்.

*கேள்வி : "சங்கரனுக்கு, சரவணகுகன் (முருகப்பெருமான்) ஓதிய கிரி" :* 🙏

*திருக்காேவில் உள்ள இடம் :* இடும்பரை, மேட்டுப்பாளையத்திலிருந்து 21 கி.மீ தாெலைவு.

*மாவட்டம் :* காேயம்புத்தூர் மாவட்டம்

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*

*சங்கடப்பட்ட பல்மாந்தர்கள்(பல மனிதர்கள்) தலைவிதி மாறிய கிரி(மலை),*

*சபலங்கள், சலனங்கள் விட்டு ஓடிடும் கிரி,*

*சிறப்பில்லா முன்வினை ஊழ்பயன் சிறப்பாக மாற்றித் தரும் கிரி,*

*சிந்தனையில் அணுவளவும் கட்டமில்லா தன்மையை நல்கிடும் கிரி,*

*சிறப்பாே, சிறப்பில்லையாே, பேதம் பார்க்கா வாழ்கையை ஏற்க வைக்கும் கிரி,*

*சப்த கன்னியர்கள், அன்னையாேடு, அன்னை அருளால் அருளும் கிரி செப்புங்கால்(கூறுங்கால்),*

*பஞ்சமும் அடங்க, பஞ்சவதனத்தாேன் அருளும் கிரி,*

*சிறப்பாக எத்தனை குன்றுகள் இளையவன்(முருகப் பெருமான்) அருளால் இருந்திட்டாலும், குன்றுக்கெல்லாம் உயர் குன்றாய் இன்றும் சான்றாய் அருளும் கிரி,*

*அன்னையாேடு, ஐயன் அமர்ந்து அன்றும், இன்றும், என்றும் அருளும் கிரி,*

*நீறு(திருநீறு) வேறு, நாமம் வேறு என்று அறியாமையால் எண்ணும் மாந்தனுக்கு(மனிதனுக்கு), நீறு(திருநீறு) பூத்த அக்னிபாேல்,*

*நீராேடு, நாமமும் கலந்து வேங்கடகிரியாய் அருளும் கிரி,*

*கட்டிய கணவன் காதில் இரகசியமாய் மனையாள் ஓதினாலும், கட்டிய மனைவி ஓதுகிறாளே என்று தாய் ஓதினாலும்,*

*உபயத்தையும் தாண்டி பிள்ளைகளுக்கு எதை ஓதினாலும்,*

*மாந்த குரு(மனித குரு) சிஷ்யனுக்கு ஓதினாலும்,*

*அனைத்திலும் பேதமுண்டு, சுயநல நாேக்கமுண்டு.*

*பேதமில்லா தாண்டிய நிலையில் வேதமெல்லாம் ஓர் உருவாக ஓம்கார நாத வெள்ளம் ரூபமாக,*

*நேத்திரத்தில் கருணை வெள்ளம் பிரவாகமெடுக்க, அறுவதனமும் ஐவதனமாகி, எழு பிறப்பும் எட்டென விரட்டி,*

*உபயவினையும் இல்லாது ஒழித்து,*

*சூல நேத்திரத்தாேன், திரு மைந்தன் சதுரத்தை நவரசமாய் பிழிந்தெடுத்து,*

*அதனையும் தாண்டி பல்வேறு நுட்பத்தை பேதமில்லா ஓதி ஒருமுகமாய், திருமுகமாய், ஒரு நினைவாய் மாந்தன்(மனிதன்) வாழ அருளும் கிரி,*

*ஞானத்தை நல்கும் கிரி(மலை),*

*அஞ்ஞானத்தை அடியாேடு அழிக்கும் கிரி,*

*பேதத்தை நீக்கும் கிரி,*

*வேதத்தை உணர்த்தும் கிரி,*

*சீரற்ற குணங்களை சீராக்கும் கிரி,*

*நிலைத்த செல்வத்தை நல்கும் கிரி,*

*வாழ்வின் தடைகளை நீக்கும் கிரி,*

*எதிர்பார்த்த விடைகளை நல்கும் கிரி,*

*கர்ம நிலைகளை மாற்றும் கிரி,*

*அக உளைச்சல் ஒழிக்கும் கிரி,*

*பேதம் காட்டா வேதகிரி,*

*ஓம் எனும் பிரணவம் ஒலிக்கும் நாத கிரி,*

*இளையவன்(முருகப்பெருமான்) திருவடி பாதம் படிந்த கிரி,*

*அன்னை நிரந்தரமாய் அருளும் கிரி,*

*ஐயனாேடு இன்று அனைவரும் இருக்கும் கிரி ஓதும் கிரி அது ஓதிய கிரி,*

*பேதம் தவிர்த்து பிரணவநாதம் கலந்து ஒலிக்கும் கிரி.*

                🙏 *-சுபம்-* 🙏

*🙏ஸ்ரீ லாேபாமுத்ரா தேவி சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*

*🙏 குரு திருவடி சரணம்! சரணம்!🙏*

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம்  வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர்மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*

.மேலே உள்ள பதிவு திரு S. Prabhu என்பவர் தினம் ஒரு அகத்தியர் வாக்கு என்ற whats up குழுவில் உள்ள பதிவிலிருந்து எடுக்கப்பட்டு தினமும் இங்கே  பதிவு செய்யப்படுகிறது. நல்ல பதிவுகளை பகிர்வதில் தவறில்லையே !!!.
************************************

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.

தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏

Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583

கூகிள் வரைபடம் வழி கீழே 👇

https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in

முகநூல் -

https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/

*************************************************

நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள் வாங்க... அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

அகத்தியப்பெருமான் தரிசனம் செய்த மற்றும் ஸ்தாபித்த ஆலயங்களைப் பற்றிய விபரமான நூல் தயாராகி விட்டது. அகத்தியர் அடியவர்கள் அனைவரும் வாங்கி படித்து பலன் பெற வேண்டுகிறோம். நூல் வேண்டுவோர் தொடர்புக்கு அறந்தாங்கி சங்கர் 9444160161

************************************************