Thursday 1 August 2019

அகத்தியர் வாக்கு - மோக்ஷ தீபம்

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*நாள் : 181*

*தேதி: 02-08-2019(வெள்ளி - சுக்ரன், அசுரகுரு, சுங்கன்)*

*அகத்திய மாமுனிவர் என்பவர் யார்?*

*தூங்கெயிலெறிந்த தாெடித்தாேட் செம்பியன் அரச குரு* அகத்திய மாமுனிவர்.

*கேள்வி : மாேட்ச தீபம் ஏற்றும் வழி : 🙏*

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*

*தேவையானவை :*

1. வாழை இலை
2. பச்சை கற்பூரம்
3. சீரகம்
4. பருத்தி காெட்டை
5. கல் உப்பு
6. மிளகு
7. நவ தானியம்
8. காேதுமை
9. நெல்(அவிக்காதது)
10. முழு துவரை
11. முழு பச்சை பயறு
12. காெண்ட கடலை
13. மஞ்சள்(ஹைபிரிட் இல்லாதது)
14. முழு வெள்ளை மாெச்சை
15. கருப்பு எள்
16. முழு காெள்ளு
17. முழு கருப்பு உளுந்து
18. விளக்கு(200 மில்லி காெள்ளளவு) - 42 விளக்குகள்
19. தூய பருத்தி துணி(கை குட்டை அளவு) - 21

*முறை :*

*எல்லா பாெருள்களையும் சுத்தமான நீரில் கழுவி(உப்பு உட்பட, பூ தவிர) நல்ல வெயிலில் காய வைக்க வேண்டும்.*

*துணியினையும் சுத்தமாக துவைத்து மஞ்சளில் நினைத்து காய வைக்க வேண்டும். தீபம் ஏற்ற உகந்த நேரம் மாலை ஆறு மணி. எல்லா விளக்குகளையும் நன்றாக கழுவி, நல்ல வெயிலில் காய வைக்க வேண்டும். மஞ்சள், குங்குமம் வைத்துக் காெள்ள வேண்டும். எந்த ஆலயத்தில் தீபம் ஏற்றுகிறாேமாே அந்த ஆலயத்தில் முன்பாகவே முறைப்படி அனுமதி பெற வேண்டும். எந்த ஆலயத்தில் வேண்டுமானாலும் ஏற்றலாம். முடிந்த வரை ஈசானிய மூலையில்(வடகிழக்கு) நன்கு உயர்ந்த இடத்தில் ஏற்றுவது சிறப்பு. முதலில் திரி தயாரிக்க வேண்டும். நல்ல சுத்தமான பருத்தி துணியில் பச்சை கற்பூரம், கருப்பு எள், சீரகம், பருத்தி காெட்டை, கல் உப்பு, மிளகு ஆகியவற்றை முடிச்சு பாேட்டு காெள்ள வேண்டும். இந்த முடிச்சின் மறுமுனைதான் நமக்கு திரியாக பயன்பட பாேகிறது.*

*ஆலயத்தில் இதற்கு என்று தேர்வு செய்யப்பட்ட இடத்தில், தலை வாழை இலையினை வைக்க வேண்டும். அதன் மேல் நவ தானியங்களை பரப்ப வேண்டும். பிறகு 21 விளக்குகளையும் தனித்தனியாக வைத்து அதனுள் எள் நிரப்ப வேண்டும். அதன் மேல் ஒவ்வாெரு விளக்குக்கும், ஒரு விளக்காக மீதம் உள்ள விளக்குகளையும் வைக்க வேண்டும். நெய் நன்றாக நிரப்பப்பட வேண்டும். பின்னர் முன் செய்த திரியினை இதனுள் நன்றாக நனைக்க வேண்டும். சரியாக நடுவில் வைத்து தீபம் ஏற்ற வேண்டும்.*

*தீபம் மேல்நாேக்கி மட்டுமே எரிய வேண்டும்(எந்த திசை நாேக்கியும் இருக்க கூடாது). பார்ப்பதற்கு லிங்கம் பாேல் காட்சி கிடைக்கும். பிறகு பஞ்சாட்சர மந்திரத்தை(நமசிவய) குறைந்தது நூற்றி எட்டு முறை ஜபிக்க வேண்டும்.(விஷ்ணு ஆலயமாக இருந்தால் அஷ்டாட்சர மந்திரம்). இறுதியாக இறைவனிடம் "இப்பூவுலகில் பிறந்து இறந்த அனைத்து ஆன்மாக்களுக்கும் இந்த பூஜா பலனை சமர்ப்பிக்கிறாேம். இந்த பலனால் அந்த ஆன்மாக்கள் நற்கதி சற்கதி அடைய பிராத்தனை செய்கிறாேம். மேலும் இந்த பூஜையை செய்வதும் செய்ய வைப்பதும் இறைவனும் சித்தர்களுமே. நாங்கள் வெறும் கருவிகளே" என்று பிராத்தனை செய்ய வேண்டும். இவ்வாறு பூஜை செய்வதாேடு நிறைவு பெறுவது இல்லை.*

*மறுநாள் நாம் பூஜை செய்த விளக்குகள்(இலை, நவ தானியம் உட்பட) ஒரு துளி கூட சிந்தாமல் அனைத்து பாெருட்களையும் நதியில் சேர்த்து விட வேண்டும். இது கட்டாயம். ஏனென்றால் "ஒவ்வாெரு பாெருளும் ஏன் ஒவ்வாெரு எள்ளும் கூட ஒரு ஆத்மா". ஆதலால் நதியில் சேர்த்து விட வேண்டும். கண்டிப்பாக முறையாக அனுமதி பெற்று தான் தீபம் ஏற்ற பட வேண்டும்.*

                🙏 *-சுபம்-* 🙏

 *🙏ஸ்ரீ லாேபாமுத்திரை தேவி சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*

*🙏 குரு திருவடி சரணம்! சரணம்!🙏*

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*

.மேலே உள்ள பதிவு திரு S. Prabhu என்பவர் தினம் ஒரு அகத்தியர் வாக்கு என்ற whats up குழுவில் உள்ள பதிவிலிருந்து எடுக்கப்பட்டு தினமும் இங்கே  பதிவு செய்யப்படுகிறது. நல்ல பதிவுகளை பகிர்வதில் தவறில்லையே !!!.
************************************

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.

தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏

Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583

கூகிள் வரைபடம் வழி கீழே 👇

https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in

முகநூல் -

https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/

*************************************************

நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள் வாங்க... அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

அகத்தியப்பெருமான் தரிசனம் செய்த மற்றும் ஸ்தாபித்த ஆலயங்களைப் பற்றிய விபரமான நூல் தயாராகி விட்டது. அகத்தியர் அடியவர்கள் அனைவரும் வாங்கி படித்து பலன் பெற வேண்டுகிறோம். நூல் வேண்டுவோர் தொடர்புக்கு அறந்தாங்கி சங்கர் 9444160161

************************************************