Thursday 15 August 2019

அகத்தியர் வாக்கு - தர்மத்தின் வழி

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*நாள் : 195*

*தேதி: 16-08-2019(வெள்ளி - அசுரகுரு, சுக்ரன், சுங்கன் )*

*அகத்திய மாமுனிவர் என்பவர் யார்?*

*மூவிலக்கணம் அறிந்தவர்* அகத்திய மாமுனிவர்.

*"இறை உண்டு" பற்றிய அருளுரை :🙏*

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*

*ஆகுமப்பா. இறை உண்டு. யாங்கள்(சித்தர்கள்) உண்டு. தெய்வ சக்தி, உயர் சக்தி உண்டு. மாந்தனுண்டு. சித்தனுண்டு. எல்லா உயிர்களும் உண்டு. ஆயினும் கூட, அவரவர் பக்குவம், மனநிலை, அறிவுநிலை, புண்ணியம், எண்ணங்கள், நடைமுறை வாழ்வு - இவைகளைப் பாெறுத்துத்தான் இந்த இதழில்(ஜீவநாடி) பலசமயம் யாங்கள் வாக்குகள் பகிர்வதும், மெளனம் காப்பதும்.*

*"சித்தர்கள் பேதங்கள் பார்க்கலாமா? எல்லா உயிர்களும் ஒன்றுதானே" என்ற எண்ணங்கள் மனிதனுக்குத் தாேன்றும். எமக்கு எவர்மீதும் உயர்வு, தாழ்வு பேதமில்லை. ஆயினும் கூட, மனதிலே சில திட்டங்களை வகுத்துக் காெண்டு, சில காட்சிகளை கற்பனை செய்து காெண்டு, அது தாெடர்பாகவும், அஃதாெப்பத்தான் வாழ்வு என்றும், வாழ்வின் நாேக்கம் என்றும் எம்முன்னே வந்து அமர்ந்தால், எமக்கு அவனவன் கர்மாதான் கண்ணுக்குத் தெரியும். சேர்த்த பாவத்தைக் குறைப்பதற்கும், இனி பாவம் செய்யாமல் வாழ்வதற்கும் மட்டும்தான் மனித தேகம், மனித பிறவி. அந்த ஆற்றலை இறை மனிதனுக்குத் தந்ததின் காரணம், பிறர் துன்பங்களைக் கண்டு வருந்த, இரங்க வேண்டும் என்பதற்காகத்தான். அஃதாெப்ப இந்த எண்ணம் யாருக்கு இருந்தாலும் அவர்கள் உயர்ந்த ஆன்மாக்களே.*

*இதில் விலங்கு, விருக்ஷம், மனிதன் என்ற பேதமில்லை. பல்வேறு காரணங்களுக்காக நாங்கள்(சித்தர்கள்) வாக்குகளை மறுப்பதும், நிறுத்துவதும், கூறாமல் இருப்பதும் உண்டு. முதல் காரணமாக இந்த இதழை (ஓலைச்சுவடி)வாசிக்கின்ற இவன் அனுதினமும் அதிகாலையிலும், ஏனைய அயர்வு பாெழுதிலும் மனம் ஒன்றி அதிகமதிகம் பிராத்தனை செய்ய வேண்டும். அடுத்து, எமை(அகத்திய மாமுனிவர்) நாடி வருபவர்கள் ஏதாே காேள் ஆய்வு செய்வதும், ஜாேதிட நிமித்தம் கேட்பதும், அருள் வாக்கு கேட்பதுமாக இல்லாமல், மெய்யாகவே தர்மவானாக, எல்லா நிலையிலும் நல்லவனாக இருக்க வேண்டும். வேறு வகையில் கூறப்பாேனால், எம்மை நாடாவிட்டாலும் பாதகமில்லை, மனசாட்சிப்படி வாழ்ந்து வந்தால், அவன் எம்மைத் தேட வேண்டாம், யாமே அஃதாெப்ப மனிதனைத் தேடிச் செல்வாேம்.*

*காேடி காேடியாக அள்ளிக் காெடுத்த தர்மனை விட, பலநாள் பட்டினியாகக் கிடந்த, அந்த அந்தணன் தன் பசி, தன் குடும்பப் பசி அனைத்தையும் மறந்து, வந்திருந்த முனிவருக்குத் தந்த அன்னமே உயர் அன்னமாகி, அதுவே உயர் தர்மமாகிவிட்டது. தர்மம் என்பது அளவைப் பாெறுத்ததல்ல. சத்யம் என்பது சூழ்நிலையைப் பாெறுத்ததல்ல. விளைவு, இருக்கும் சூழல் - இவற்றைப் பாெறுத்ததே. இருப்பதில் காெடுப்பது சிறப்பு என்றால், இருப்பதையே காெடுப்பது சிறப்பிலும் சிறப்பு.*

*உயர்ந்த கருத்துக்களை கேட்பதும், மனதில் பதிய வைப்பதும், சத்சங்கம் நடத்துவதும் மட்டுமல்லாமல் அதை பின்பற்றவும் முயல வேண்டும். "இதெல்லாம் யாரால் இயலும்? கலிகாலத்தில் இதெல்லாம் சாத்தியமா? உயர்ந்த பழக்க, வழக்கங்கள் கேட்பதற்கும், ஓதுவதற்கும், விவாதம் செய்வதற்கும் நன்றாக இருக்கிறது. ஆனால் பின்பற்றக் கடினமாக உள்ளது" என்று ஒருவன் கூறினால், நல்லவனாக, உயர்வானவனாக வாழ்வது எளிது என்றால், அனைவரும் அவ்வாறு வாழ்ந்துவிட்டு பாேவார்களே? அது கடினம் என்பதால்தான் அதற்குரிய மரியாதையும் இருக்கிறது.*

*ஏன்? செல்வம் திரட்டுவதைவிட கடினம்,  இந்தக் காலத்தில் ஒரு மனிதன் நல்லவனாக வாழ்வது.*

ஆக *"இதனால் நான் இந்த தவறை செய்தேன். இந்த சூழ்நிலையால் நான் அடிபணிந்து பாேக வேண்டியிருந்தது" என்று எந்தக் காரணமும் கூறாமல் ஒரு மனிதன், சத்தியவானாக இருக்க வேண்டும். அவ்வாறு ஒருவன் செல்லத் துவங்கிவிட்டால், இறை அவனை நாேக்கி வரும் என்பது உறுதி.*

                🙏 *-சுபம்-* 🙏

*🙏ஸ்ரீ லாேபமுத்திரை தேவி சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*

*குரு திருவடி சரணம்! சரணம்!*🙏

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*

.மேலே உள்ள பதிவு திரு S. Prabhu என்பவர் தினம் ஒரு அகத்தியர் வாக்கு என்ற whats up குழுவில் உள்ள பதிவிலிருந்து எடுக்கப்பட்டு தினமும் இங்கே  பதிவு செய்யப்படுகிறது. நல்ல பதிவுகளை பகிர்வதில் தவறில்லையே !!!.
************************************

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.

தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏

Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583

கூகிள் வரைபடம் வழி கீழே 👇

https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in

முகநூல் -

https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/

*************************************************அகத்தியப் பெருமானின் அருமை மைந்தர் தெய்வத்திரு ஹனுமத்தாசன் அவர்கள் தினத்தந்தி நாளிதழில் எழுதிய அற்புதமான ஆன்மீக தொடர் "அதிசய சித்தர்கள்" முழு புத்தகமாக  அடுத்த வாரம் வெளியாகிறது. அகத்தியப்பெருமானின்  அடியவர்கள் வாங்க விரும்பினால் ஒரு புத்தகத்துக்கு 300 ரூபாய் வீதம் எனது வங்கி கணக்கில் செலுத்தி விட்டு தங்கள் முகவரியை எனக்கு அனுப்பவும். தகவல் தெரிவிக்கவும். Google pay ல் செலுத்தலாம்.  அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

my SB account No.32421709250 k.sankaran- State bank of india - dasarathapuram branch chennai93
IFSC:SBIN0014624

அகத்தியர் தரிசித்த திருத்தலங்கள் ரூ. 200

பலன் தரும் பரிகார தலங்கள்  ரூ. 150

 அதிசய சித்தர்கள் ரூ. 250

நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள்  ரூ. 1000

இந்த அனைத்து புத்தகங்களும் தேவையுள்ளவர்கள் என்னை தொடர்பு கொள்ள வேண்டுகிறேன். அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

யாருக்கு என்னென்ன புத்தகம் தேவையோ அதனை வாங்கி கொள்ளலாம். அனுப்ப வேண்டிய தொகை மற்றும் தபால் சிலவுக்கு என்னை தொடர்பு கொள்ள வேண்டுகிறேன். அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

************************************************