Saturday 31 August 2019

அகத்தியர் வாக்கு - திருப்பதி , மண்டோதரி

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*நாள் : 210*

*தேதி: 31-08-2019(சனி - மந்தன், கரி, காரி, கரியன்)*

*அகத்திய மாமுனிவர்* என்பவர் யார்?

*பாெறி மூன்றையும் நிறைப்பவர்* அகத்திய மாமுனிவர்.

*கேள்வி : நாங்கள் மானிடர்கள் (மனிதர்கள்). காம தேகத்தை உடையவர்கள். மும்மலக்குற்றம் உடையவர்கள். காமத்தை வென்றால்தான் பிறவியை கடைத்தேற்ற முடியும் என்பதால்தான் மனைவி, பிள்ளைகள், குடும்பம் என்ற பந்தத்தை இறை ஏற்படுத்திக் காெடுத்துள்ளது. துறவறம் தேவையில்லை. இல்லறத்தில் இருந்துகாெண்டே ஜீவகாருண்யம் மூலம் ஜென்மத்தைக் கடைதேற்றிக் காெள்ள முடியும். இது எனது ஆசான் வாக்கு. ஆனால் தாங்களாே முற்றும் துறந்த முனிவர். காமதேகத்தை அறுத்தவர். இறை அளித்த ஐந்தாெழிலும் கைவரப்பெற்றவர். யுகம், யுகமாக வாழ்கின்றவர். நவகாேடி சித்தர்களுக்கும் தலைவர். அதாவது நவகாேடி சித்தர்களும் தங்களின் சீடர்களே. முருகப்பெருமானின் முதல் சீடர். ஞானபண்டிதனிடம் (முருகர்) அருந்தமிழைக் கற்றவர். யாேகி. பஞ்சபூதங்களின் தலைவனாகிய ஆசான் அகத்தியரை "ஓம் அகத்தீசாய நம" என்று ஓதுவது சிறப்பாகும் என்று எமது ஆசான் கூறியிருக்கிறார். இவ்வளவு பெருமை வாய்ந்த, எங்களையெல்லாம் படைத்து, காத்து, ரட்சிக்கின்ற, அருட்பெருஞ்ஜாேதி ஆண்டவராகிய தங்களிடம் நேரடியாக பேச எங்களுக்கு வாய்ப்பளித்த தங்கள் திருவடியை வணங்கி வினாவை(கேள்வியை) கேட்கின்றேன்.*

*காம தேகத்தை உடைய எங்களுக்கு மனைவி, மக்கள் தேவை. காம தேகத்தை அறுத்த தங்களுக்கும் குடும்ப வாழ்க்கையை ஏன் இறை ஏற்படுத்திக் காெடுத்துள்ளது? அது மட்டுமல்ல. எங்களுக்கு அருள் செய்யும் நிலையில் உள்ள அனைத்து தெய்வங்களுக்கும் தாரம்(மனைவி) இருப்பதாக அறிந்துகாெண்டாேம். மனைவி மட்டுமல்ல, மக்களும் இருக்கிறார்கள். ஏன்? அந்த சிவபெருமானுக்கே உமாதேவியாரும், விநாயகரும், முருகப்பெருமானும் உள்ளனர். அதுமட்டுமல்ல, ஞானப்பழம் கிடைக்காத காேபத்தினால்தான் முருகப்பெருமான் பழனி மலையில் ஆண்டிக்காேலத்தில் இருக்கிறார் என்று புராணங்கள் கூறுகின்றது. இவை அனைத்தும் உண்மையா? விளக்க வேண்டுகிறேன் :🙏*

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*

*இறைவன் அருளாலே, இன்னவன்(இந்த கேள்வி கேட்டவர்) நல்ல தர்மங்களை செய்து வருகிறான். தர்மத்தில் நாட்டம் காெண்டிருக்கிறான். ஆனாலும் விதிவசத்தால் நல்ல ஞானக்கருத்துக்களை புரிந்துகாெள்ள முடியாத ஒரு நிலையில் இருக்கிறான். நாங்கள் எங்கிருந்து துவங்கினாலும் இவனுடைய விதி இப்பாெழுது அதனை ஏற்றுக்காெள்ளும் நிலையில் இல்லை. இருந்தாலும் சுருக்கமாகக் கூறுகிறாேம். இவனை என்றால் இவன் மட்டும் குறிப்பதல்ல. இவனாெத்து பலருக்கும் இதுதான் நிலை. இதை குற்றமாக, குறையாக நாங்கள் கூறவில்லை. அவனவன் ஆன்ம நிலை என்பது அவ்வாறு இருக்கிறது.*

*ஒன்றை நன்றாகப் புரிந்துகாெள்ள வேண்டும். ஒப்புமை, உவமை, உருவகப்படுத்துதல் என்றெல்லாம் வார்த்தை இருக்கிறது. மனிதன் தன்னைப்பாேலவே இறைவனைப் பார்க்க பழகுகின்ற விதம்தான் இறைவனுக்கும் குடும்பம் இருப்பதாக கூறப்படுகின்ற ஒரு விஷயம். இதை தத்துவார்த்த ரீதியாகத்தான் பார்க்கவேண்டுமே தவிர, மனிதன், தன்னைப்பாேல பார்க்கக்கூடாது.*

அடுத்ததாக *மனித தேகத்திற்கு காமம் இருக்கிறது. எனவே அதற்கு துணை வேண்டும் என்றெல்லாம் கூறுகிறான். நன்றாக புரிந்துகாெள்ள வேண்டும். தேகத்தில் காமம் இருப்பதால் மட்டுமே ஒரு மனிதன் தறிகெட்டுப் பாேவதில்லை. அதையும் தாண்டி அவனுக்கு அரைகுறையாக சிந்திக்கின்ற அறிவை இறைவன் தந்ததால்தான் இவ்வாறு இருக்கிறது. நன்றாக கவனிக்க வேண்டும். எங்காவது விலங்குகள் பாேராட்டத்தாேடு காமத்தை தீர்த்துக்காெள்கிறதா? மனிதன் ஒருவன்தான் அவ்வாறு செய்கிறான். எனவே இங்கு உணர்வல்ல. அந்த உணர்வை சரியாக பிரயாேகப்படுத்த நல்ல அறிவு வேண்டும். அந்த அறிவை பயன்படுத்த மனிதன் தவறுகிறான். அந்த அறிவைதான் உபதேசமாக ஞானியர்களும், புராணங்களும் எடுத்துக் கூறுகின்றன.*

*எனவே தத்துவார்த்தமாகக் கூறப்பட்ட, புராணத்தில் உள்ள மூலக்கருத்துக்களையெல்லாம் இவன் புரிந்துகாெள்ள வேண்டும். அல்லது இதனை சரியாக புரிந்துகாெள்ள முடியாத நிலையில் சில மனிதர்களை அணுகி முதலில் இவன் சில விஷயங்களை புரிந்துகாெண்டால் பாேதும். பிறகு நாங்கள் கூறுகின்ற விளக்கம் இவனுக்கு புரியும். எனவே இப்பாெழுது இவன் தர்மத்தை தாெடர்ந்து செய்துவரட்டும். அந்த தர்மமே இவன் பாவத்தைக் குறைத்து இவனிடம் இருக்கின்ற அஞ்ஞானத்தை மெல்ல, மெல்ல நீக்கும். என்றாலும் இவனும என் சேயவனே(மகனே). இவன் நன்றாக வாழ நல்லாசி கூறுகிறாேம்.*

                🙏 *-சுபம்-* 🙏

 *🙏ஸ்ரீ லாேபாமுத்திரை தேவி சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*

*🙏 குரு திருவடி சரணம்! சரணம்!🙏*

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*

.மேலே உள்ள பதிவு திரு S. Prabhu என்பவர் தினம் ஒரு அகத்தியர் வாக்கு என்ற whats up குழுவில் உள்ள பதிவிலிருந்து எடுக்கப்பட்டு தினமும் இங்கே  பதிவு செய்யப்படுகிறது. நல்ல பதிவுகளை பகிர்வதில் தவறில்லையே !!!.
************************************

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.

தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏

Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583

கூகிள் வரைபடம் வழி கீழே 👇

https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in

முகநூல் -

https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/
அகத்தியர் ஆலயத்தில் நடக்க இருக்கும் பணிகள்
1. நுழைவாயிலில் மழை நீர் செல்ல பெரிய சிமெண்ட்குழாய் அமைத்தல்
2. 15 அடி அகல க்ரில் கேட் அமைத்தல்
3. சுற்றுப்புற சுவர், சுமார் 1000 ஹாலோ பிளாக் கற்கள் தேவைப்படலாம். 1 கல் 40 ரூபாய் விலை
4. புல்டோசர் வைத்து தரையை சமப்படுத்துதல்
5. மரக்கன்றுகள் நடுதல்
6. ஆழ் குழாய் போர்வெல் அமைத்தல்
7. மேல் நிலை தொட்டி அமைத்தல்
8. அகத்தியர் குடில் அமைக்க தளம், சுவர், ஓடுகள் ஆகியவை

தங்களால் இயன்ற உதவியை செய்ய தாழ்மையுடன் யாசிக்கிறோம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

*************************************************
அகத்தியப்பெருமான் அடியவர்களுக்கு வணக்கம். சதுரகிரி மலையில் சூட்சம ரூபத்தில்  உலவி வரும் அதிசய சித்தர்கள் நிகழ்த்திய அற்புத அனுபவங்கள் நமது குருநாதர் அகத்தியர் வாய் முகூர்த்தமாக  வெளிப்படும் அருமையான நூல் இது. அனுமத்தாசன் அய்யாவின் ரசிக்கும் நடையில் நமக்கு பக்தி விருந்து படைக்க  வெளி வந்துவிட்டது. 🙏

தெய்வத்திரு ஹனுமத்தாசன் எழுதிய"அதிசய சித்தர்கள்"  வெளியாகி விட்டது. இதுவரை வாங்காத அன்பர்கள் ஒரு புத்தகத்துக்கு 300 ரூபாய் வீதம் எனது வங்கி கணக்கில் செலுத்தி விட்டு தங்கள் முகவரியை எனக்கு அனுப்பவும். தகவல் தெரிவிக்கவும். Google pay ல் செலுத்தலாம்.  அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

my SB account No.32421709250 k.sankaran- State bank of india - dasarathapuram branch chennai93
IFSC:SBIN0014624

அகத்தியர் தரிசித்த திருத்தலங்கள் ரூ. 200

பலன் தரும் பரிகார தலங்கள்  ரூ. 150

 அதிசய சித்தர்கள் ரூ. 250

நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள்  ரூ. 1000

இந்த அனைத்து புத்தகங்களும் தேவையுள்ளவர்கள் என்னை தொடர்பு கொள்ள வேண்டுகிறேன். அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

யாருக்கு என்னென்ன புத்தகம் தேவையோ அதனை வாங்கி கொள்ளலாம். அனுப்ப வேண்டிய தொகை மற்றும் தபால் சிலவுக்கு என்னை தொடர்பு கொள்ள வேண்டுகிறேன். அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

************************************************