Sunday 25 December 2022

ஓம் போக்த்ரே நமஹ , விஷ்ணு ஸஹஸ்ரநாமக்கதைகள்

 *அனந்தனுக்கு ஆயிரம் திருநாமங்கள்*!


*விஷ்ணு ஸஹஸ்ரநாமக்கதைகள்*!!


நல்ல ஆரோக்கியத்தையும், நீங்காத செல்வத்தையும், மன நிம்மதியையும் தரவல்லது விஷ்ணு ஸஹஸ்ரநாமம்.


அந்த உடலுக்கு ஏற்பட்ட நோய்கள் மட்டுமின்றி ஆத்மாவைப் பீடித்துப் படுத்தும் நோயாகிய பிறவிப் பிணியையும் போக்க வல்ல மருந்து  விஷ்ணு ஸஹஸ்ரநாமம்.


அந்த விஷ்ணு ஸஹஸ்ரநாமத்திலுள்ள 

1000 திருநாமங்களின் பொருளை எளிய கதைகள் மூலம் உணரலாம், வாருங்கள்.


145::.போக்த்ரே நமஹ (Bhokthre namaha)


திருமலைக்கு ஸ்ரீநிவாசப் பெருமாள் வருவதற்கு முன், அம்மலையில் ஒரு வேப்ப மரத்தின் வடிவில் பெருமாள் எழுந்தருளியிருந்தார்.


மரத்தின் வடிவிலுள்ள பெருமாளுக்கு அங்கு வாழ்ந்த வேடன் ஒருவன் தினமும் தேனும் தினைமாவும் சமர்ப்பிப்பதை

வழக்கமாகக் கொண்டிருந்தான். 


பெருமாளுக்குச் சமர்ப்பித்த பின், அவர் அமுது செய்த பிரசாதமாகக் கருதி,

அந்தத் தேனையும் தினைமாவையும் அவன் உட்கொள்வான்.


அவனுக்கு ஒரு மகன் இருந்தான். 


தன்னைப் போலவே தன் மகனையும் பக்தி உள்ளவனாக வளர்த்தான் அந்த வேடன்.


“நீ பெருமாளுக்கு நிவேதனம் செய்யாமல் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட அருந்தக் கூடாது!” என்று சொல்லியே

தன் மகனை வளர்த்தான். 


ஒருநாள் வேடனும் அவன் மகனும் பெருமாளுக்கு நிவேதனம் செய்வதற்காகத் திருமலைக்குச் சென்றார்கள்.


வேடன் தனது பையைப் பிரித்துப் பார்த்தபோது, அதில் தினைமாவு மட்டுமே இருந்தது. தேனைக் கொண்டு வர மறந்துவிட்டான்.


“மகனே! இங்கேயே இரு இம்மலையிலுள்ள தேன் கூடுகளுள் ஒன்றில் இருந்து தேன் கொண்டு வருகிறேன்!” என்று சொல்லிவிட்டு

வேடன் சென்றான். 


வெகுதூரம் சென்றும் அவனுக்குத் தேன் கிடைக்கவில்லை.


தினைமாவோடு மரத்தடியில் காத்திருந்த சிறுவனுக்கோ பசி தாங்கவில்லை.


“ஏழுமலையானே! இன்று தேன் கிடைக்காததால் தினைமாவை மட்டும் உனக்குச் சமர்ப்பிக்கிறேன்!” என்று பெருமாளுக்கு

வெறும் மாவை நிவேதனம் செய்துவிட்டு அந்தச் சிறுவன் அதை உண்ணத் தொடங்கினான்.


ஒரு பிடி மாவை அவன் வாயில் போட்டுக் கொண்டபோது, அங்கே தேனுடன் வேடன் வந்துவிட்டான்.


பெருமாளுக்குச் சமர்ப்பிக்காமலேயே தினைமாவைத் தன்மகன் உட்கொள்வதாக எண்ணிய வேடன், சிறுவனின் தலையை வெட்டுவதற்காகத் தன் வாளை உருவினான்.


அப்போது மரத்தைப் பிளந்து கொண்டு அங்கே ஸ்ரீநிவாசப் பெருமாள் தோன்றினார்.


நீலமேகம் போன்ற நிறத்துடனும், கௌஸ்துபம், வைஜயந்தி வனமாலை உள்ளிட்ட அணிகலன்களோடும்,

சங்கு சக்கரங்களைக் கையில் ஏந்தியபடியும் வேடன்முன் நின்ற ஸ்ரீநிவாசன்,

“அந்தச் சிறுவன் பக்தி என்னும் தேன் கலந்த தினைமாவை எனக்குச் சமர்ப்பித்துள்ளான்.


அதை நான் மனமுவந்து ஏற்றுக்கொண்டேன்!” என்று கூறினார்.


மேலும், “பக்தியோடு இலையோ, பழமோ, புஷ்பமோ, தண்ணீரோ எதைச் சமர்ப்பித்தாலும் நான் அதை ஏற்பேன்.


இவை எதையும் சமர்ப்பிக்க முடியாவிட்டால், என் பக்தன் கண்ணீரை மட்டும் சமர்ப்பித்தாலும் கூட போதும்!

நான் அதை ஏற்று அருள்புரிவேன்!” என்றார்.


இவ்வாறு வேடனுக்கும் அவன் மகனுக்கும் பெருமாள் திருமலையில் அருள்புரிந்த நாள் ஒரு புரட்டாசி மாத சனிக்கிழமை ஆகும்.


இச்சம்பவத்தின் நினைவாகத் தான் புரட்டாசி சனிக்கிழமைகளில் நம் வீடுகளில் மாவிளக்கு ஏற்றுகிறார்கள்.


அந்த வேடன் சமர்ப்பித்த தினைமாவுக்குப் பதிலாக அரிசிமாவும், தேனுக்குப் பதிலாக வெல்லமும் கலந்து

அதன்மேல் திரியிட்டு விளக்கேற்றுகிறோம்.


“ச்ருதி சிரஸி விதீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீநிவாஸே” என்று ராமாநுஜர் கூறியபடி, திருமலை என்னும் மலைக்கு மேல்

தீபம் போல் திருமால் விளங்குவதைக் குறிக்கும் விதமாக,மலைபோல்

அரிசி மாவையும் வெல்லத்தையும் வைத்து, அதன்மேல் மாவிளக்கு ஏற்றுகிறோம்.


இவ்வாறு பக்தியுடன் தனது அடியார்கள் சமர்ப்பிக்கும் பண்டங்களை அமுது செய்து அவர்களுக்கு அருள்புரிவதால்,

திருமால் ‘போக்தா’ என்றழைக்கப்படுகிறார்.


‘போக்தா’ என்றால் உண்பவர் என்று பொருள்.


அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 145-வது திருநாமம்.


“போக்த்ரே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அடியவர்கள் சமர்ப்பிக்கும் அனைத்துப் பொருட்களையும்

திருமால் மனமுவந்து ஏற்றுக் கொண்டு அருள்புரிவார்.


ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்


https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1


ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583

https://agathiyarpogalur.blogspot.com/?m=1


முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.


*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.


தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.


ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.

பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.

நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.

மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.


தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏


Agathiyar Temple JeevaNadi

Tiruppur, Tamil Nadu

093843 95583


கூகிள் வரைபடம் வழி கீழே 👇


https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in


முகநூல் -


https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/

No comments:

Post a Comment