Friday 2 December 2022

2022, கார்த்திகை, டிசம்பர் 5,6,7 ஆகிய 3 நாட்களுக்கு தீபம் ஏற்ற வேண்டும்

 பரணி, கார்த்திகை, ரோகிணி நட்சத்திர நாட்களில் தீபங்கள் ஏற்ற வேண்டும். இந்த ஆண்டு டிசம்பர் 5,6,7 ஆகிய 3 நாட்களுக்கு தீபம் ஏற்ற வேண்டும். நம்முடைய வீட்டில் எங்கும் இருளே இல்லாதபடி நிறைய அகல் விளக்குகளை ஏற்றுங்கள். வீட்டில் இருக்கும் அனைத்து வாசல் களிலும் தீபம் ஏற்ற வேண்டும். தலைவாசலில் புதிய அகல் விளக்குகள் கொண்டு தீபமேற்ற வேண்டும். பின்னர் மறந்து விடாமல் சமைய லறையிலும் விளக்கேற்றுவது அவசியம். சமையல் அறையில் நிச்சயம் தீபம் ஏற்றிவைக்க வேண்டும்.  பால்கனி, வராண்டா, மாடிப்படிகளில் கோலம் போட்டு தீபம் ஏற்றலாம். துளசி செடிக்கு ஏற்றுங்கள். நெல்லி, மாதுளை இருந்தால் நிச்சயம் ஏற்றி வைக்க வேண்டும் இந்த மரங்கள் மகாலக்ஷ்மி அம்சம் கொண்டவை. தீபத்திருநாளில் தீபம் ஏற்றி வழிபட நம் இல்லத்தில் அன்னை மகாலட்சுமி குடியேறுவாள் என்பது நிச்சயம்.

No comments:

Post a Comment