Thursday 18 October 2018

இன்று என்னுடய ஜீவ நாடி வாக்கு 18Oct18


இன்று 18.10.2018, சரஸ்வதி பூஜை அன்று நானும் என் நண்பர் சமுத்திர ராஜனும் பொகளூர் அகத்தியர் ஜீவ நாடி பீடத்திற்கு சென்று, அங்கு நடந்த வியாழக்கிழமை சிறப்பு பூஜையில் பங்கேற்றோம்.

அவற்றின் படங்கள் சில












இன்று பூசை முடிந்து சுமார் மாலை 6:20 மணி அளவில் ஜீவ நாடியில் அகத்தியரிடம் வாக்கு கேட்டோம். அகத்தியரின் வரிகள் கீழ் வருவன.

ௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐ

எமை நித்தம் தொழும் மழலையே, உமை யாம் காப்போம்.

பூசை தனிலே நீ செய்த சிறு தொண்டினை கண்டோம், யாம் மனம் மகிழ்ந்து ஆசி தந்தோம்.

உனக்கு அன்றுரைத்தேன் ஆலயப்பணி அதை செய் மகனே, சிதறிய செல்வம் அது உன்னிடத்தில் வந்து சேரும்.

நீ உயர் நிலை அடையக்கடைவாயே

கொண்டவளுடன் (மனைவியுடன்) வீண் பிடகளை (வாக்குவாதம்) வேண்டாம் மகனே.

அவள் கர்மமது விட்டொழியும் நிலை பெறுவாளே.

யாம் உன்னுள் இருந்துஉனை இயக்கசெய்வோமே

யாம் உம்மை வந்து உற்று நோக்கிச்சென்றோமே

உன் வாழ்வது சிறக்கும் ஏன் மகனே

உனை ஈன்றவள் தேகம் சீர் பெரும் அப்பா

மனம் தளராதே தூயவனே, நல்லாயுளை கொடுத்து அந்த ஆத்மாவை யாம் முக்தி நிலைக்கு அழைத்து செல்வோம்.

இது சித்தனின் நித்த வாக்கே.

- முற்றே -