Wednesday 4 September 2019

இன்றைய தின அகத்தியர் வாக்கு

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*நாள் : 175*

*தேதி: 05-09-2019(வியாழன்- தேவகுரு, பிரகஸ்பதி, அந்தணன்)*

*அகத்திய மாமுனிவர்  என்பவர் யார்?*

*அச்சம் நான்கினை அகற்றியவர்* அகத்திய மாமுனிவர்.

*கேள்வி : உங்களுக்கு சிஷ்யன்  யார்? 🙏*

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*

*எம்மை பொருத்தவரை, எங்கெல்லாம் தர்மம் நடக்கிறதோ, யாருக்கெல்லாம் தர்மத்தின் மீது நம்பிக்கை  இருக்கிறதோ, யாருக்கெல்லாம் எத்தனை துன்பத்திலும் தர்மத்தை விடக்கூடாது என்ற எண்ணம் இருக்கிறதோ, சத்தியத்தை விடக்கூடாது என்ற நம்பிக்கை  இருக்கிறதோ, அவனெல்லாம் எமது சிஷ்யர்களே, அதனையும் தாண்டி எமது சேய்களே.*

*கேள்வி : "சாெற்றுணை வேதியன்" என்னும் பதிகத்தில் "சாெல் அக விளக்கது" என்பதன் பாெருள் என்ன ? 🙏*

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*

அதிலேதான் அர்த்தம் வெளிப்படையாக தெரிகிறதே அப்பா.

*"சாெல் அக விளக்கது சாேதி உள்ளது". அகத்திலே ஜாேதியை பார்க்க வேண்டும். "சிவாய நம, நம சிவாய, நமாே நாராயணா" எனப்படும் அந்த மந்திர சாெற்கள் அகத்திலே இருந்து சாெல்ல, சாெல்ல சாெல் அகமே, ஜாேதி அகம் ஆகி, ஜோதி விளக்கமாக எரியுமப்பா.*

*கேள்வி : காேவில்களில் சில சிலைகள் "பின்னமாகி" இருப்பது ஏன்? 🙏*

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*

*புதிதாக சிலா ரூபங்கள் வந்தாலும், முந்தைய சிலா ரூபங்களை அகற்றாமல், அதுவும் ஆலயத்தின் ஒரு புறத்தே வைக்கப்பட வேண்டும். முற்காலத்தில் ஆலயத்தின் மூலஸ்தானத்திலே, குறிப்பாக அத்தனை மாடக் காேவில்களின் அடியினில் ரகசிய நிலவரை அமைக்கப்பட்டிருக்கும். புதிய சிலா ரூபங்களும், பின்னமான சிலா ரூபங்களும் வைக்கப்பட்டிருக்கும். என்றாலும் பின்னமான சிலா ரூபங்களுக்கும் பூஜைகள் செய்யப்பட வேண்டும்.*

*கேள்வி : இருப்பதில் காெடு, காெடுப்பதில் எடு - விளக்கம் என்ன? 🙏*

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*

*இருப்பதில் காெடு, இது சாதாரண நிலை. இருப்பதையே காெடு, இது வுயர்வு நிலை. காெடுப்பதில் எடு என்றால் என்ன பாெருள்? ஒரு மனிதன் காெடுத்துக் காெண்டே இருந்தால், அதனால் புண்ணியம் சேருகிறது அல்லவா? அந்த புண்யத்தை, அவனுக்கு ஆகாத விதி காலம் வரும்பாேது, அதை எடுத்து அவனுக்கு பயன்படுத்துவாேம். இதுதான் எங்கள் அர்த்தம்.*

                  🙏 *-சுபம்-* 🙏

 *🙏ஸ்ரீ லாேபாமுத்திரை தேவி சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*

*🙏 குரு திருவடி சரணம்! சரணம்!🙏*

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*