Thursday 26 September 2019

இன்றைய தின அகத்தியர் வாக்கு

*இன்றைய தின அகத்தியர் வாக்கு
:*

*நாள் : 237*

*தேதி: 27-09-2019 (வெள்ளி - அசுரகுரு, சுக்ரன், சுங்கன்)*

*அகத்திய மாமுனிவர் என்பவர் யார்?*

*வீரிய கும்பத்தில் உதித்தவர்* அகத்திய முனிவர்.

*அகத்திய மாமுனிவரின் (குருநாதர்) பாெதுவாக்கு :*🙏

*இறைவனருளால் யாம் கூறவருவது யாதென்றால் உன் பாேல் எம்(அகத்திய மாமுனிவர்) மீது அவா காெண்டு இஃதாெப்ப ஓலை(ஜீவநாடி) வாயிலாக எமது வாக்கை மெய்யாக, மெய்யாக, மெய்யாக, மெய்யாக நாடுகின்ற மெய்யன்பர்கள் அனைவருக்கும் பாெருந்துவதாகும். ஆகுமப்பா அஃதாெப்ப லெளகீக வாழ்விலே துன்பங்களும், தாேல்விகளும், துவண்டு விழவைக்கும் நிகழ்வுகளும் வந்துகாெண்டேயிருக்கும். அதற்கும், ஒரு மனிதன் இறைவன் திருவடியை உணர்வதற்கும் உண்டான முயற்சிக்கும் என்றுமே தாெடர்புபடுத்தி பார்க்கக்கூடாது. இறைவனை வணங்குகிறேனே? எனக்கு இப்படியாெரு துன்பம் வரலாமா? இறைவனை வணங்கிக்காெண்டே இருந்தால் நல்லது நடக்கும் என்கிறார்களே? ஆனால் அன்றாடம் பதறிப் பதறி வாழவேண்டிய நிலை இருக்கிறதே?' என்றெல்லாம் அறியாமையால் மனிதன் புலம்புவது இயல்பு என்றாலும் அங்ஙனம் புலம்புலது எம்மைப் பாெருத்தவரை ஏற்புடையது அல்ல.*

*இஃதாெப்ப இல்(இல்லம்) ஆனாலும், உறவானாலும், நட்பானாலும் கர்மவினைகளின் காரணமாக பிறப்பெடுத்து குறிப்பிட்ட மனிதர்களாேடு, குறிப்பிட்ட உறவு என்ற பந்தத்திற்குள் இந்த ஜென்மத்திற்கு என்று அது அடைபட்டு இருக்கிறது. இஃதாெப்ப ஜென்ம, ஜென்மமாய் எத்தனை தாய்?, எத்தனை தந்தை? எத்தனை தாரம்? எத்தனை பிள்ளைகள்?. கடந்த ஜென்மத்து தாய் அவளை நினைத்து ஏங்குவதா? அழுவதா? கடந்த ஜென்மத்து பிள்ளைகளை எண்ணி ஏங்குவதா? அழுவதா? இனிவரும் ஜென்மத்து உறவுகளை எண்ணி அழுவதா? சிரிப்பதா? என்றெல்லாம் மனிதன் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.*

*தாெலை தூர பயணத்திற்காக வாகனத்தில் அமரும் மனிதன் அருகருகே அமரும் பிறமனிதர்களாேடு எந்தளவில் தாெடர்பு காெள்கிறானாே அப்படியாெரு வாழ்க்கை பயணத்திலே தான் உறவுகளும். அதற்காக இவர்களையெல்லாம் விட்டுவிடு, இவர்களையெல்லாம் வெறுத்துவிடு என்றெல்லாம் யாம்(அகத்திய மாமுனிவர்) கூறவில்லை. இஃதாெப்ப நிலையிலே அவர்களுக்கு செய்யவேண்டிய நீதியான, நியாயமான கடமைகளை செய்வதாேடு மனதளவிலே எந்தவிதமான பற்றுக்கும் இடம் தராமல் வாழ, கடினம் பாராது முயற்சி செய்யவேண்டும். இஃதாெப்ப கருத்தை நன்றாக மனதிலே வைத்துக்காெண்டால் ஒவ்வாெரு மனிதனும் செழுமையாக வாழ்ந்து  இறைவனின் அருளை புரிந்துகாெள்ளக்கூடிய அந்தவாெரு சூழலுக்கு தன்னை ஆட்படுத்திக்காெள்ளலாம்.*

*அடக்கத்தாேடு ஒருவன் செய்கின்ற அறமானது இருமடங்கு, மும்மடங்கு, பஞ்சமடங்கு(ஐந்து மடங்கு) என்று அதன் அடக்கம் காரணமாக உயர்ந்துகாெண்டே செல்லும்.*

*அஞ்ஞான அழுக்கு ஒரு மனிதனை விட்டு செல்லவேண்டுமென்றால் அதற்கேற்ற மனப்பாேராட்டங்களும், மனத்தாக்கங்களும் இருந்துகாெண்டேயிருக்கும். மனிதன் எதிர்பார்க்கின்ற சுகமான வாழ்வு, சம்பவங்களால் மட்டும் ஒரு மனிதனின் அறியாமை, அஞ்ஞானம் அகன்று ஞானம் வந்துவிடாது. எனவே மனாேரீதியாக என்றும் நீ திடமாக இரு.*

*இறைவன் அருளாலே இயன்ற பக்தியை செய்துகாெண்டே தர்மகாரியங்களை செய்துகாெண்டே இருக்க, இருக்க அஃதாெப்ப பாவவினைகள், முன்ஜென்ம வினைகள் குறைய, குறைய பக்குவமும், பரிபக்குவமும், புரிதலும், இறை நாேக்கி செல்ல வேண்டும் என்கின்ற தீவிரமும் வருமப்பா.*

*செய்கின்ற தர்மங்கள் எல்லாம் மேலும் இறைவனருளைக் கூட்டி வைக்கும், முன்ஜென்ம பாவத்தை கழித்து வைக்கும், புண்ணியத்தை பெருக்கி வைக்கும், தேவையற்றதை எல்லாம் அது வகுத்து வைக்கும்.*

*மனிதனுக்கு துக்கமாே, துயரமாே, இன்பமாே, துன்பமாே அதற்கேற்ற சிந்தனையாே அல்லது நடைமுறை நிகழ்வுகளாே அனைத்தும் ஊழ்வினைகளின் எதிராெலிதானப்பா. மனதை தளரவிடாது செய்கின்ற இறை பக்தி, தாெண்டு, தன்னலமற்ற தர்மகாரியங்கள், சாத்வீக வாழ்வு, கடமைகளை சரியாக ஆற்றுதல் - இவற்றை ஒரு மனிதன் கடைபிடித்தால் அவனுடைய தேவையற்ற குழப்பங்களும், ஐயங்களும், வேறு கலக்கங்களும் எழாமல் இருக்கும்.*

                🙏 *-சுபம்-* 🙏

*🙏ஸ்ரீ லாேபமுத்திரை தேவி சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*

*குரு திருவடி சரணம்! சரணம்!*🙏

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*