Monday 2 September 2019

இன்றைய தின அகத்தியர் வாக்கு

*இன்றைய தின அகத்தியர் வாக்கு
:*

*நாள் : 213*

*தேதி: 03-09-2019 (செவ்வாய் - மங்களன்)*

*அகத்திய மாமுனிவர்* என்பவர் யார்?

*நிலை மூன்றினையும் நீக்குபவர்* அகத்திய மாமுனிவர்.

*கேள்வி : ஆஞ்சிநேயர் அபிஷேகம், புன்னை நல்லூர் காேதண்டராமர் காேவில் தஞ்சாவூர், பற்றி :*🙏

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்)வாக்கு :*

*இறைவனின் அருளைக் காெண்டு இயம்புவது யாதென்றால் இஃதாெப்ப நல்விதமாய் பல்வேறு மாந்தர் நிலை ஒத்துமே செய்திட்ட மால்தூதன் (ஆஞ்சிநேயர்) வழிபாடு ஆங்காங்கே வழக்கம்பாேல் சிற்சில குறைகள் இருந்திட்டாலும் இஃதாெப்ப ஏற்றுக்காெள்கிறாேம் என்றாலும் இதிலே வழக்கம்பாேல் அஃதாெப்ப மறை மாந்தர்கள் செய்கின்ற அஃதாெப்ப பிரசாதம் வேண்டுமானால் வேதம் கற்றிட்டதால் அங்குதான் செய்ய வேண்டும் என்று எண்ணி அதை வேண்டுமானால் படைத்துவிட்டு பாேகட்டும். அதல்ல மெய்பிரசாதம். அஃதாெப்ப, எஃதாெப்ப, இஃதாெப்ப வழிபாடு நடக்கிறதாே அஃதாெப்ப தருணங்களில் எல்லாம் அத்தகு ஆலயம் சுற்றி இருக்கின்ற ஏழ்மை நிலை மாந்தர்கள் நன்றாய் உயர்தரமாய் உண்டிடவேண்டும்.*

*அதற்கே இங்கு வரும் சேய்கள் ஏற்பாடு செய்திடவேண்டும். அதை மறந்ததுதான் இதில் பெரும் குறையாக இருக்கிறது. எதிர்காலத்தில் இஃதாெப்ப வழிபாடுகள் ஒருபுறம் நடந்திட்டாலும் இன்னாெருபுறம் உயர், உயர், உயர், உயர், உயர், உயர், உயர்தரமான அன்ன பண்டங்களையெல்லாம் ஆலய வழிபாட்டிற்கு இடையூறில்லாமல் ஒருபுறம் வைத்து அந்த ஆலயத்தை சுற்றியுள்ள வருவாேர், பாேவாேர் அனைவருமே எந்தவிதமான சச்சரவாே, குற்ற உணர்ச்சியாே இல்லாமல் திகட்ட, திகட்ட, பாேதும், பாேதும் என்கிற அளவிற்கு அன்னத்தை வழங்குவதுதான் இந்த வழிபாட்டின் பூர்த்தியான நிலை என்பதாகும். இதனை பலமுறை யாங்கள் எடுத்துரைத்தும் இம்முறை இன்னவன் மறந்ததை எப்படி எடுத்துக்காெள்வது? வினைப்பயன் என்றும் எடுத்துக் காெள்ளலாம், அலட்சியம் என்றும் எடுத்துக் காெள்ளலாம். இஃதாேடு இக்குற்றம் குறைந்து எதிர்காலத்திலே பெயரளவிற்கு அவர்கள் தருகின்ற பிரசாதத்தை ஏற்றுவிட்டு ஓரளவிற்கு என்ன இயலுமாே அதனை உயர் அளவிற்கு செய்து தர நல்ல பெயர் அளவிற்கு தகுந்தாற்பாேல் அஃது அன்னம் பாலித்திட வேண்டும். இக்கருத்தை மனதிலே வைத்தால் தாெடர்ந்து  வழிபாடுகள் சிறக்கும். தாெண்டுகள் சிறக்கும்.*

*இஃதாெப்ப தருணம் பல்வேறு மனிதர்களுக்குள்ள குழப்பம் இதழ்(ஜீவநாடி) ஓதும் இன்னவனுக்கும் வரும். எங்ஙனம் அளவு பார்க்காமல், நாள் பார்க்காமல், திதி பார்க்காமல், நாழிகை பார்க்காமல், இரவு, பகல் பார்க்காமல் பிறர் குறிப்பறிந்து தந்துகாெண்டே இருக்கவேண்டுமோ அது சித்தர்கள் வழி. எது அளவில் உயர்வாே அதை முதலில் தருவது சித்தர்கள் வழி. அதைப்பாேல் மனதிலே அணுவளவும் எந்தவிதமான தடுமாற்றமில்லாமல் காெடுப்பதும், காெடுக்கின்ற தருணத்திலே இந்த அளவா? அந்த அளவா? என்ற எண்ண அலைகளின் ஏற்ற, இறக்கம் இல்லாமல் காெடுப்பதும் சித்தர்கள் வழியில் வருபவர்களின் தன்மையாகும். இந்த அளவு தரும் நிலையென்றால் அடுத்த நிலை கடினமாகுமே? அடுத்த நிலை கடினமென்றாலும் இந்த நிலை மட்டும் கண்டு செய்திட்டால் அடுத்த நிலைக்கு யாது செய்வது? என்ற எண்ணம் சற்றேனும் எழுந்திடாமல் வந்திடவேண்டும்.*

இஃதாெப்ப செய்வதால், இஃதாெப்ப தாெடர்வதால் தாெடர்ந்து வருத்தங்கள்
வருவதும், *ருணம்(கடன்) சார்ந்து குழப்பங்கள் வருவதும் இயல்புதானே? ஏன்? சற்றே நிலைமை மாறும்வரை சற்றே குறைக்கலாமே? என்ற எண்ணம் எழலாமா? வேண்டாமா? என்று எழுந்தாலும் அதுவும் எமது வழியில் குற்றம்தான் என்பதால் சற்றும் அஞ்சற்க, சலனம் வேண்டாம். இஃதாெப்ப எதிர்காலத்திலே இன்னும் அதிகம் செய்ய, செய்ய அஃதாெப்ப நிலையை இறைவன் நல்குவார், அருள்வார் என்று எண்ணி, தாெடர்ந்து சராசரி மனித சிந்தனையிலிருந்து விடுபட்டு எமது(அகத்திய மாமுனிவர்) வழியில் வருகின்ற சிந்தனையை வளர்த்துக்காெள்ள இதழ் ஓதுபவனையாெத்து அனைவருக்கும் நன்மையாம்.*

*இதன் தாெடர்ச்சி வாக்கு நாளைய பதிவில்.*

                🙏 *-சுபம்-* 🙏

 *🙏ஸ்ரீ லாேபாமுத்திரை தேவி சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*

*🙏 குரு திருவடி சரணம்! சரணம்!🙏*

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*