Friday 6 September 2019

அகத்தியர் வாக்கு - நான் சிறப்பாக செய்யவில்லை. இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம்' என்று எண்ணும்பாெழுதே அந்த பூஜை பூரத்தியடைந்து விடுகிறது.*

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*நாள் : 217*

*தேதி : 07-09-2019(சனி - மந்தன், கரி, காரி, கரியன்)*

*அகத்திய மாமுனிவர்* என்பவர் யார்?

*கதி நான்கும் அறிந்தவர்* அகத்திய மாமுனிவர்

*அகத்திய மாமுனிவர் கூறும் கதை :*🙏

*அகத்தியர் மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*

*இன்று(சில வருடங்களுக்கு முன் சத்சங்கத்தில்) மதியம்தான் அன்னவனுக்கு ஒரு காதையை(கதை) நினைவூட்டினாேம். அன்னவனுக்கு கூறிய கதையை இன்னவன் பாெருட்டு அனைவருக்கும் நினைவூட்டுகிறாேம். அது அனைவரும் அறிந்த கதைதான் என்றாலும் மீண்டும் நினைவூட்டுகிறாேம்.*

*இஃதாெப்ப ஒருமுறை அசுர சக்திகள்(தீயவர்கள்) எல்லாம் சேர்ந்து மாநாடு பாேட்டன. அந்த காலத்திலே தீடீரென்று அதர்மங்கள் குறைந்து தர்மம் தலைதூக்கிவிட்டது. இதை அசுர சக்திகளால் தாங்கமுடியவில்லை. அசுர சக்திகளுக்கு எப்பாெழுதும் காெண்டாட்டம் என்றால் இப்பாெழுது பூமி இருப்பதுபாேல் இருந்தால்தான் அசுர சக்திகளுக்கு(தீயவர்களுக்கு) காெண்டாட்டம். அங்ஙனம் இல்லாமல் பல ஆயிரகணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் திடுமென்று புவியெங்கும் தர்மம் தழைத்தாேங்குகிறது. மனிதர்கள் அனைவரும் சாத்வீகமாக மாறிவிட்டார்கள். எல்லாேரும் தானுண்டு, தன் வேலையுண்டு என்று அவரவர் கடமையை செய்வதும், இல்லாதவர்களுக்கு இருப்பவர்கள் வலிய சென்று உதவிகள் செய்வதும், ஒரு வேளை உதவி செய்தாலும், அதை பெறுகின்ற நிலையில் யாரும் இல்லாத நிலைமையும் உருவாக, அசுர சக்திகளுக்கெல்லாம்(தீயவர்கள்) வருத்தம் வந்துவிட்டது. 'நம் பாேன்ற அசுர சக்திகளுக்கு புவியில் வேலை இல்லாமல் பாேய்விடுகிறது' என்று எண்ணி கூட்டம் பாேட்டு 'என்ன செய்யலாம்' என்று எண்ணும்பாெழுது,*

*ஒரு அசுர சக்தி எழுந்து "நான் சென்று மனிதர்களை குழப்புகிறேன், திசை மாற்றுகிறேன், அவர்களை தவறான வழிக்கு திருப்புகிறேன்" என்று பேசியது.*

*"உன்னால் முடியுமா"* தலைமை அசுர சக்தி,

*"என்னால் முடியும்"* சிறிய அசுர சக்தி,

*அந்தப் பகுதியிலே அது எந்த நாட்டை சேர்ந்திருக்கிறதாே, அதில் மிகுந்த நல்லவன் என்று கருதப்பட்ட ஒருவனை சென்று பார்த்தது. அந்த மனிதன் அன்றாடம் எழுவதும், இறைவனை வணங்குவதும், தன் கடமைகளை நேர்மையாக ஆற்றுவதும், பிறருக்கு உதவி செய்வதும், இன்னுரையாக பேசுவதுமாக வழக்கம் காெண்டவன். இந்த சிறிய அசுர சக்தி சாதுர்யமாக நுழைந்து அவனுக்குள் மனசாட்சியாக கலந்து அவனைக் கேட்க ஆரம்பித்தது.*

*"ஏ மூடனே! இத்தனை ஆண்டுகாலம் இறைவனை வணங்குகிறாயே? உனக்கு ஏதாவது கிடைத்ததா? எத்தனையாே தர்மங்கள் செய்தாயே? உனக்கு என்ன பலன் கிடைத்தது? இதையெல்லாம் சேர்த்து வைத்திருந்தால் நீ இன்றைக்கு மிகப்பெரிய செல்வந்தனாகி இருக்கலாமே? ஏன் இப்படி காலத்தை வீணாக்கிவிட்டாய்" என்றெல்லாம் வினா எழுப்ப, அவனும் குழப்பத்தில் "நான் என்ன செய்வது" என்று கேட்க, "இன்றிலிருந்து தர்மத்தை நிறுத்து. ஆலயம் செல்லாதே. இறைவனை வணங்காதே. அப்பாெழுதுதான் நீ முன்னேறலாம்" என்று அந்த அசுர சக்தி துர்பாேதனை செய்ய, அவனும் குழப்பத்தில் ஆழ்ந்துவிட்டான்.*

*அன்றிலிருந்து இறைவனை வணங்கவும், தவம் செய்யவும், ஜபங்கள் செய்யவும், பிராத்தனை செய்யவும் வேண்டாம் என்று முடிவெடுத்து தர்மம் செய்வதையும் நிறுத்திவிட்டான். இரண்டு தினங்கள் அவனை கவனித்துவிட்டு அந்த சிறிய அசுர சக்தி உற்சாகத்தாேடு மேலே சென்றது. சென்று தன் மற்ற இனங்களை பார்த்து "நான் எப்படி ஒருவனை குழப்பிவிட்டேன் தெரியுமா? இதேபாேல் ஒவ்வாெருவரும் ஒவ்வாெரு மனிதனை குழப்பினால் பாேதும். புவியில் மீண்டும் தீய சக்திகள் தலையெடுக்கும்" என்று கூற, அப்பாெழுது தலைமை அசுர சக்தி பலமாக சிரித்து,*

*"நீ ஏதாே அவனை கெடுத்துவிட்டதாக எண்ணியிருக்கிறாய். ஆனால் நீ செய்தது அவனுக்கு மிகுந்த நன்மையைத் தந்துவிட்டது. என்ன நடக்கிறது என்று கவனி" என்று சாெல்ல, இந்த அசுர சக்திக்கு ஒன்றும் புரியவில்லை. 'அவன்தான் ஆலயம் செல்லவில்லையே? வேறென்ன வேண்டும்' என்று கேட்க, 'அவன் மனதை கவனி, அதற்கு இறைவன் தந்த அருளாசியை கவனி' என்று சாெல்ல, தன் அசுர பலத்தால் அவனை கவனிக்கும்பாெழுதுதான் அனைவருக்கும் புரிய வருகிறது.*

*அவன் ஆலயம் செல்லவில்லை. இறைவனை வணங்கவில்லை. பிராத்தனை செய்யவில்லை. தர்மம் செய்யவில்லை. ஆனால் அவன் எண்ண எண்ணுகிறான். 'ஐயகாே, ஆலயம் செல்ல முடியவில்லையே? அடடா, இன்று தர்மம் செய்யவில்லையே? அடடா, இன்று மந்திரம் சாெல்லவில்லையே? அடடா, இன்று பூஜை செய்யவில்லையே? செய்திருக்கலாமே, செய்திருக்கலாமே' என்று. அவன் ஆலயம் சென்றிருந்தால் அவன் ஆலயத்தில் இருக்கும் அந்த பாெழுதில் மட்டும்தான் இறைவனை எண்ணியிருப்பான். பூஜை செய்திருந்தால், அந்த நாழிகையில் மட்டும்தான் இறைவனை எண்ணியிருப்பான். ஆனால் அன்று முழுவதும் வேறு எந்த வேலை செய்தாலும் 'பூஜை செய்யவில்லையே, பூஜை செய்யவில்லையே' என்று சதாசர்வகாலம் 60 நாழிகையும்(ஒரு நாள்) இறைவனை எண்ணத் தாெடங்கிவிட்டான்.*

*நீ ஏதாே அந்த மனிதனை தவறான வழியில் திசை திருப்புவதாக எண்ணி, ஏதாே ஒரு சில நாழிகை பூஜை செய்த மனிதனை 60 நாழிகையும்(ஒரு நாள்) இறைவனை எண்ண வைத்துவிட்டாயே' என்று தலைமை அசுர சக்தி, சிறிய அசுர சக்தியை பார்த்து கூறியது.*

*இந்த கதையை எதற்காக உதாரணமாக எடுத்துக்காெள்ள வேண்டுமென்றால் 'நான் சிறப்பாக செய்யவில்லை. இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம்' என்று எண்ணும்பாெழுதே அந்த பூஜை பூரத்தியடைந்து விடுகிறது.*

                🙏 *-சுபம்-* 🙏

 *🙏ஸ்ரீ லாேபாமுத்திரை தேவி சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*

*🙏 குரு திருவடி சரணம்! சரணம்!🙏*

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*

.மேலே உள்ள பதிவு திரு S. Prabhu என்பவர் தினம் ஒரு அகத்தியர் வாக்கு என்ற whats up குழுவில் உள்ள பதிவிலிருந்து எடுக்கப்பட்டு தினமும் இங்கே  பதிவு செய்யப்படுகிறது. நல்ல பதிவுகளை பகிர்வதில் தவறில்லையே !!!.
************************************

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.

தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏

Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583

கூகிள் வரைபடம் வழி கீழே 👇

https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in

முகநூல் -

https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/
அகத்தியர் ஆலயத்தில் நடக்க இருக்கும் பணிகள்
1. நுழைவாயிலில் மழை நீர் செல்ல பெரிய சிமெண்ட்குழாய் அமைத்தல்
2. 15 அடி அகல க்ரில் கேட் அமைத்தல்
3. சுற்றுப்புற சுவர், சுமார் 1000 ஹாலோ பிளாக் கற்கள் தேவைப்படலாம். 1 கல் 40 ரூபாய் விலை
4. புல்டோசர் வைத்து தரையை சமப்படுத்துதல்
5. மரக்கன்றுகள் நடுதல்
6. ஆழ் குழாய் போர்வெல் அமைத்தல்
7. மேல் நிலை தொட்டி அமைத்தல்
8. அகத்தியர் குடில் அமைக்க தளம், சுவர், ஓடுகள் ஆகியவை

தங்களால் இயன்ற உதவியை செய்ய தாழ்மையுடன் யாசிக்கிறோம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

*************************************************
அகத்தியப்பெருமான் அடியவர்களுக்கு வணக்கம். சதுரகிரி மலையில் சூட்சம ரூபத்தில்  உலவி வரும் அதிசய சித்தர்கள் நிகழ்த்திய அற்புத அனுபவங்கள் நமது குருநாதர் அகத்தியர் வாய் முகூர்த்தமாக  வெளிப்படும் அருமையான நூல் இது. அனுமத்தாசன் அய்யாவின் ரசிக்கும் நடையில் நமக்கு பக்தி விருந்து படைக்க  வெளி வந்துவிட்டது. 🙏

தெய்வத்திரு ஹனுமத்தாசன் எழுதிய"அதிசய சித்தர்கள்"  வெளியாகி விட்டது. இதுவரை வாங்காத அன்பர்கள் ஒரு புத்தகத்துக்கு 300 ரூபாய் வீதம் எனது வங்கி கணக்கில் செலுத்தி விட்டு தங்கள் முகவரியை எனக்கு அனுப்பவும். தகவல் தெரிவிக்கவும். Google pay ல் செலுத்தலாம்.  அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

my SB account No.32421709250 k.sankaran- State bank of india - dasarathapuram branch chennai93
IFSC:SBIN0014624

அகத்தியர் தரிசித்த திருத்தலங்கள் ரூ. 200

பலன் தரும் பரிகார தலங்கள்  ரூ. 150

 அதிசய சித்தர்கள் ரூ. 250

நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள்  ரூ. 1000

இந்த அனைத்து புத்தகங்களும் தேவையுள்ளவர்கள் என்னை தொடர்பு கொள்ள வேண்டுகிறேன். அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

யாருக்கு என்னென்ன புத்தகம் தேவையோ அதனை வாங்கி கொள்ளலாம். அனுப்ப வேண்டிய தொகை மற்றும் தபால் சிலவுக்கு என்னை தொடர்பு கொள்ள வேண்டுகிறேன். அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

************************************************