Thursday 20 August 2020

திரு SPB அவர்களுக்கு சிறப்பு யாகம்

இன்று இரவு நமது பொகளூர் அகத்தியர் ஜீவ அருள் நாடி பீடத்தில், பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்கள் விரைவில் நலம் பெற வேண்டி சிறப்பு தன்வந்திரி யாகம் செய்ய நமது குருஜி தீர்மானித்து உள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்

இதன் காரணத்தை கேட்டபோது குருஜி அவர்கள் கூறியதாவது திரு எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்கள் பாடிய ஒரு பாடல் அண்ணா மலையானே எங்கள் அன்பில் கலந்தோனே  உண்ணாமுலை நாதா எங்கள் உள்ளம் நிறைந்தோனே சிவமயமாக தெரிகிறதே சிந்தையில் சிவ யோகம் வளர்கிறது என்று அண்ணாமலையாரை போற்றி மிகச் சிறந்த பாடல் பாடி சேவை புரிந்துள்ளார்.

 அந்த ஒரே ஒரு காரணத்திற்காக மட்டுமே அவர் முக்தி அடைந்து உயிர் பிழைத்து நல்ல நிலைமையில் வாழ வேண்டும் என்று நினைப்பதும் அதற்காக இந்த யாகத்தை செய்வதாகவும் குருஜி அவர்கள் கூறினார்கள்

இதிலிருந்து திரு பாலசுப்பிர மணியம் அவர்களின் பாடலின் மகிமையையும் திரு அண்ணாமலையாரின் புகழும் ஒருங்கிணைந்து மக்களை ஆட்டுவிக்கிறது என்பது தெரிந்து கொள்ள படுகிறது

யாரொருவர் எங்கள் சிவனை போற்றி பாடி வணங்கினாலும் அவர்களுக்கு நாம் என்றுமே அடிமையாக இருந்து சேவை செய்வோம் ஏனென்றால் அவர்கள் மிகச்சிறந்த சிவ சேவை செய்து உள்ளார்கள் என்பது என் கருத்து

மேலும் இன்று சிறப்பு பூஜையில் வியாழக்கிழமை அன்று குருஜி அவர்கள் எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்கள் விரைவில் நலம் பெற வேண்டி சிறப்பு வாசி யோக தியானம் பிரார்த்தனை ஆகியவற்றை சங்கல்பம் செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

நன்றி.

No comments:

Post a Comment