Tuesday 14 January 2020

அமைதி

🙏
🕉
ஒரு மன்னன் தன் மக்களிடம் ‘அமைதி’ன்னா என்ன? அப்படிங்கறத தத்ரூபமான ஓவியமா வரைந்து கொடுப்பவர்களுக்கு மிகச் சிறந்த பரிசு வழங்கப்படும்னு அறிவிச்சாரு.

இதையடுத்து நாட்டின் முன்னணி ஓவியர்கள் அமைதியை பிரதி பலிக்கும் வண்ணம் தத்ரூபமான பல ஓவியங்களை வரைந்து அரண்மனைக்கு எடுத்து வந்தார்கள்.

மன்னன் ஒவ்வொரு ஓவியமா பார்வை இட்யிட்டவாறு வந்தான். ஒவ்வொரு ஓவியரும் ஒரு மாதிரி பிரதி பலித்து இருந்தார்கள்.

ஒருத்தர் அழகான ஏரியை ஒரு அழகிய மலையின் அடிவாரத்தில் இருக்கிற மாதிரி வரைஞ்சு இருந்தாரு. மலையின் பிம்பம் ஏரியில் பிரதி பலித்து பார்க்கவே ரம்மியமா இருந்தது.!!

மற்றொருத்தர் பார்த்த உடனே பறிக்கத் தூண்டும் வகையில் மலர்களை தத்ரூபமாக வரைஞ்சிருந்தாரு.

இப்படி ஒவ்வொருவரும் அமைதியை தங்களுக்கு தோன்றினபடி ஓவியத்தில் பிரதி பலிச்சிருந்தாங்க.!

ஆனா, ஒரே ஒரு ஓவியத்தில் ஒரு மலை மேலிருந்து ஆக்ரோஷமா கொட்டும் நீர்வீழ்ச்சியின் படம் வரையப்பட்டிருந்துச்சு.
அதுமட்டுமின்றி இடியோட மழை வேற கொட்டிக் கொண்டு இருந்தது.

சற்று உற்று பார்த்தப்போது, நீர்வீழ்ச்சியின் கீழே இருந்த மரம் ஒன்றில் கூடு கட்டியிருந்த பறவை ஒன்று கூட்டில் தனது குஞ்சுகளோட காணப்பட்டது.!!

“இந்த ஓவியத்தை வரைந்தது யார்?”

சம்பந்தப்பட்ட ஓவியர் எதிரே நிறுத்தப்பட்டாரு.!

மன்னர்., ” இந்த ஓவியம் தத்ரூபமாக பார்க்க அழகாக இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. ஆக்ரோஷத்துடன் கொட்டும் அருவி, இடியுடன் கூடிய மழை. கீழே மரத்தில் தனது கூட்டில் ஒரு பறவை. ஆனால் இதில் அமைதி எங்கே இருக்கிறது?” என்றார்..

அதுக்கு ஓவியர்,

” மன்னா சப்தமும், பிரச்சனையும், போராட்டமும் இல்லாத இடத்தில் இருப்பது  அமைதி அல்ல
இவை எல்லாம் இருக்கும் இடத்தின் நடுவே இருந்து கொண்டு, எதற்கும் கலங்காமல் எதுவும் தன்னை பாதிக்க விடாமல் பார்த்துக் கொண்டு உள்ளுக்குள் அமைதியாக இருப்பதே உண்மையான அமைதி.!

அப்படி பார்க்கும்போது குஞ்சுகளுடன் இருக்கும் இந்த பறவையே பரிபூரணமான அமைதியில் இருக்கிறது.!”

“அருமை .. அமைதிக்கு ஒரு அற்புதமான விளக்கம்” னு கைதட்டிய மன்னன் அந்த ஓவியத்திற்கே முதல் பரிசு கொடுத்தான்!!.


அனைத்து வசதிகளும் அமையப்பெற்று எந்த வித பிரச்சனையும் இல்லாத ஒரு சூழலில் அமைதியை தேடி ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களுக்கு செல்வதோ, இமயமலைக்கு செல்வதோ, கோயில் கோயிலாக ஓடுவது அமைதியல்ல.

அப்படி வாழ்வதும் ஒரு வாழ்க்கையும் அல்ல.

ஆயிரம் துன்பத்திற்கு நடுவே, நிச்சயம் ஒருநாள் விடியும் ” என்று விடா முயற்சியோடு,

தினசரி உழைச்சிட்டிருக்காங்ளே அவர்களிடம் இருப்பது தான் அமைதி..
🕉🙏🕉