Friday 3 January 2020

அகத்தியர் வாக்கு - சம்பளம் வாங்கும் ஊழியரின் கையூட்டு/லஞ்சம் எப்படிப்பட்ட பாபத்தை விளைவிக்கும்?

🌸🌸🌸🌸🙏🌺🌺🌺🌺

*அஉம் அகத்திய மஹரிஷி பாதம் காப்பு*

🌺🌺🌺🌺🙏🌸🌸🌸🌸

*கேள்வி:-* சம்பளம் வாங்கும் ஊழியரின் கையூட்டு/லஞ்சம் எப்படிப்பட்ட பாபத்தை விளைவிக்கும்?

*அகத்திய மஹரிஷி நாடி பதில்*

பாவம் என்பதை அந்த அந்த செயலை மட்டும் பார்க்காமல் அந்த மனிதனின் சூழ்நிலை, வாழும் நிலை, பக்குவம் இவற்றை வைத்து பார்க்க வேண்டும். அதாவது, சகல வேதங்களையும் முறையாக கற்று, சகல கல்வி கேள்விகளில் தேர்ச்சி பெற்று, எல்லா வகையான ஞான கருத்தும் தெரிந்து, இது தக்கது, இது தகாதது, இதை செய்யலாம், இதை செய்யக்கூடாது, இதை செய்தால் பாவம், இதை செய்தால் புண்ணியம் என்றெல்லாம் அறிந்து, ஓரளவு பக்குவம் பெற்ற மனிதன், யாருக்கு தெரியப்போகிறது என்று எந்த ஒரு சிறிய தவறையும் செய்தாலும் அது மிகப் பெரிய பாவமாக மாறும். ஆனால் அறியாத மனிதன், கல்வி, கேள்வி கல்லாத மனிதன், எதுவும் தெரியாத மனிதன், உழைப்பதும், வாழ்வதுமாக இருக்கின்ற மனிதன் வேறு வழியில்லாமல், மிருக உணர்ச்சிக்கு அடிமையாகி, எதையாவது செய்து விட்டு பின்னர் தன் மனதால் வருந்தி வருந்தி அழுதால், அந்த பாவம் மன்னிக்கப்படும். எனவே, வயிற்றுக்கு வழியில்லாமல் ஒருவன் எல்லா வகையான, நேர்மையான வழிமுறைகளையும் தேடி, தேடி, தேடித் தோற்றுப்போய், களவு செய்தால் அவன் மன்னிக்கப்படுவான். *ஆனால், இதை செய்வதற்குத்தான் உனக்கு ஊதியம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு, அந்த பணிக்காக ஒருவனுக்கு அரசாங்கமோ, ஒரு நிறுவனமோ ஊதியம் வழங்குகிறது. ஆனாலும் அந்த பதவியை பயன்படுத்தி ஒருவன் ஒரு காரியம் சாதிப்பதற்கு, எனக்கு கையூட்டாக இந்த தனம் வேண்டும் என்று கேட்டால், கட்டாயம் அது பல கோடி ப்ரம்மஹத்திக்கு சமமப்பா!"*

🌸🌸🌸🌸🙏🌺🌺🌺🌺

*கந்த சீடன் பொதிகை வாழ் குருநாதன் அகத்திய மஹரிஷி புகழ் ஓங்குக*

🌸🌸🌸🌸🙏🌺🌺🌺🌺