Monday 27 January 2020

அண்ணாமலையார் கிரிவல சூட்சுமம்

🌸🌸🌸🌸🙏🌺🌺🌺🌺

*அகத்தின் ஈசன் பாதம் காப்பு*

🌸🌸🌸🌸🙏🌺🌺🌺🌺


ஞானிகள் எல்லாம் மல ஜலத்திற்கு அப்பாற்பட்டவர்கள்தான். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அவர்களுக்கு நம்மைப் போல எலும்பும், சதையும் சேர்ந்த உடம்பு கிடையாது என்பதும் உண்மையே. அவர்கள் ஒளி உடம்பைப் பெற்றவர்கள். தேவ சரீரம் அவர்களுடையது. ஆனால், *பூலோகத்திற்கு வரும்போது, அதிலும் திருஅண்ணாமலை கிரிவலத்திற்காக வரும்போது பூமியின் கர்ம விதிக்கு உட்பட்டு உடல் தாங்கி வர வேண்டும் என்பது எம்பெருமான் அருணாசல ஈசன் விதித்த விதி. இதில் யாருக்கும் விலக்கு கிடையாது.*

*எந்த லோகத்தைச் சேர்ந்த எந்த தேவனாக இருந்தாலும், அசுரனாக இருந்தாலும், அவதார மூர்த்திகளாகவே இருந்தாலும் இந்த நிபந்தனைக்கு உட்பட்டுதான் கிரிவலம் மேற்கொண்டாக வேண்டும்.*

அவ்வாறு கிரிவலம் வரும்போது அவர்களும் மனிதர்கள், மிருகங்கள் போன்ற பூமி வாழ் ஜீவன்களுக்கு உரித்தான வினைகளான உணவு, நீர், உடை போன்ற வசதிகளை ஏற்று அதன் மூலம் பூமியில் உள்ள ஜீவன்கள் மேல் நிலை அடைய அனுகிரகத்தை வழங்கிச் செல்கிறார்கள்.

மனிதர்கள் மேற்கொள்ளும் இறைவழிபாடு சுயநலத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆனால், தெய்வங்களின், மகான்களின் வழிபாடு பொது நலத்திற்காக மேற்கொள்ளப்படுவது.

🌺🌺🌺🌺🙏🌺🌺🌺🌺

*அகத்தின் ஈசன் புகழ் ஓங்குக*

🌺🌺🌺🌺🙏🌺🌺🌺🌺