Wednesday 15 January 2020

பொது நாடி 13/01/2020 மார்கழி ஆயில்ய நட்சத்திரம் அகத்தியர் எம்பெருமானாரின் குரு பூஜை நாள்


பொது நாடி 13/01/2020

மார்கழி ஆயில்ய நட்சத்திரம்
அகத்தியர் எம்பெருமானாரின் குரு பூஜை நாள்

அருள்மிகு அகத்தியர் லோபாமுத்ரா குரு பூசை

அகத்தியர் ஜீவ நாடி பீடம் - பொகளூர்

கோவை

காலை 5 மணி

நாடி கேட்பவர் - தி. இரா . சந்தானம்  மற்றும் பிற அடியவர்கள்

நாடி வாசிப்பவர் - குருஜி இறைசித்தர்

*********************************************************************
கடவுள் வாழ்த்து

வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி
மீளாமே ஆள் என்னை கொண்டாய் போற்றி
மெய்யாகி நின்ற நிழலே போற்றி
காவாய் கனக திரளே போற்றி
என் கயிலை மலை வாழ் என் ஐயனே போற்றி போற்றி போற்றி

சிரம் தாழ்ந்து வணங்கும் அடியோரின் தேவ தேவனே போற்றி
சிரம் தாழ்ந்து உலகாளும் என் அப்பன் சக்தி வடி வேலவன்
ஆதி சக்தியின் திருப்பாதம் தொழுது
உதய நட்சத்திரம் தன்னிலே யாம்
பொது நிகழ்வுதனை அருளுரைக்கிறோம்
கவனமுடன் கேளாய் என் மகனே

இவ்வருடம் கண்டம் விட்டு கண்டம் இருக்கும்
ஒரு பெரு நாட்டுக்கும் சிறு நாட்டுக்கும்
பெரும் யுத்தம் ஒன்று தோன்றுமய்யா
அந்த யுத்தத்திலே  பல மானிடர்கள் மடிவார்களே
இது விதியால் வந்த நிலையே

மீண்டுமோர்  கண்டம் விட்டு கண்டம் இருக்கும்
மண் தனிலே ஆட்சி மாற்றம் பெருமப்பா

சில சோக நிகழ்வுகள் அரங்கேறுமே
ஜலத்தால் நிலை குலையுமப்பா
யுத்தத்தால் மான்றுவானே

யாம் இருக்கிறோம் அஞ்சுவது ஏன் மழலையே
அன்றுரைத்தேன் அறிவாய்
என் மக்களே நன் மக்களே
வேலவன் நாமம் கொண்ட ஒருவன் ஆட்சி புரிவான் என்று
ஆட்சி புரிவான் அய்யா
ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் ________________________________________
இது சித்தனின் நித்திய வாக்கே

நிலைகள்  மாற்றம் பெரும் அப்பா
உற்பத்தி தன்னிலே மேலோங்கும்
மக்களின் பஞ்சம் தீரும்
மழை பொழியும் அப்பா
விவசாயம் செழிக்கும் அப்பா

மந்த நிலை பெற்ற மானிடரெல்லாம்
மனம் திருந்தி ஆன்மீகத்தை நாடி வருவான்
ஏசுவோர் ஏசட்டும்  தூற்றுவோர் தூற்றட்டும்
 எல்லாம் எமக்கே

யாம் இருக்கிறோம் அஞ்சுவது ஏன் மழலைகளே
நன் மக்களே - சனி என்று உரைக்கும் நன் நாளிலே
தானமதை செய்யுங்கள் சுபிட்சம் பெரும்
ஆறுமுகன் துணை நிற்க ஆஞ்சிநேயனின் அருள் பெறுவார்களே

 - முற்றே -