Thursday 12 March 2020

பஞ்சாட்சர மந்திரம் பற்றிய அபூர்வ விளக்கம்

*பஞ்சாட்சர  மந்திரம் பற்றிய அபூர்வ  விளக்கம்.*
**************************************
சிவசிவ
🙏💐🙏💐🙏💐🙏💐

*சிவாய நம /சிவயநம சரியா?*

*நமசிவாய /நமசிவய சரியா ?*

*எதை நாம் சொல்ல வேண்டும் ?எப்படி
சொல்ல வேண்டும் ?*

முதலில் நாம் மந்திரம் என்பது என்ன என்று
புரிந்து அறிந்து கொள்வோம் ...

கருவில் உள்ளே புகுந்த உயிருக்கு ஓசை தான்
தொப்பிள் கொடிவழியாக
மனதை உண்டாகி மனதிடம் செல்கிறது,

இப்படியும் சொல்லலாம் உடலுக்கும்
உயிருக்கும்
ஓசை தான் மனதை உண்டாகிறது,

பிறப்பு எடுத்த பிறகு மனம் விழித்து
உணர்ச்சிகள் ,வாசனை ,கர்மம் போன்ற
நிலைகளை ஆட்பட்டு செயல்படுகிறது .

இப்படி மனதிற்கு அடித்தளமே இந்த ஓசை தான் .

மந்திரம் ஓசைகளினால் உண்டானது ,
ஓசை மனதின் உணர்சிகளுக்கு
கட்டுப்பட்டதால் நாம் உண்டாகும் ஓசைகள்
சில நமக்கு நன்மையையும் செய்யும்
தீமையும் செய்யும் ..

உதாரனமாக ஒரு நபரை பசு போல
இருப்பவனே என்றால் சிரித்து கொள்வார்கள்,
அவரை நாயை போல இருப்பவனே என்றால்
கோபாம் கொள்வார் .

இரண்டும் மிருகத்தை தான் குறிக்கிறது ,எது
அவருக்கு சிரிப்பை /கோபத்தை
தருகிறது என்றால் அந்த மிருகத்தின் செயல்
மனதில் படமாக தெரிவது தான் மனதில் உள்ள
உணர்சிகளை துண்டுகிறது என்பது ஒரு
பொருள் ...

மற்ற ஒன்று சப்தம் நீங்கள் நாயே என்று
சத்தமாக தான் சொல்லமுடியும் ஆனால் பசு
என்று கத்த முடியாது இப்படி சொல்லும்
பொழுது சாந்தமாக தான் ஓசை வரும் இதை
அனுபவத்தில் உணரலாம் ...

இது போல
ஒரு நாய் குட்டிக்கு உணவு அளித்து அது
உணவு உண்ணும் பொழுது அதன் பெயரை
சொல்லி அழைத்தால் அந்த சப்தத்தை அதன்
மனம் பதித்து கொள்ளும் ,

பிறகு எப்பொழுது அந்த சப்தம் கேட்டாலும்
(பெயர் ) தனக்கு உணவு கிடைக்க போகிறது
என்று அது நம்மை கவனிக்கும் இப்படி தான்
ஓசைக்கு மனம் விரிவடையும் சுருங்கும் ...

இங்கே கவனிக்க வேண்டியது ஓசை நம்
மனதை அடைந்து நம்மில் உள்ள நரம்பு
மண்டலத்தை அடைந்து நல்ல அல்லது தீய
எண்ணத்தை உண்டாக்கும் என்று புரிந்து
கொள்ள வேண்டும்

இதை உணர்ந்த நம் இன சித்தர்கள் ,மகான்கள்
,யோகிகள் ,ஞானிகள் நமக்கு நல்ல சிந்தனை
வளர மந்திரம் ,நாமம் என்ற சொற்களை
வகுத்து
தந்தார்கள் ...

இப்படி தான் மந்திரம் மனதில்
செயல்பாடுகளை தூண்ட வல்லது என்று
முதலில் புரிந்து கொள்ள வேண்டும் ...

மந்திரத்தை பற்றி அடுத்த பார்வை ....

மந்திரம் என்பது நினைபவனை காப்பது என்று
பொருள் .

மந்திரத்தை வசமாக்கினர் பலர் ,மந்திரம் பலரை
வசமாக்கியது
பலர் மந்திரத்தை துரத்தினர் மந்திரம் பலரை
துரத்தியது
மந்திரத்தை அறிந்தவர் சிலர் ,அழிந்தவர் சிலர் .

மேலும் மந்திரத்தை பற்றி சப்த கோடி மஹா
மந்திர நூலில் (வட மொழி)இருந்து சில
தகவல்கள் ...

1 எழுத்து--உடையது ----பிண்டம்

2-எழுத்து-உடையது--கர்த்தரி

3-எழுத்து--9-உடையது-பீசம்

10-எழுத்து-20 --உடையது--மந்திரம்

20-எழுத்து-மேல்--உடையது மாலா மந்திரம்
எனப்படும் என்றும் சொல்ல படுகிறது ...

மேலும் மந்திர தொகுப்பு என்ற நூலில் 68
வகையாக மந்திரம்களை பிரித்து உள்ளார்கள் .

இதனுடன் சைவ புஷன மந்திரம்கள்
1.சிருஷ்டி வடிவ சிவமந்திரம்கள்.
2.திதி வடிவ சதாசிவ மந்திரம்கள்
3.சங்கரவடிவ மகேஷ்வர மந்திரம்கள்
4.பிரணவ மந்திரம்கள்
5.பஞ்சாக்ர மந்திரம்கள்
6.தேவி முல மந்திரம்கள்
7.அஸ்திர மந்திரம்கள்
8.பஞ்ச பிரம மந்திரம்கள்
9.தேவாதி மந்திரம்கள்
10.மகாசக்தி மந்திரம்கள்
11.சித்த மந்திரம்கள்
12.கிரியா மந்திரம்கள் ..

இப்படி சித்தர்களின் மந்திர குறிப்பு நூல்கள்
சொல்கிறது ...

ஓசை தான் மந்திரம் ,சில ஓசைகள்
நன்மைகளும் சில ஓசைகள் தீமைகளும்
செய்யும் என்று கடந்த பதிவில் விளக்கினேன் ,

ஒரு மீன் நீரை விட்டு வெளியே வந்ததும்
எப்படி இறக்கிறதோ அப்படி தான் நாமும்
காற்றால் நிரப்பப்பட்ட பந்தில் வாழ்கிறோம்
காற்றை விட்டு வெளியே வந்தால்
இறக்கிறோம் என்பதனை நாம் அனைவரும்
அறிவோம்..
இந்த உலகம் சப்த அலைகளால் நிரம்பியது
என்று புரிந்து கொள்ள வேண்டும் ,

சப்த அலைகள் மனிதனை ஆட்கொண்டு நல்
வழிபடுத்த சித்தர்களும் ரிஷிகளும் மந்திரம்
என்ற மொழியை இறை சிந்தனையோடு நமக்கு
சொல்லி கொடுத்து உள்ளார்கள் என்று நாம்
புரிந்து கொள்ளல் வேண்டும் .

உலகில் உள்ள சமயம்களில் சைவ சமயம்
இதில் முதல் தரமாக வருகிறது என்று
சொல்வேன் ,

ஆம் திருமறைகள் என்னும் அற்புதம்களை
நமக்கு அறிவை தெளிவு படுத்தி கொள்ளவும்
,இறைவனை தொடர்பு கொள்ள உணர்வு
திருமறைகளையும் தந்து உள்ளது .

இவைகளை நாம் உணர்ந்து படிக்க ஆரம்பித்து
விட்டால் மனிதன் மனிதன் ஈசனாக
மாறிவிடுவான் .

உணராமல் படிப்பது வீண் ,
எல்லா பக்தர்களாலும் இப்படி உணர்ந்து படிக்க
முடியாது ,காலமும் கோள்களும் ,கர்மம்களும்
வழிவிடாது ,
இவர்களுக்காக
ஆண்ட பிண்ட சராசரத்தின் அன்னை சக்தி
பக்தர்கள் மேல் பரிவு பட்டு சிவபெருமானிடம்
வலது காதால் கேற்று பெற்ற ரகசியம் தான்
பஞ்சாட்சர மந்திரம் என்னும் 5 எழுத்து.

இந்த தகவலை பற்றி மாயவரத்தில் உள்ள ஒரு
கோவிலில் நாம் காணமுடியும் .

இப்படி அம்பாள் சிவ பெருமானிடம் வலது
காதில் மந்திரத்தை கேட்டபடி
இருப்பது போல் அதாவது அம்பாள் தெற்கு
பார்த்து இருப்பது போல கோவில்களை
வடிவமைத்தார்கள் .

(சில கோவில்கள் விதி
விளக்காக மாறும் ஏன் என்று அதை முடிவில்
புரிந்து கொள்ளலாம் )

அம்பாளுக்கு பிறகு
அம்பாளின் முழு அம்சத்தையும் அதாவது
அகத்தியும் என்ற நிலையை
அடைந்த ஒரே ஒரு நபரான அகத்தியர்
பெருமான் தான் பஞ்சாட்சர மந்திரத்தை
பெருமானிடம் கேட்டு அறிந்தவர் .

ஆதிசித்தர் என்றும் சித்தர்களின் குரு என்ற சிவ
பெருமான் பஞ்சாட்சர
மந்திரங்களையும் கோபீசம் என்னும்
மகத்துவம் பொருந்திய அட்சரம்களையும்
லக்கங்களையும் கடைபிடிக்க வேண்டிய
முறைகளை
மகிமைகளை உபதேசித்தவர் .
அவர் விதித்த நிபந்தனை காமத்தால் அடங்காத
மனதை உடையவர் ,கோபகாரர்கள் ஏமாற்றும்
சீடர்கள் போன்றவர்களுக்கு உபதேசிக்க
கூடாது என்றார் .

இதை பற்றி சிவ புராணத்தில் காணலாம் .

பொதிகை மலையில் இருந்து மாமுனிவர்
அகத்தியர் குரு உபதேச மொழியாக
மந்திரத்தை பெற்று மந்திரகாவியும் என்று
எழுதி மக்களுக்கு பயன்பட
வேண்டும் முயற்சி செய்தபொழுது மற்ற
சித்தர்களும் ரிஷிகளும்
தேவ ரகசியம் என்று அதை மறைத்து
விட்டார்கள் என்று சொல்ல படுகிறது .

பிறகு அகத்தியர் இறைவனை பணிந்து
உலகமக்களின் நன்மைகே எழுதியதாக
விளக்கம் அளிக்க இறையனார் சாபம்
போக்கினார் என்று நூல்கள் சொல்கிறது .

திருமறைகளை பாடி வந்த நாயன்மார்கள் தான்
முதன் முதலில் பஞ்சாட்சர மந்திரத்தை எல்லா
பக்தர்களுக்கும் தெரிவிக்கும் படி
சொல்லிவந்தார்கள் .

அதில் உள்ள ரகசியம்களை அவர்கள் சொல்வது...

முதலில் அவர்கள்
ந ம சி வ ய
என்று தான் சொல்லிவந்தார்கள் ,

இப்படி சொல்வதினால் இகலோக வாழ்க்கை
மேன்மையாகும்,
ஆனால் மோட்சம் கிடைக்காது என்று சில
காலம் கழித்து
சி வ ய ந ம
என்று மாற்றி சொல்லி இறைவனை அடைய
இது தான் சரி என்று முடிவுசெய்தார்கள்

அதன்படி

சி- சிவம்

வ- திருவருள்

ய-ஆன்மா

ந-திரோதமலம்

ம-ஆணவமலம்.

திரோதமலம் என்பது அழுக்கை நீக்கும்
பொருள். "நான்' என்ற ஆணவ அழுக்கை
பூசியிருக்கும் ஆன்மா, திரோதமலம் கொண்டு
சுத்தம் செய்து ,சிவத்தை அடைந்து
பிறவிப்பிணியில் இருந்து விடுபடும் என்பது
இதன் பொருள் என்று முடிவு செய்து இப்படி
சொல்ல வேண்டும் என்று கூறினார்கள்.

இவர்கள் கோட்பாட்டின் அடிப்படையில்
முதலில் கோவில்களில் நமசிவய என்றும்
சில கோவில்களில் சிவயநம என்று எழுதி
வைக்க பட்டது ,

சில பக்தர்கள் அப்படியும் சில பக்தர்கள்
இப்படியும் சொல்லி வந்தார்கள் .

உண்மையில் இதன் அர்த்தம் சூக்கும
பஞ்சாட்சரம் ,ஸ்துல பஞ்சாட்சரம் என்று
பிரித்து பார்க்க வேண்டும் என்று சில
மகான்கள் சொல்கிறார்கள் .

கேளப்பா சிங் நமசி வாய மென்றால்
கிளர்ந்து நின்ற தென்னமரம் வளையுமப்பா
நாளப்பா மங் மங் கென் றொருகா லோதில்
நமனுமே கிட்ட வந்து அணுகா னப்பா
வாளப்பா வங் சிவய நமவென் றாலோ
மழைதனிலே நனையாமற் செல்லலாகும்
ஆளப்பா மழைநிற்க வேண்டு மென்றால்
ஆச்சரியம் சிவாய ஓம் ஸ்ரீயும் சொல்லே.

நாம் வாழும் இந்த பூமியை ஆண்ட வடிவம்
என்றும் இந்த அண்டம் ஒரு வெற்று இடத்தில்
சுற்றி கொண்டு இருக்கிறது என்றும் நாம்
அறிவோம் .

இந்த அண்டத்துள் வாழும் நம்மை பிண்டம்
என்று சொல்கிறார்கள் மெய்ஞானிகள்
(சித்தர்கள் )
அண்டமும் பிண்டமும் ஒன்றே என்றும்
அண்டத்துக்குள் அண்டமாய்
அணுவில் நிற்பவனும் ,
அண்டவெளி பிரபஞ்சத்தில் நிறைந்து இருக்கும்
அந்த இறைவனை
அடைவது பற்றி அதாவது சிவம் என்ற அந்த
மஹா பிரம்மத்தில் கலப்பது பற்றி
கலந்தவர்கள் ,

அதனுடன் கலக்க மனித பிறப்பு எடுத்த
உயிர்களுக்கு கருணையுடன் சொன்ன ரகசியம்
தான் இந்த பஞ்சாட்சர எழுத்துக்கள் ....

சில அடிப்படை விவமரம்களை நாம் தெரிந்து
கொள்ளவேண்டும் ...

எந்த ஒரு காரியத்தில் நாம் நுழைந்தாலும் சில
விதிமுறைகள் மற்றும் கட்டுபாடுகள் உண்டு ,
அதன்படி நாம் செய்தோம் என்றால் நமக்கு
வெற்றியும் அந்த செயலின் நிறைவு
கிடைக்கும்.இது ஒரு வகை அறிவியல்
கோட்பாடு தான் ..

சிவபெருமானின் 5 முகம்கள்...

சத்தியோஜாதம்--படைத்தல் --பிரம்மா--தம்பனம் --பூமி --கேட்டல் --ந

வாமதேவம் -காத்தல்-பெருமாள் -பேதனம் -
தண்ணீர் -தொடு உணர்வு -ம

அகோரம் -அளித்தால் (கொடுத்தல் )-ருத்ரன் -.மோகனம் - தீ- பார்த்தல் - சி

தத்புருஷம் -சாந்தம் -மகேஸ்வரன் -மாரணம் - காற்று -சுவை அறிதல்-வ

ஈசான்யும்-அனுக்ரஹம்-சதாசிவம்-ஆ
கர்ஷணம்-ஆகாயம்-சுவாசித்தல்-ய

ந -காது

ம -தோல் (தீண்டுதல் உணர்வு )

சி -கண்

வ -நாக்கு

ய - மூக்கு

இவைகள் சித்தர்கள் வகுத்த யோகா நூல்களில்
சொல்லபடுபவை ..

இப்படி 5 செயல்களை உள்ளே அடக்கியது
அல்லது 5 செயல்களை கொண்ட
சிவபெருமானின் அட்சரம் என்று சொல்லலாம் .

இப்படி 5 பூதம் ,
5 புலன்கள் ,
5 மூர்த்திகள்
5 தொழில்கள்
5 உணர்வுகள்
5 மூர்த்திகள் ....கொண்ட கலவை
என்று புரிந்து கொள்ளல் வேண்டும் .

மற்ற ஒரு பார்வை
5 மூர்த்திகளையும் வணங்கும் படி 5
எழுத்துகள்
இதில் சிவ பெருமானின் 5 தொழில்களை பற்றி
நாம் அறிந்து கொள்ள முடியும்
ஆனால் 6வது ஒரு தொழில் உண்டு அது
அருளல் என்று செயலாகும் .

இதை அறிந்து கொள்ள அட்சரத்துக்குள் உள்ளே
கவனிக்க வேண்டும்
அது
1.ந ம சி வ ய...
2.ந ம வ சி ய
3. வ சி ய ந ம
4.சி வ ய ந ம
5.ம ய ந வ சி
6.சி வ ய வ சி ...

இங்கே எல்லா அட்சரமும் சிவ பதியட்சரத்தில்
ஒடுங்க சீவன் முக்தி வரும் என்பது சித்தர்
வாக்கு ...

இதன் விவரத்தை நான் இங்கே பதியவில்லை ,
(யோக நூல்கள் உள்ள விவரம் விளக்கம் தர பல.தகவல் பதிக்க வேண்டிவரும்)

சிவ வாக்கியர் padalakali கவனமுடன்
கவனித்து கேட்டோம் என்றால்
இவைகள் தெளிவாக புரியும் ..

"சி வ ய ந ம" என்று சொல்பவருக்கு ஆபத்து
ஒரு நாளும் இல்லையே என்று
சொல்லபடுவதை காரண அட்சரம் என்றும்
" சி வ ய வ சி" என்பதனை மஹா காரண
அட்சரம் என்றும் இரு கொள்ளி என்று
சொல்கிறார்கள் சித்தர்கள் ...

நாம் எப்படி சொல்ல வேண்டும் ?

வாசி என்று சொல்லை திருப்பினால் சி வா..

வாசி என்றால் நம்மில் உள்ள மூச்சு காற்று
நம்முடைய உடம்பில் ஓடும் காற்றை மாற்றும்
சக்தி படைத்தது சிவா
என்ற சொல் சிவா சிவ இரண்டும் ஒன்று தான்
குழம்ப வேண்டாம் .

இதை பற்றி அறிந்து கொள்ள நீங்கள் திருவாசி
(திருச்சி ) என்று சிவ பெருமான் கோவிலுக்கு
சென்று வந்தால் புரிந்து கொள்ளலாம் .

"ஓம் ந ம சி வ ய "என்று சொல்வதின் முலம்
உலகத்தில் உள்ள எல்லா இன்பம்களையும்
பெறமுடியும் ....

"ஓம் சி வ ய ந ம" என்று சொல்வதின் முலம்
கோள்களின் சாபம் விலகும்
அம்மையப்பனின் தரிசனம் கிடைக்கும் ..

மற்றும் பஞ்சாட்சர மந்திரத்தை
மாற்றி ,திருப்பி

ஓம் ந ம சி வ ய-- தம்பனம்

ஓம் ம சி வ ய ந --பேதனம்

ஓம் சி வ ய ந ம--மோகனம்

ஓம் வ ந ம சி வ--மாரணம்

ஓம் ய ந ம ச வ--ஆகர்ஷணம்
போன்ற பலன்கள் அந்த மூர்த்திகளால்
தரப்படும் ,
நமக்கு வாழ்கையில் நற் கதி அடைய
அம்பாளின் முலம் அப்பனை அடைந்தால்
மட்டுமே சாத்தியம் ,
இது சத்தியம் ,சத்தியம் ,சத்தியம்
இதன் முறையாக பெருமானை அடைய நாம்
சொல்ல வேண்டிய அட்சரம்
"சி வ ய ந ம ஓம் "
"சி வ ய சி வ ஓம்"
"சி வ ய வசி ஓம் "
" சிவ சிவ சிவ ஓம் "....

என்று சுக ஆசனம்
கொண்டு ஜெபிக்க சிவ கதி கிடைக்கும் ..

இது.சித்தர்கள் வாக்கு
என் அனுபவம் ஒரு ஒரு லிங்கோத்பவ
காலத்திலும் சுக ஆசனத்தோடு வடக்கை
நோக்கி நான் விளையாட்டாக சொல்லியது
...அதன் பின் நடந்த
அற்புதம்கள் ....

நீங்களும் அடைய வேண்டும்
என்று உங்களை வாழ்த்தி
பதிவை நிறைவு செய்கிறேன் ....

நன்றி

அகத்தியர்
காக புஜண்டர் ஆசிகளுடன் .....🙏🙏🙏 நன்றி சிவா நன்றி