Thursday 5 March 2020

முருகனருள்

*"ஆன்மிகம்:"*

*நாகாபரண முருகன்...*

*சே* லம் மாவட்டம் கபிலர் மலை கருவறை குடவரையாக உருவாக்கப்பட்டுள்ளது.

*இ* ங்குள்ள,

*"ஸ்ரீ முருகப்பெருமான்"*

*பா* லமுருகனாக கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார்.

*மூ* லவருக்கு வலது புறத்தில் சுயம்பு உருவம் இருப்பதைக் காணலாம்.

*உ* ற்சவர் நாகாபரணத்துடன் காட்சி தருவார்.

*சுயம்பு முருகன்:*

*தி* ருப்போரூர் கருவறையில் பனை மரத்தடியில் புற்றிடம்கொண்ட சுயம்புவாக முருகப்பெருமான் காட்சி தருகிறார்.

*இ* வருக்கு அபிஷேகம் கிடையாது.

*பு* னுகு சட்டம் மட்டுமே சாற்றப்படுகிறது.

*பி* ன்னர் கவசம் அணிந்து அலங்காரம் செய்கிறார்கள்.

*அ* பிஷேகத்திற்காக தனியே ஒரு முருகனும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

*விஸ்வரூப முருகன்:*

*கு* மரி மாவட்டம் வேளிமலையில் விஸ்வரூப முருகப்பெருமான் காட்சியளிக்கிறார்.

*இ* ந்த கந்தன் 8 அடி 8 அங்குல உயரத்துடன் கம்பீரமாக வீற்றிருக்கிறார்.

*அ* தே போல் வள்ளி அம்மையின் திருவுருவம் 6 அடி 2 அங்குலம் கொண்டது.

*மு* ருகப்பெருமான் வயதான தோற்றத்திலும் - வேடனாகவும் வந்து வள்ளியம்மையை திருமணம் செய்து கொண்ட தலமாக இது சொல்லப்படுகிறது.

*வ* ள்ளியுடன் முருகப்பெருமான் காட்சியளிக்கும் அபூர்வ தலம் இதுவாகும்...