Tuesday 31 July 2018

தேரையர் சித்தர் வழிபாட்டு முறை

தேரையர் சித்தர் வழிபாட்டு முறை
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

தேரையர் சித்தர் ஐயாவின் மூலமந்திரம் .

//"ஓம் லபம் ருணம் நஸீம் ஶ்ரீதேரைய சித்தரே போற்றி,போற்றி. "//

ஐயாவை தியானிக்கும் மந்திரம்.

"மாய மயக்கம் நீக்கி,காய கல்பம் தேடி,மூலிகை கொணர்ந்து ,முதுகுகூன் நிமிர்த்திய, அகத்தியர் சீடனே உன் பாதம் சரணம்"

ஐயாவின்16 போற்றிகள்.

1.குரு மெச்சிய சீடரே போற்றி.
2.தேரையை அகற்றிய தேரையரே போற்றி.
3.சிவனை பூசிப்பவரே போற்றி.
4.சங்கடங்களை போக்குபவரே போற்றி.
5.சஞ்சலங்களை தீர்ப்பவரே போற்றி.
6.சாந்த சொரூபரே போற்றி.
7.நோய் தீர்க்கும் மருந்தே போற்றி.
8.ஞானம் அளிககும் ஞானியே போற்றி.
9.சித்த சுத்தியுடையவரே போற்றி.
10.சகல பாபங்களையும் போக்குபவரே போற்றி.
11.குறிப்பறிந்து செய்யும் குணசீலரே போற்றி.
12.வெள்ளை வஸ்திரம் தரிப்பவரே போற்றி.
13.துக்கத்தை போக்குபவரே போற்றி.
14.கண் ஒளி தந்த கருணையே போற்றி.
15.குறை தீர்க்கும் நிறையே போற்றி.
16..பாண்டியன் கூன்நிமிர்த்திய தேரையரே போற்றி போற்றி.

ஐயாவை முறையாக வழிபட்டால்.   சூரிய கிரகத்தால் ஏற்படும் தோஷம் விலகும்..குடும்ப ஒற்றுமை ஓங்கும். பெண்களுக்கு ஏற்படும் வயிற்றுவலி, இடுப்புவலி குணமாகும். பெண்களால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினை தீரும். வீண்பழி, அவமரியாதை, ஒவ்வாமை போன்றவை அகலும். வாக்கு பலிதம், ராசியோகம் உண்டாகும். பிரச்சினைகளில்  சரியான முடிவெடுக்கும் ஆற்றல் உண்டாகும்.

ஐயா இயற்றிய நூல்கள்.

1.பதார்த்த குண சிந்தாமணி.
2.நீர்க்குறிநூல்.
3.நோய்க்குறி நூல்.
4.தைல வர்க்க சுருக்கம்.
5. வைத்திய மகா வெண்பா.
6.மணி வெண்பா 7.மருத்துவப் பாதம் ,
ஆகிய நூல்களை ஐயா நமக்கு அருளியுள்ளார்கள்.
நன்றி.
ௐ. சிவாய.

குரு சிவகாமி நடராஜன்
ஜோதிட ரத்னா.
V ரவி கண்ணன்.