Monday 16 July 2018

கோவில்பட்டி திருமங்கைதிருப்பதி எம்பெருமானின் திருமுகத்தில் வியர்வை அரும்பியது

*அத்புதம்* *ஆச்சர்யம்* *ஆனந்தம்*.           இன்று நம் கோவில்பட்டி திருமங்கைதிருப்பதி ( இந்திரா நகர்) திருவேங்கடமுடையானுக்கு காலை சுக்ரவார திருமஞ்சனம் முடிந்து திருவாராதனம் நடைபெறும் போது எம்பெருமானின் திருமுகத்தில் வியர்வை அரும்பியது "அத்புதம் ஆச்சர்யம்  "உடனே திருமுகத்தை துடைத்தோம் துடைக்க துடைக்க மீண்டும் மீண்டும் வியர்த்தது நாங்கள் பரவஶமடைந்தோம் என்னே எம்பெருமான் திருவேங்கடமுடையானின் லீலை " நான் இங்கே(கோவில்பட்டி திருமங்கை திருப்பதியிலே) ப்ரத்யக்ஷமாக இருக்கிறேன்" என்று நமக்கு உணர்த்துகிறான் அடியார்கள் அனைவரும் இந்த அத்புத சேவையை சேவித்து மகிழுங்கள்   நம் திருவேங்கடமுடையானின் திருவடியை போற்றுங்கள்