Saturday 28 July 2018

படவேட்டம்மன்

#ஆடி_மாதம்_11
#படவேடு_ரேணுகாஅம்மன்
திருக்கோயில் 20 அறிய தகவல்

1. ஆலயத்தில் அம்மன் (சிரசு மட்டும்) சுயம்பு மூர்த்தியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

2. அம்மன் கோயில் என்றாலும் சுற்றுச் சுவர்களில் சிங்க வாகனம் இல்லை, அதற்கு பதில் இங்கு பசுவே உள்ளது.

3. பொதுவாக அம்மன் சன்னதிகளில் பலிபீடம் முன்பு யாழி அல்லது சிங்கம் இருக்கும் ஆனால் இங்கு மட்டும் எருது உள்ளது.

4. சக்திக்குள் அனைத்தும் அடக்கம் என்பதற்கேற்ப இங்குள்ள மூலஸ்தானத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் அரூபமாக அருள்பாலிக்கின்றனர்.

5. அம்மன் சன்னதிகளில் குங்குமம் பிரசாதமாக தரப்படும் ஆனால் இங்கு வெட்டி எடுக்கப்பட்ட மண் பிரசாதமாக தரப்படுகிறது.

6. இந்த மண் இத்தலத்திலிருந்து சற்று தொலைவில் உள்ள ஜமதக்னி முனிவர் (ரேணுகாதேவியின் கணவர்) வாழ்ந்ததாக கருதப்படும் ஆசிரமத்தில் யாகம் செய்த இடத்திலிருந்து வெட்டி எடுக்கப்படுகிறது.

7. வருடாவருடம் ஆனித்திருமஞ்சனம் அன்று அந்த இடத்தில் பூமியில் பூத்திருக்கும் மண்ணை வெட்டி எடுத்து வந்து பக்தர்களுக்கு தரப்படுகிறது.

8. பிணி, வயிற்றுவலி ஆகியவை குணமடையவும் குழந்தைவரம் கிடைக்கவும் இந்த மண்ணை தண்ணீரில் கலந்து பக்தர்கள் அருந்துகிறார்கள்.

9. ஜமதக்னி முனிவருக்கும் ரேணுகாம்பாளுக்கும் பிறந்த பரசுராமர் அவதரித்த தலம் இது, ஆதலால் பரசுராம ஷேத்திரம் என்ற பெயரும் உண்டு.

10. இத்திருக்கோயில் உட்பகுதியில் ஒரு திருச்சுற்றும், வெளிப்புறம் ஒரு திருச்சுற்றும், நான்கு மாடவீதியுடன் அமைத்துள்ளது. திருக்குளம் உட்பிரகாரத்தில் வடக்கிழக்கில் அமையப்பெற்றுள்ளது.

11. அருள்மிகு விநாயகர், அருள்மிகு ஆறுமுகர் தனித்தனி சன்னதிகளில் காட்சி அளிக்கின்றனர். பரசுராமருக்கு சிலை தனியாக உள்ளது.

12. திருச்சுற்றில் ரேணுகாம்பாள் அம்மன் சன்னதிக்கு அருகில் உட்பிரகாரத்தில் அருள்மிகு சோமநாத ஈஸ்வரர், உமாமகேஸ்வரி அம்மன் தனித்தனி சன்னதிகளில் காட்சியளிக்கின்றனர்.

13. இராஜ கம்பீர சம்புவராயர் எனும் அரசன் தனது படைகளுடன் இத்தலத்தில் தங்கி போரிட்டதால் படைவீடு என பெயர் பெற்று நாளடைவில் படவேடு என்று மருவி வந்துள்ளது.

14. ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பாணலிங்கமும், ஜனாகர்ஷண சக்கரமும் அமைத்துள்ளது.

15. அம்மை கண்டவர்கள் விரதமிருந்து இத்தலத்துக்கு வந்து தங்கினால் அதிக பட்சம் 3 அல்லது 5 நாட்களுக்குள் அம்மை இறங்கி விடுகிறது.

16. தலத்தில் தரும் தீர்த்தத்தை உடல் மேல் தெளித்துக் கொள்கின்றனர். வேப்பிலை தண்ணீரை தீர்த்தமாக வாங்கிக் குடித்து அம்மனை வணங்கி செல்கிறார்கள்.

17. அங்கபிரதட்சணம் செய்தல், மொட்டை அடித்தல், காதுகுத்தல், தொட்டில் கட்டுதல் பக்தர்கள் செலுத்தும் முக்கியமான நேர்த்தி கடன்களாகும்.

18. ஆடி மாதம் முழுவதும் இங்கு மிகவும் விஷேசமாக இருக்கும். ஒவ்வொரு தமிழ் மாத பிறப்பின் போதும் இக்கோயிலில் பக்தர்கள் கூட்டம் பெருமளவில் இருக்கும்.

19. காஞ்சிபுரம், வேலூர், போளூர், ஆற்காடு, ஆரணி முதலிய இடங்களிலிருந்து படவேட்டிற்கு பேருந்து வசதி உள்ளது.

20. திருவண்ணாமலை நெடுஞ்சாலையில் சந்தவாசல் என்ற ஊரிலிருந்து பிரிந்து செல்லும் சாலையில் 8 கி.மீ. தொலைவில் படவேடு உள்ளது.

🌹🌹🌹🌹🌹 ஓம் சக்தி 🌹🌹🌹🌹🌹