Friday 4 September 2020

அகத்தியர் போற்றி அகவல்

அகத்தியர் போற்றி அகவல்


அகத்திய மாமுனி திருவடி போற்றி

அகத்தில் அமர்ந்து அருள்வாய் போற்றி

அகப்பூ சைசெய்த அகத்தியர் போற்றி

அகக்கண் கொண்டு காண்பாய் போற்றி

சாகாக் கல்வி சாற்றினாய் போற்றி

ஆகா ஆணவம் அகற்றினாய் போற்றி

தேகம ழியாது காத்தாய் போற்றி

போகர் போற்றிய குருவே போற்றி

யாகம் யோகம் விளக்கினாய் போற்றி

ஏகன் இறைவனை வணங்கினாய் போற்றி

வாசிநி லையறி யவைத்தாய் போற்றி

நேசி உயிரை என்றாய் போற்றி

அத்தன் அன்பன் அகத்தியர் போற்றி

பத்துலட் சம்பா பாடினாய் போற்றி

தத்துவ விளக்கம் தந்தாய் போற்றி

நித்தம் தொழுகிறேன் என்குரு போற்றி

சித்தர் நிலையைச் செப்பினாய் போற்றி

சித்தர் போற்றும் குருமுனி போற்றி

சித்தரா கும்வழிக் காட்டினாய் போற்றி

சித்தர் கூட்டம் குருவே போற்றி

வித்தகன் திருவடி பொன்னடி போற்றி

சித்த வித்தைகள் சொன்னாய் போற்றி

வைத்தியன் இலக்கணம் வகுத்தாய் போற்றி

வைத்திய சாத்திரம் படைத்தாய் போற்றி

புத்தியால் தன்னுள் கண்டாய் போற்றி

நித்திய தேகம் பெற்றாய் போற்றி

நாத விந்து நவின்றாய் போற்றி

போதம் உன்னால் அறிந்தோம் போற்றி

ஆதா ரமாறும் அறிந்தாய் போற்றி

ஆதா ரம்வெல் லகூறினாய் போற்றி

வாத சௌமியம் இயற்றினாய் போற்றி

வாதம் செய்த வல்லபா போற்றி

அதிசய மூலிகை அறிந்தாய் போற்றி

விதியினை வென்ற வீரா போற்றி

பதினெண் சித்தர் பதியே போற்றி

முதிர்ந்த ஞானம் ஊட்டுவாய் போற்றி

பொதிகை இருப்பிடம் கொண்டாய் போற்றி

பொதிகை சிறப்பினை உரைத்தாய் போற்றி

மந்திரம் தந்திரம் சொன்னாய் போற்றி

எந்திரம் செய்முறை இயம்பினாய் போற்றி

முப்பு சுன்னம் விளக்கினாய் போற்றி

உப்பு அமிலம் உரைத்தாய் போற்றி

ராமனுக் குதவிய அருளே போற்றி

சோமப் பால் அருந் தியவரே போற்றி

தமிழ் இலக்கணம் தந்தாய் போற்றி

தமிழ்ச்சங் கம்வீற் றிருந்தாய் போற்றி

காய கற்பம் கண்டாய் போற்றி

காயம் நிலைத்திட செய்தாய் போற்றி

காயத்தை ஒளி ஆக்கினாய் போற்றி

தூய உள்ளம் பெற்றாய் போற்றி

சாயுச் சியபத பெற்றாய் போற்றி

சாயுச் சியம்பெற உதவுவாய் போற்றி

மெய்ஞ்ஞான கடல் அகத்தியர் போற்றி

பொய்ஞ்ஞா னம்விலக் கிவைத்தாய் போற்றி

புராண ரிஷியுடன் பழகினாய் போற்றி

பிரணவ மகிமை புகன்றாய் போற்றி

 கரணம் கட்டிக் காத்தாய் போற்றி

பிராணாயாமம் விளக்கினாய் போற்றி

குருமுனி பட்டம் பெற்றாய் போற்றி

குருவாய் முருகனைக் கொண்டாய் போற்றி

குருமொழி கொள்ளக் கூறினாய் போற்றி

இருதய தரிசனம் இயம்பினாய் போற்றி

பெரும்புகழ் புசுண்டர் குருவே போற்றி

அருணகிரிநாதர் குருவே போற்றி

திருவருள் வழங்கும் குருவே போற்றி

குருவருள் வழங்கிடும் அகத்தியர் போற்றி

அருவே உருவே அகத்தியர் போற்றி

திருவே தெளிவே சித்தரே போற்றி

கருவறிந் துகைலை ஏகினாய் போற்றி

அருவ தரிசனம் கூறினாய் போற்றி

தரிசனம் பதினா றுசொன்னாய் போற்றி

திரிகோண பூஜை அறிந்தாய் போற்றி

தொல்காப்பியர் குரு சான்றோய் போற்றி

பல் ஊழி காலம் இருப்பாய் போற்றி

புலவர் போற்றும் புலமையே போற்றி

திலகம் புலவர்க் குஆனாய் போற்றி

புலத்தியர் குருவே புனிதா போற்றி

மலங்கள் மூன்றும் போக்கினாய் போற்றி

செபமணி வகைகள் விளக்கினாய் போற்றி

செபம்செய் முறைவிதி கூறினாய் போற்றி

நாலயுக அதிசயம் அறிந்தாய் போற்றி

வாலறி வன்அருள் பெற்றாய் போற்றி

பலரிஷி பற்றி பாடினாய் போற்றி

பலரிஷி கருத்து பகன்றாய் போற்றி

ஞாலம் போற்றும் ஞானியே போற்றி

காலம் வென்ற கருத்தாய் போற்றி

தலைச்சங்கம் வளர்த்த தலைவா போற்றி

நிலைக்கும் நூலினைப் ஆக்கினாய் போற்றி

பவக்கடல் கடந்திட பகன்றாய் போற்றி

தவமது செய்த தவசியே போற்றி

சிவனின் சீடரின் சீடரே போற்றி

குவலயம் ஏற்றிடும் குருவே போற்றி

ஊழி கண்ட உத்தமா போற்றி

வாழிநின் நாமம் திருவடி போற்றி

வள்ளுவர் போற்றிய வள்ளலே போற்றி

உள்ளும் புறமும் ரானாய் போற்றி

திறமான நூலினைத் திரட்டினாய் போற்றி

அறம்பல விளக்கம் அளித்தாய் போற்றி

பிறப்பு அறுக்க வைத்தாய் போற்றி

சிறப்பு தவிர்க்க வைத்தாய் போற்றி

ஞான காவியம் எழுதினாய் போற்றி

ஞானக் கண்ணைப் பெற்றாய் போற்றி

மானத பூசை கூறினாய் போற்றி

தானம் தருமுறை கூறினாய் போற்றி

அஷ்ட கர்மம் அறிந்தாய் போற்றி

அட்டாங்க யோகம் விளக்கினாய் போற்றி

திருநெறி காட்டும் அகத்தியர் போற்றி

திருவடி பணிகிறேன் காப்பாய் போற்றி

No comments:

Post a Comment