Saturday 12 September 2020

விதுர நீதி

விதுர நீதி பகுதி 17

தீயவர்கள், மற்றவர்களிடம்,
என்னென்ன நல்ல குணங்கள்
உள்ளன என்பதை அறிந்து
கொள்வதில், ஆர்வம் காட்டுவதில்லை.

மற்றவர்களிடம் என்னென்ன குறைகள் உள்ளன என்பதை கண்டுபிடிப்பதில்
தான், அக்கறை செலுத்துகின்றனர்.
 சொர்க்கம் செல்பவர்கள் யார்?

*பெரியோர் உபதேசத்தை கேட்பவர்கள்*

*நீதி தெரிந்தவர்கள்*

*கொடுக்கும் குணம் உள்ளபவர்கள்*

*கடவுளுக்கு நைவேத்யம் செய்த பிரசாதங்களை உண்பவர்கள்*

*மற்றவருக்கு இம்சை தராதவர்கள்*

*பிறரை மனதாலோ உடம்பாலோ சொல்லாலோ காயப்படுத்தாமல் இருப்பவர்*

*உலகத்தில் ஒருவருக்கும் தீங்கு செய்யாதவர்*

*செய் நன்றி மறக்காதவர்*

*எந்த தருணத்திலும் சத்தியம் உண்மை பேசுபவர்*

இவர்கள் கண்டிப்பாக சொர்க்கம் செல்வார்கள்....

விருந்தினர்,யாசகர்,யோகியர் குண நலன்கள், நமது நம்பிக்கை தவறானால் ஒரு மனிதனின் நிலை

             கடந்த பதிவில் நல்ல ஊழியனுக்கும் முதலாளிக்குமான குண நலன்களை விளக்கிய விதுரர், அதன் அடிப்படையில் பாண்டவர்கள் மற்றும் கௌரவர்கள் நிலைமையை இவ்வாறு எடுத்துரைக்கிறார். “   மன்னா, திருதராஷ்டிரரே, உமது மகன் துரியோதனன் காட்டைப் போன்றவன். திருதராஷ்டிரரே, பாண்டவர்கள் அந்தக் காட்டின் சிம்மங்கள் என்று அறிந்து கொள்வீராக. அதன் சிங்கங்கள் இல்லாமல் அந்தக் காடு அழிக்கப்பட்டு விடும். அதே போல தங்கள் புகலிடமான காடு இல்லாமல் சிங்கங்களும் அழிவுக்குள்ளாகும்” ,என நடக்கப் போகும் நிகழ்வுகளை உணர்ந்து விதுரர், திருதராஷ்டிரனை எச்சரிக்கிறார்.

        அப்படியெனில் என் மக்களில் தகுதி வாய்ந்தவரை தேர்ந்தெடுத்து இந்த நிலையை மாற்றுவது எப்படி என்று திருதராஷ்டிரர் கேட்கிறார்?

         நல்ல பழக்க வழக்கங்களை பெற்றோரையும்,  குருவையும் பின்பற்றி அவர்களாக கற்றுக்  கொள்வதன் மூலமாகவே அதை பெற முடியும்  . தருமனும் அவன் சகோதரர்களும் அந்நிலையிலிருந்து ஒரு போதும் தவறியதில்லை   என்று கூறிய விதுரர் தொடர்ந்து  விருந்தினர்,யாசகர், யோகியர் குண நலன்களை பற்றியும்,   நமது நம்பிக்கை தவறானால் வாழ்க்கை எப்படி மாறிப் போகிறது என்பதையும், பற்றி கூறுகிறார்

விருந்தினர் உபசரிப்பு

           வயது முதிர்ந்த ஒரு மதிப்பிற்குரிய நபர், தனது இல்லத்திற்கு விருந்தினராக வரும்போது, ஓர் இளைஞனின் அவர் மீது மதிப்பு கொண்டு அவரை எதிர்கொண்டு அழைத்து), வணங்கிய பிறகே இல்லத்திற்குள் அழைத்து வர வேண்டும்.

               தற்கட்டுப்பாடுடைய ஒருவன் , விருந்தினருக்கு அமர தகுந்த இருக்கையை அளித்து, நீரைக் கொண்டு வந்து, அவரது காலைக் கழுவச் செய்து, வழக்கமான விசாரிப்புகளைச் செய்த பிறகே, தனது சொந்த விவகாரங்களைப் அவரிடம் பேச வேண்டும். அனைத்தையும் கருத்தில் கொண்ட பிறகு, அவருக்கு உணவு அளிக்க வேண்டும்.

            ஒருவன் மீது கொண்ட பயத்தினாலோ, அவனது கஞ்சத்தனத்தாலோ, அவனது விருப்பமின்மையாலோ, எவனுடைய வீட்டில், மந்திரங்கள் அறிந்த அந்தணர் ஒருவர் நீர், தேன், தயிர்க்கடைசல் மற்றும் பசுக்கள் ஆகிய தானங்களைப் பெறவில்லையோ, அவன் வீணாக வாழ்பவன் என்று ஞானிகள் கூறியுள்ளனர்.

       மருத்துவர், ஆயுதங்கள் செய்பவர், காலம் முடியும் முன்னரே பிரம்மச்சரிய நோன்பைக் கைவிடுபவன், திருடன், கோணல்புத்திக்காரன், மதுவுண்ணும் பிராமணன், கருச்சிதைவை ஏற்படுத்துபவன், படைக்குச் சேவை செய்து வாழ்பவன், வேதங்களை விற்பவன் ஆகியோர் விருந்தினராக வந்தாலும், அவன் என்னதான் நீர் கொடுக்கத் தகுதியற்றவனாக இருப்பினும், அந்த வீட்டின் உரிமையாளன்,  அவனை அன்பாக நடத்த வேண்டும். விருந்தினராக வருபவன் தகுதியற்றவனாக இருந்தாலும், அவர்களுக்கும் விருந்தளிப்பவனே உண்மையான உரிமையாளன்.

யோகி எப்படி இருக்க வேண்டும்?

         உப்பு, சமைத்த உணவு, தயிர்க்கடைசல், பால், தேன், எண்ணெய், தெளிந்த நெய், எள் இறைச்சி, பழங்கள், கிழங்குகள், கீரைவகைகள், சாயமேற்றப்பட்ட துணிகள், அனைத்து வகைச் சந்தனக்கலவைகள் நறுமணப்பொருட்கள் மற்றும் வெல்லம் , பாகு ஆகியவற்றை விற்பனை செய்பவனாக  ஓர் அந்தணன் இருக்கக்கூடாது.

            கோப வசப்படாதவன், துயரத்தைக் கடந்தவன், எப்போதும் நட்போ சண்டையோ தேவைப்படாதவன், புகழ் மற்றும் பழி ஆகிய இரண்டையும் அலட்சியம் செய்பவன், விருப்பு மற்றும் வெறுப்பு இரண்டையும் விட்டு விலகி நிற்பவன், இவ்வுலகில் இருந்து முழுமையாக விடுபட்டவனாக இருப்பின், அவனே உண்மையான  யோகியாவான்.

             காட்டில் முளைக்கும் தினை
 கம்பு, சோளம், கேழ்வரகு,வரகு அரிசி, குதிரைவாலி அரிசி, கிழங்குகள், கீரைகள் ஆகியவற்றைக் கொண்டு வாழ்ந்து, தன் ஆன்மாவை முழுக் கட்டுப்பாட்டுக்கள் வைத்து, தனது வழிபாட்டுக்குரிய நெருப்பைக் கவனமாக வைத்து, விருந்தினர்களை எப்போதும் மதிப்புடன் கருதி, காட்டில் வசிக்கும் அறம்சார்ந்த தவசியே, உண்மையில் சகோதரத்துவத்தில்  முதன்மையானவன் ஆவான்.

நம்பிக்கை

           ஒரு புத்திசாலி மனிதனுக்குத் தீங்கு இழைத்துவிட்டு, அந்தத் தீங்குக்கு உள்ளானவன் உண்மையில் தொலைவில் தான் வாழ்கிறான்

் என்று உறுதி செய்தாலும் ஒருவன்  சமாதானம் அடையக்கூடாது . புத்திசாலி மனிதர்களின் கரங்கள் நீளமானவை. அவற்றைக் கொண்டு அவர்கள் அந்தத் தீங்குக்கான பதில் தீங்கைத் திரும்பச் செய்ய முடியும்.

            நம்பத்தகாதவனிடம் ஒருவன் நம்பிக்கை கொள்ளக்கூடாது. அதே போல, நம்பத்தகுந்தவனிடமும் அதீத நம்பிக்கை கொள்ளலாகாது. நம்பிக்கையைப் பெற்றவனிடம் இருந்து எழும் ஆபத்து, ஒருவனது வேர்களையே அறுத்துவிடும்.

             ஒருவன், பொறாமையைக் கைவிட வேண்டும், தனது மனைவிகளைக் காக்க வேண்டும், பிறருக்கு உரியதைச் சரியாகக் கொடுக்க வேண்டும், பேச்சில் இனிமையுடையவனாகவும் இருக்க வேண்டும். தனது மனைவிகளைப் பொறுத்தவரை, ஒருவன், இனிய நாக்கும், பேச்சும் கொண்டவனாக இருக்க வேண்டும். ஆனால் அவன் அவர்களது அடிமையாக இருக்கக்கூடாது. உயர்ந்த அருள் கொண்டவர்களாவும், அறம் சார்ந்தவர்களாகவும், வழிபடத் தகுந்தவர்களாகவும், தங்கள் குடும்பத்தின் ஆபரணங்களாகவும் திகழும் மனைவிகளே ஒருவனது இல்லச் செழிப்பின் உருவகம்  என்று சொல்லப்படுகிறது. எனவே, அவர்கள் சிறப்பாகப் பாதுகாக்கப்பட வேண்டும்.

                   ஒரு மன்னன் தன் தந்தைக்கு அந்தப்புரத்தின் மேற்பார்வையை அளிக்கலாம். தாய்க்கு சமையலறையையும் , தன்னைப் போன்ற ஒருவனுக்குப் பசுக்களை மேற்பார்வையிடும் பொறுப்பையும் அளிக்கலாம். ஆனால்,  வேளாண்மையைப் பொறுத்தவை, தானே நேரடியாக அதை மேற்பார்வையிட வேண்டும்.

              வியாபாரம்  செய்ய வந்த விருந்தினர்களுக்குப் பணியாட்களைக் கொண்டும், அந்தண குலத்தைச் சேர்ந்தவருக்குத் தனது மகன்களைக் கொண்டும் பணிவிடை செய்ய வேண்டும்.

🍀மன்னன் ஆட்சித்திறம்🍀

          நெருப்பு அதன் தோற்றத்தை  நீரில் கொண்டுள்ளது; க்ஷத்திரியர்கள், தங்கள் தோற்றத்தை பிராமணர்களில் கொண்டுள்ளனர், இரும்பு தனது தோற்றத்தை கற்களில் கொண்டுள்ளது. தங்கள் முன்னோடிகளுடன் தொடர்பு ஏற்படும்போது, அனைத்தையும் பாதிப்படையச் செய்யும் நெருப்பு, க்ஷத்திரியர்கள் மற்றும் இரும்பு ஆகிய அவற்றின் சக்தி, விரைவில் சமநிலை அடைந்துவிடும்.

         ஒரு நெருப்புத் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மரத்தில் மறைந்திருக்கிறது. நெருப்பு சக்தி கொண்டவர்களான நற்குடியில் பிறந்த நல்லவர்களும், மன்னிக்கும் இயல்பு கொண்ட பொறுமைசாலிகளும், அவர்களுக்குள் இருக்கும் நெருப்பு போன்ற சக்திகளை வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார்கள்.

          தன்னைச் சார்ந்தவர்களாலும், வெளியில் இருப்பவர்களாலும் தனது ஆலோசனைகள் அறியப்படாமல் இருக்கச் செய்யும் அதே வேளையில், பிறரின் ஆலோசனைகளை ஒற்றர்கள் மூலமாக எந்த மன்னன் அறிந்து கொள்கிறானோ, அவன் நீடித்த செழிப்பில் மகிழ்ச்சியாக இருக்கிறான்.

           தான் செய்ய நினைப்பதை ஒருவன் பேசக்கூடாது. அறம், பொருள், இன்ப வகைகளில் நீர் செய்யும் எதுவும், அது நிறைவடையும் வரை அறியப்படாமல் இருக்கட்டும். ஒரு காரியம் செய்யப்படும் வரை  ஆலோசனைகள் பலரால் அறியப்படாதிருக்கட்டும்.

          மலையின் உச்சிக்கோ, மாளிகையின் மேல்தளத்திற்கோ, மரங்களோ செடிகளோ அற்ற காட்டுப்பகுதிக்கோ சென்று, யாரும் அறியாது உமது ஆலோசனைகளில் தீருமானம் எடுக்க வேண்டும்.

           கல்வியறிவில்லாத நண்பன், கல்வியறிவுள்ள, ஆனால் புலனடக்கம் இல்லாத நண்பன் ஆகியோர், அரசாங்க இரகசியத்தின் காப்பாளனாக இருக்கத் தகுதிற்றவர்களாவர்.

           ஒரு மன்னனின் நிதிகள், அவனது ஆலோசனைகள் ஆகிய இரண்டையும் பாதுகாக்கும் பொறுப்பு ஓர் அமைச்சனுக்கு உரியது. எனவே, ஒரு மன்னன்  ஒருவனை நன்றாகச் சோதித்தறியாது  அவன் அமைச்சர்களில் ஒருவனாக ஒருபோதும் ஏற்றுக் கொள்ள கூடாது.

           எவனுடைய அமைச்சர்கள், அவன் செய்யும் அறம், பொருள், இன்பம் சார்ந்த செயல்களை, அவை நிறைவேறிய பிறகு அறிகிறார்களோ, அவர்களே அந்த மன்னனே ஆட்சியாளர்களில் முதன்மையானவன் ஆவான்.

              எந்த மன்னனின் ஆலோசனைகள் சந்தேகமில்லாமல் இரகசியமாக பேணப்படுகிறதோ, அந்த மன்னனே வெற்றியடைவான்.

              அறியாமையால் நிந்திக்கத்தக்க செயல்களைச் செய்பவன், அந்தச் செயல்களின் விளைவால் தனது  உயிரையே கூட இழக்கிறான்.

         புகழத்தக்க காரியங்களைச் செய்யும் போது, அஃது எப்போதும் சுகத்தையே அளிக்கும். அத்தகு செயல்களைச் செய்யாமல் இருப்பதே மனவருத்தத்திற்கு வழிவகுக்கும்.

          பித்ருக்களை மதிக்கும் வண்ணம் செய்யப்படும் சிரார்த்தங்களைச் செய்ய, வேதமறியாத பிராமணனுக்குத் தகுதியில்லாதது போல, நாட்டைப் பாதுகாக்கும் வழிகளைக் குறித்துக் அறியாதவன் அரசியல் கருத்தரங்குகளில்  பங்கு பெற தகுதியற்றவனாவான்.

              நாட்டைப் பாதுகாக்கும் வருவாய் அதிகரித்தல், குறைதல், உபரி ஆகியவற்றில் ஒரு கண் கொண்டு, நாட்டை பாதுகாக்கும் வழிகளை  அறிந்து, தனது நிலையை அறிந்து, மெச்சத்தகுந்த நடத்தை கொண்டிருக்கும் ஒருவன் முழு உலகத்தையும் தன் கட்டுக்குள் கொண்டு வருவான். விளைவை உண்டாக்கும் கோபத்தையும், மகிழ்ச்சியையும் கொண்டு, எது செய்யப்பட வேண்டுமோ

அதை நேரடியாகக் கண்காணித்து, தனது கருவூலத்தைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஒருவன் முழு உலகத்தையும் தன் கட்டுக்குள் கொண்டு வருவான்.
       

1. படை, 2. குடிமக்கள், 3. குறையாத வளம் {செல்வம்}, 4. அமைச்சன், 5. நட்பு {அண்டை நாட்டு நட்பு}, 6. அரண் {காவல்} ஆகிய ஆறு அங்கங்களைக் கொண்டவனே மன்னர்களில் சக்கரவர்த்தி ஆவான்.

        தனது தலைக்கு மேல் பிடிக்கப்படும் குடையையும், தான் வென்ற பெயரையும் கொண்டு ஒரு மன்னன் மனநிறைவு கொள்ள வேண்டும். தனக்கு ஊழியம் செய்வோருடன் தனது நாட்டின் செல்வத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். எந்த ஒரு முடிவையும் தனியாக ஒரு மன்னன் தீர்மானிக்கக்கூடாது.
 
           ஓர் அந்தணன், மற்றொரு அந்தணனை அறிவான், ஒரு கணவன், மனைவியைப் புரிந்து கொள்வான், ஒரு மன்னன் அமைச்சரை அறிவான், ஏகாதிபதிகளே ஏகாதிபதிகளை அறிவார்கள்.

மரணத்திற்குத் தகுந்தவர்கள்

                 மரணத்துக்குத் தகுந்த எதிரி ஒருவனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டவரப்படும்போது, அவனை விடுவிடக்கக்கூடாது. எதிரி மரணத்திற்கே தகுந்தவனென்றாலும், பலம்நிறைந்த எதிரியிடம், பலவீனமாக இருக்கும் ஒருவன் வணக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும். ஆனால், பலத்தில் நிறைவடைந்தவுடனேயே, அவன், அந்த எதிரியைக் கொல்ல வேண்டும். அவன் கொல்லப்படவில்லையென்றால், அந்த எதிரியால் விரைவில் ஆபத்து எழும். தேவர்கள், மன்னர்கள், அந்தணர்கள், முதிர்ந்தோர், குழந்தைகள், ஆதரவற்றோர் ஆகியோருக்கு எதிரான கோபத்தை ஒருவன் முயற்சியுடன் அடக்க வேண்டும்.

                 முட்டாள்கள் ஈடுபடுவது போல, ஆதாயமற்ற சண்டைகளில் ஒரு ஞானி ஈடுபடக்கூடாது. அப்படிப்பட்ட சண்டைகளில் ஈடுபடாமல் இருப்பதால் அவன், இவ்வுலகில் பெரும் புகழை அடைந்து, ஆபத்து மற்றும் பெருந்துயரங்களைத் தவிர்க்கிறான்.
ஆண்மையற்றவனாக  இருக்கும் கணவனை விரும்பாத பெண்களைப் போல, பலனற்ற அருள், விளைவில்லாத கோபம் கொண்டோரைத் தலைவனாக ஏற்றுக் கொள்ள மக்கள் விரும்ப மாட்டார்கள்.

        செல்வத்தை அடைய புத்தி காரணமல்ல, அதே போல, வறுமைக்கு மூடத்தனம் காரணமல்ல; இவ்வுலகில் உள்ள வேறுபாடுகளின் காரணங்களை ஞானிகள் மட்டுமே அறிவர்; எல்லாராலும் அறிய முடியாது.

          வயதில் மூத்தோரையும், நடத்தை, அறிவு, புத்திசாலித்தனம், செல்வம், குலமரபு ஆகியவற்றில் தலைமையாக இருப்போரையும் மூடன் எப்போதும் அவமதிப்பான்.

              தீய மனநிலை கொண்டோர், அறிவற்றவர்கள், பொறாமை கொண்டோர், பாவிகள், குற்றங்களையே பேசுபவர்கள், கோபமுடையவர்கள் ஆகியோர் விரைவில் துயரத்திற்கு உள்ளாகின்றனர்.

             ஏமாற்றுத்தனமில்லாமை சொல் தவறாமை, தானம், நிறுவப்பட்டுள்ள புணர்வு விதிகளை நோற்பது, நன்கு அடக்கப்பட்ட பேச்சு ஆகியவை அனைத்து உயிர்களையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும்.

           ஏமாற்றுத்தனமில்லாத, சுறுசுறுப்பான, நன்றியுணர்வு கொண்ட, புத்திசாலித்தனம் உள்ள, கபடமற்ற ஒருவனது கருவூலம் வெறுமையாக இருப்பினும், தனது செயலால் நண்பர்கள், ஆலோசகர்கள், பணியாட்கள் ஆகியோரை அவன் அடைகிறான்.

          புத்திக்கூர்மை, மன அமைதி, தற்கட்டுப்பாடு, தூய்மை, கடுஞ்சொல் பேசாமை, நண்பர்களுக்கு ஏற்பில்லாத எதையும் செய்யவிரும்பாமை நண்பர்களுக்குத் துரோகம் செய்யாமை ஆகிய ஏழும் ஒருவனுடைய செழிப்பு எனும் சுடருக்கு எரிபொருளாகக் கருதப்படுகின்றன.

         பிறருக்கு உரியதைக் கொடுக்காத இழிந்தவன், தீய ஆன்மா கொண்டவன், நன்றிமறந்தவன், வெட்கங்கெட்டவன் ஆகியோரைத் தவிர்க்க வேண்டும்.

          குற்றமற்ற அப்பாவியைப் பற்றி, அடுத்தவனிடம் தூண்டிவிடும் குற்றவாளி, ஒரே அறையில் பாம்புடன் இரவைக் கடத்தும் மனிதனைப் போல, இரவில் அமைதியாகத் தூங்க முடியாது.

         எவன் கோபம் அடைந்தால், ஒருவனின் உடமைகளும், பொருள் கொள்ளும் வழிகளும் ஆபத்துக்குள்ளாகுமோ, அவனை, தேவர்களை அமைதிப்படுத்துவது போல அமைதிப்படுத்த வேண்டும். பெண்கள், பொறுப்பற்றவர்கள், தங்கள் சாதிக்குரிய கடமைகளில் இருந்து விழுந்தவர்கள், தீய மனநிலை கொண்டவர்கள் ஆகியோரை நம்பியிருக்கும் நோக்கங்களின் வெற்றி சந்தேகத்திற்குரியதே.

            பெண், ஏமாற்றுக்காரன், குழந்தை ஆகியோரைத் தனது வழிகாட்டியாகக் கொண்டிருப்பவன் ஓட்டை விழுந்த தோணியைப் போல ஆதரவற்று மூழ்குவான்.

               வேலையின் பொதுவான நெறிமுறைகளில் திறமையுள்ளவர்கள், அவ்வேலையின் குறிப்பிட்ட வகைகளை அறியாதிருந்தாலும், அந்தக் குறிப்பிட்ட வகை வேலைகள் துணை வேலைகளே என்பதால், அவர்கள் கற்றவர்கள் என்றும், அறிவுள்ளவர்கள் என்றும் மனிதர்களால் கருதப்படுகிறார்கள்.

              மோசடிக்காரர்கள், கூத்தாடிகள், கெடுபுகழ் கொண்ட மகளிர் வேசிகள் ஆகியோரால் புகழப்படும் மனிதன் உயிரோடிருந்தாலும் இறந்தவனாகவே கருதப்படுகிறான்.

        அளவிலா சக்தி கொண்ட பலமிக்க வில்லாளிகளான பாண்டவ புதல்வர்களை விட்டுவிட்டு, பலமிக்கப் பேரரசின் பொறுப்பை நீர் துரியோதனனிடம் அளித்திருக்கிறீர். எனவே,ஆணவத்தால் மூவலகங்களையும் ில் இருந்து விழுந்த மகாபலியைப் போலப் பரந்திருக்கும் இந்தச் செல்வச் செழிப்பு வீழ்ச்சியடைவதை விரைவில் நீர் காண்பீர்” என  விதுரன் ஒரு மன்னனுக்கு குணநலன்களை கூறி,  அதை கைக்கொள்ளாததால் திருதராஷ்டிரன் அரசு எவ்வாறு வீழும் என எச்சரிக்கிறார்.

அறம் பயில் :

(விதுர நீதி )
..........................

பாவிகளாக இருப்பவர்கள், தங்கள் குறைகளை உறுதி செய்து கொள்ளாததைப் போலப் பிறருடைய நல்ல குணங்களையும் உறுதி செய்ய மாட்டார்கள்.

அனைத்துக் காரியங்களிலும் உயர்ந்த வெற்றியை விரும்பும் ஒருவன், தொடக்க நிலையில் இருந்தே அறம் பயில வேண்டும்.

No comments:

Post a Comment