Thursday 18 June 2020

சங்கீதமங்கல நாதேஸ்வரர்

சிவனுக்கு இனியவன் என்று புனை பெயர்கொண்ட சிவனடியாரொருவர் தரிசித்த அனுபவ பதிவு


சிவாயநம
நமசிவாய

எல்லாம்வல்ல எம்பெருமான் ஈசன் திருவருளால் சங்கீதமங்கலம் சங்கீதமங்கல நாதேஸ்வரர்  சுவாமி ஆலயதரிசனம்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம்
செஞ்சியில் இருந்து 13 கி.மீ தூரத்தில் உள்ள அனந்தபுரம். அந்த அனந்தபுரம் பக்கத்தில் குறுக்கே 2 கி.மீ தூரத்தில் உள்ள

சங்கீதமங்கலம் என்ற கிராமத்தில்
இயற்கை சூழல் நிறைந்த அழகிய திருக்குளம் ஓரம் அற்புதமான அழகிய திருமேனியுடன் அமர்ந்து அருள்பாலிக்கும் அருள்மிகு சங்கீதமங்கல நாதேஸ்வரர் சுவாமி ஆலயத்தை தரிசிக்கும் பாக்கியத்தை எம்பெருமான் ஈசன் அடியேனுக்கு அளித்துள்ளார்.

மேலும் அடியார்பெருமக்கள் அனைவரும் இங்கு வந்து இங்கு அருளும் இறைவனை தரிசனம் செய்து அவரின் திருவருளை பெற இறைவனிடம் விண்ணப்பம் செய்கிறோம்.

திருச்சிற்றம்பலம்

https://youtu.be/7YW6WMBrotI





No comments:

Post a Comment