Wednesday 10 June 2020

வேத சப்த மஹிமை



🤚மஹா பெரியவா அருளியது🤚

🤚🗣வேத சப்த மஹிமை🗣🤚

ஒரு சமயம் நத்தத்தில் காஞ்சி பரமாசார்யா மஹா பெரியவா இருந்த போது நடந்த சம்பவம்.

பெரியவா தங்கியிருந்த இடத்தில் ஒரு வேதபாராயண கோஷ்டி வேதத்தில் ஒரு அனுவாகம் கூறி கொண்டிருந்தார்கள்.

 அந்த இடத்திற்கு ஒர் ச்ரத்தையில்லாத பிராம்மணர் வந்திருந்தார். அவருக்கு வேதம் தெரியாது.

 என்னவோ அர்த்தமில்லாமல் முணமுணக்கிறதே இந்த கோஷ்டி இதனால் உலகத்திற்கு என்ன ப்ரயோஜனம்? ஏழை எளியவர்களுக்கு ஏதாவது திட்டமிட்டு செலவழித்தாலும் புண்யமாவது கிடைக்குமே என்று கூறினாரார்.

இது எப்படியோ பெரியவாள் காதுகளையும் எட்டி விட்டது. நமக்கும் பெரியவாளுக்கும் அதுதான் வித்யாசம்.

 வால்மீகி மகரிஷி தனது ராமாயணத்தில் ராமரைப்பற்றிக் கூறும்போது "நூறு குற்றங்கள் செய்தாலும் கொஞ்சம் கூட ஞாபகம் கொள்ள மாட்டார்.

ஏதாவது ஒரு நல்ல காரியம் செய்தாலும் அதைக்கொண்டே பூரண திருப்தி அடைந்து விடுவார்" என்று வர்ணித்திருப்பதை நடந்து காட்டியவர் நமது காஞ்சி பரமாச்சார்யாள்.

அன்று மாலை பூஜாகாலத்திற்குப் பிறகு பெரியவா அருள் வாக்கு கூற அமர்ந்தார்.

 காலையில் கம்ப்ளெய்ன்ட் செய்த ஆசாமியும் அங்கு மாலை கூட்டத்தில் அமர்ந்திருப்பதைக் கண்டார்.

அவர் அருகில் சென்று மடத்து சமையல்காரனைக் கூப்பிட்டார். இந்த ப்ராம்மணனுக்குப் பகல் சாப்பாடு நன்றாக இல்லையாம்.

ராத்திரி கொஞ்சம் ஸ்பெஷலாக கவனித்துக்கொள் என்று கூறினார்.

 அந்த சமையல்காரன் இந்த ப்ராம்மணனைப் பார்த்து முணமுணத்துக் கொண்டே போனார்.

இந்த பிராம்மணனுக்கு படுகோபம் வந்து விட்டது. ஸ்வாமி! பார்த்தேளா! என்னமோ முணமுணத்துக் கொண்டே போகிறானே பார்த்தேளா?" என்றார் அந்த பிராம்மணர்.

 நம் நடமாடும் தெய்வம் புன் முறுவலுடன் கேட்கிறார். அவன் என்ன முணமுணத்தான் என்று தெரியுமா என்றார்? அது காதில் விழவில்லை.

 ஆனால் முணமுணத்தது காதில் நன்றாக விழுந்தது என்றார் பிராம்மணர்.

 அவன் என்ன சொன்னான் என்று புரியாத முணமுணப்புக்கு அது என்ன வார்த்தை யாரை பற்றி என்று தெரியாமல் இருக்கும் போது அந்த முணமுணப்பு சப்தம் உன்னிடம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துமானால் வழிவழியாக பரம்பரையாக வந்த வேத முணமுணப்பு அந்த நேரத்தில் எத்தகய உயர்ந்த பிரதிபலிப்பை ஏற்படுத்தும் என்பது உனக்குக் காலையில் ஞாபகமில்லை போலிருக்கு என்று சொன்னார்.

சப்தத்திற்கு வேத சப்தத்திற்கு உள்ள மதிப்பை ஆசார்யாள் சொல்லுகின்ற மாதிரி யார் நமக்கு மனதில் பதியும் படி சொல்ல முடியப்போகிறது!

அந்த ப்ராம்மணர் வேத அத்யயன கோஷ்டியை இகழ்ந்தற்கு ஆசார்யாள் அஸூயைப்படவில்லை.

 ஸ்ரீ மடத்தில் தனது சன்னிதானம் இருக்கும் இடத்தில் காலையில் காலை வைத்து விட்ட அந்த ஒரு புண்ணியத்திற்காக...

  அவர் வேத கோஷ்டியை இகழ்ந்த பாபத்தை மறந்து விட்டு ஒரு சிறிதும் கோபமோ வெறுப்போ கொள்ளாமல்..

 அவருக்கும் அவர் வ்யாஜமாக லோகத்தினருக்கும் ஞானம் அனுக்ரஹம் பண்ணுவது இருக்கிறதே அது தான் "தெய்வீகம்" என்பதற்கு லக்ஷணம்.

அந்த பரமாசார்யாளின் பாததூளி பாக்யம் எத்துணை உயர்ந்ததாக இருக்கும் என்று கூறவும் வேண்டுமோ?

ஹர ஹர சங்கர.. ஜெய ஜெய சங்கர..

No comments:

Post a Comment