Tuesday 30 June 2020

அகத்தியர் பீடத்தின் மக்கள் சேவா வேள்வி பணிகள்

நேற்று நமது பொகளூர் அகத்தியர் பீடத்தின் சார்பில் குருஜி இறை சித்தரின் வழிகாட்டுதலின் படி திரு கிரிதரன் ஐயா தலைமையில் சித்தர் யாகம் கரியாம்பாளையம் என்ற அன்னூரில் உள்ள ஒரு கிராமத்தில் திரு ஜெய சூர்யா என்ற நமது பீடத்தை சேர்ந்த அன்பருக்கு யாகம் சிறப்பான முறையில் செய்யப்பட்டது

இதில் கிரிதரன் ஐயா கூறும் போது அவர்களுடைய தொழிற்சாலைக்குள் இந்த யாகம் செய்யப்பட்டது

ஜெயசூர்யா அவர்கள் கூறிய விஷயமாக என்றுமே சூரியனின் ஒளி கதிர்கள் தொழிற்சாலைக்கு உள்ளே வந்தது கிடையாது இருளாக தான் இருக்கும் ஆனால் இன்று யாகத்திற்காக கலசம் வைத்துள்ள போது சூரியனின் கதிர்கள் நேரே உள்ளே இறங்கி கலசங்களின் மேல் உள்ளது.  இதுவரை இதுபோன்ற சூரிய கிரணங்களை தனது தொழிற்சாலையில் கண்டது இல்லை என்று அதிசயமாக கூறினார்

மேலும் யாகத்தின் காட்சிகளை நாம் ஆய்வு செய்து பார்த்த போது சில உருவங்கள் வழக்கம் போல தெரிந்தன

உங்களது மேலான பார்வைக்கு

இவ்விதம் தொடர்ந்து சித்தர் யாகத்தில் பங்கு கொள்வது மூலமாகவும் சித்தர் யாகத்தை அவர்களது இல்லத்தில் நடத்தி கொள்வது மூலமாகவும் சித்தர் நாமத்தை ஜெபிப்பது மூலமாகவும் ஒரு நல்ல தூய்மையான நேர்மறையான அதிர்வுகள் அவர்கள் இருக்கும் இடத்திலும் அவர்கள் செல்லும் இடத்திலும் எப்போதும் உருவாகி பன்மடங்கு பெருகி பல பல நன்மைகளை அளிக்கும் என்பது உண்மை

மேலும் ஆறுமாதம் ஒருவருடம் கழித்து யாகம் செய்தவர்களிடம் இதனை கேட்டு தெரிந்து கொள்வோம் மிக்க நன்றி நண்பர்களே
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் அகத்தீஸ்வராய நமக ஓம் அன்னை லோபமுத்திரை தாயே போற்றி போற்றி 18 சித்தர்களே போற்றி நவகோடி சித்தர்களே போற்றி எண்ணிலா கோடி சித்தர்களே போற்றி தேவர்களே மூவர்கள் போற்றி போற்றி தமிழ்த்தாயே போற்றி
🙏🙏🙏🙏🙏🙏🙏























2 comments:

  1. தற்போது நேரில் வர இயலவில்லை, ஜீவ நாடி பெயர் கூறி படித்து சொல்ல சித்தர் பெருமான் அனுமதி உண்டா; இப்படிக்கு, அருள்ராஜ்...

    ReplyDelete
    Replies
    1. நமது பீடத்தில் அவ்வண்ணம் படிப்பது இல்லை. என்னை வாட்ஸ் மூலம் தொடர்பு கொள்ளவும், மேலும் சில தகவல்கள் பகிர்கிறேன், 9176012104

      Delete