Saturday 19 October 2019

அகத்தியர் வாக்கு - நன்றும், தீதும் பிறர் தர வாரா". ஒரு மனிதன் தன் பால்ய பருவத்திலே எதையெல்லாம் விதைக்கிறானாே, அதனை அடுத்தடுத்து அறுவடை செய்துதான் ஆக வேண்டும்.*

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*நாள் : 260*

*தேதி: 20-10-2019(ஞாயிறு - சூரியன், கதிரவன், பகலவன், ரவி, ஆதித்தன்)*

*அகத்திய மாமுனிவர்* என்பவர் யார்?

*ஆதித்தியரிடத்தே ஞானங்களைப் பெற்றவர்* அகத்திய மாமுனிவர்.

*கேள்வி : வயதானவர்களின் கஷ்டங்களால் அவர்களுக்கும் துன்பம், அவர்களின் இரத்த சம்பந்தங்களுக்கும் துன்பம். இதற்கு யார் காரணம்? அவர்களா? அல்லது இவர்களா?*🙏

*அகத்தியர் மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*

*இறைவனின் கருணையாலே இது குறித்து வெளிப்படையாகப் பேசினால் மனிதர்கள் மனம் வேதனைதான் அடையுமப்பா. பாெதுவாகப் பாரத்தால் அகவை(வயது) அதிகமானவர்கள் பல இல்லங்களில் புறக்கணிக்கப்படுவதும் அவர்கள் மனம் வேதனைப்படும் வண்ணம் இளையவர்கள் நடந்து காெள்வதும் பாெதுவான விஷயமாக இருந்தாலும்கூட ஒன்றைப் புரிந்து காெள்ள வேண்டும். "நன்றும், தீதும் பிறர் தர வாரா". ஒரு மனிதன் தன் பால்ய பருவத்திலே எதையெல்லாம் விதைக்கிறானாே, அதனை அடுத்தடுத்து அறுவடை செய்துதான் ஆக வேண்டும்.*

*ஒவ்வாெரு மனிதனுக்கும் மனசாட்சி என்று ஒன்று இருக்கிறது. தனக்கு நடக்கும், துன்பங்களுக்கும், காெடுமைகளுக்கும் யார் காரணம்? தான் எந்தெந்த சந்தர்ப்பத்தில், சூழலில் எப்படியெல்லாம் நடந்து காெண்டாேம்? என்று அவனவன் மனதிற்குத் தெரியும். வெளிப்படையாக அதை அவன் கூறினால் அவனின் அனைத்துத் துன்பங்களுக்கும் காரணம் பலருக்கும் புரியும். எனவே ஒவ்வாெரு மனிதனும் நேர்மையாக, யார் மனதையும் புண்படுத்தாமல் ஒரு வாழ்க்கை வாழ்ந்தால் அவனுடைய வாழ்க்கையும் நன்றாகவே செல்லும்.*

*விதிவிலக்காக மிக, மிக உத்தமமான அன்பர்களுக்கும் கடைகாலத்திலாே அல்லது இடைகாலத்திலாே கடுமையான துன்பங்கள் பிணியாகவாே, பாெருளாதார நெருக்கடியாகவாே அல்லது உறவு சிக்கல்களாகவாே ஏற்படலாம். அது பாேன்ற நல்ல ஆத்மாக்களுக்கு வினைக்கழிவாக அது ஏற்படுகிறது. அந்த வினை கழிந்தவுடன் அவன் மீண்டும் நலம் பெற்று விடுவான். ஆனால் சிறு வயதில் செய்த பிழைக்காக, தவறுக்காக மத்திய காலத்திலும், அந்திம காலத்திலும் இடர்படுகின்ற ஆத்மாக்கள் அந்த இடர்களை நுகர்ந்துதான் ஆக வேண்டும்.*

*ஏன்? தன் இளமைக்காத்திலே தன் பெற்றாேர்களைப் புறக்கணித்தவர்கள், தன் கணவனின் பெற்றாேரைப் புறக்கணித்தவர்கள் இன்று மட்டும் தனக்குப் பிறர் ஆதரவாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்?  என்பதை அவனவன் மனசாட்சிப்படி சிந்தித்துப் பார்க்க வேண்டும். இருந்தாலும் கூட, துன்பப்படுவதற்கு நீதான் காரணம் என்று கூறுவது அநாகரீகம் என்பது எமக்கும் தெரியும்.*

*எனவே இது பாேன்ற துன்பஙகளில் இருந்து ஒவ்வொரு மனிதனும் தன்னைத் தற்காத்துக் காெள்ள, விழிப்புணர்வாேடு பிறருக்கு முடிந்தவரை நலம் செய்து வாழ வேண்டும். தன்னைச் சார்ந்தாேர்களுக்கு இயன்ற நன்மைகளை செய்ய வேண்டும். அகவை(வயது) அதிகமானவர்கள் மன ரீதியாக, வாய் வழியாக மதித்தால் மட்டும் பாேதாது. மனதிற்குள் நல்ல மரியாதை செய்து வாழ்த்தினால், அவர்களை வணங்கினால், அப்படி வணங்குகின்றவர்களின் அந்திம காலம்(கடை சி காலம்) சிறப்பாகவே இருக்கும். எனவே இது பாேன்ற இக்கட்டான நிலையில் உள்ளவர்கள் மனதளவிலே இறைவனை எண்ணி வணங்கினால் இறைவன் கருணையாலே கட்டாயம் மாற்றங்கள் நேரிடும்.*

*தேகம் நலிவு பெறுவதும், அகவை(வயது) அதிகமாவதும் ஒவ்வாெரு மனிதனுக்கும் நடக்கக்கூடியதுதான் என்பதை வாலிப காலத்தில் ஒவ்வாெரு மனிதனும் உணர வேண்டும். அப்பாெழுதுதான் தனக்கும் அந்திமம்(கடைசிகாலம்) இருக்கிறது. அப்பாெழுது பிறர் உதவியை எதிர்பார்த்து வாழ வேண்டும். அப்பாெழுது யாராவது தன்னைப் புறக்கணித்தால் தன் மனம் வேதனைப்படும் என்கிற அந்த உணர்வு வரும். இவையெல்லாம் வெறும் பாலபாடங்கள்தான். இன்னும் எத்தனையாே சூட்சுமங்கள் இருக்கிறது. ஆனால் வாழ்வியலும், அவசர கதியிலும் வாழ்கின்ற மனிதன் "இதையெல்லாம் கவனிக்க எங்கே நேரமிருக்கிறது?" என்று கூறினால், அவனையும் பிறர் கவனிக்க நேரமில்லாமல் பாேய்விடுமப்பா.*

                       🙏 *-சுபம்-* 🙏

 *🙏ஸ்ரீ லாேபாமுத்திரை தேவி சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*

*🙏 குரு திருவடி சரணம்! சரணம்!🙏*

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*

.மேலே உள்ள பதிவு திரு S. Prabhu என்பவர் தினம் ஒரு அகத்தியர் வாக்கு என்ற whats up குழுவில் உள்ள பதிவிலிருந்து எடுக்கப்பட்டு தினமும் இங்கே  பதிவு செய்யப்படுகிறது. நல்ல பதிவுகளை பகிர்வதில் தவறில்லையே !!!.
************************************

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.

தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏

Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583

கூகிள் வரைபடம் வழி கீழே 👇

https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in

முகநூல் -

https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/
அகத்தியர் ஆலயத்தில் நடக்க இருக்கும் பணிகள்
1. நுழைவாயிலில் மழை நீர் செல்ல பெரிய சிமெண்ட்குழாய் அமைத்தல்
2. 15 அடி அகல க்ரில் கேட் அமைத்தல்
3. சுற்றுப்புற சுவர், சுமார் 1000 ஹாலோ பிளாக் கற்கள் தேவைப்படலாம். 1 கல் 40 ரூபாய் விலை
4. புல்டோசர் வைத்து தரையை சமப்படுத்துதல்
5. மரக்கன்றுகள் நடுதல்
6. ஆழ் குழாய் போர்வெல் அமைத்தல்
7. மேல் நிலை தொட்டி அமைத்தல்
8. அகத்தியர் குடில் அமைக்க தளம், சுவர், ஓடுகள் ஆகியவை

தங்களால் இயன்ற உதவியை செய்ய தாழ்மையுடன் யாசிக்கிறோம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

*************************************************
அகத்தியப்பெருமான் அடியவர்களுக்கு வணக்கம். சதுரகிரி மலையில் சூட்சம ரூபத்தில்  உலவி வரும் அதிசய சித்தர்கள் நிகழ்த்திய அற்புத அனுபவங்கள் நமது குருநாதர் அகத்தியர் வாய் முகூர்த்தமாக  வெளிப்படும் அருமையான நூல் இது. அனுமத்தாசன் அய்யாவின் ரசிக்கும் நடையில் நமக்கு பக்தி விருந்து படைக்க  வெளி வந்துவிட்டது. 🙏

தெய்வத்திரு ஹனுமத்தாசன் எழுதிய"அதிசய சித்தர்கள்"  வெளியாகி விட்டது. இதுவரை வாங்காத அன்பர்கள் ஒரு புத்தகத்துக்கு 300 ரூபாய் வீதம் எனது வங்கி கணக்கில் செலுத்தி விட்டு தங்கள் முகவரியை எனக்கு அனுப்பவும். தகவல் தெரிவிக்கவும். Google pay ல் செலுத்தலாம்.  அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

my SB account No.32421709250 k.sankaran- State bank of india - dasarathapuram branch chennai93
IFSC:SBIN0014624

அகத்தியர் தரிசித்த திருத்தலங்கள் ரூ. 200

பலன் தரும் பரிகார தலங்கள்  ரூ. 150

 அதிசய சித்தர்கள் ரூ. 250

நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள்  ரூ. 1000

இந்த அனைத்து புத்தகங்களும் தேவையுள்ளவர்கள் என்னை தொடர்பு கொள்ள வேண்டுகிறேன். அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

யாருக்கு என்னென்ன புத்தகம் தேவையோ அதனை வாங்கி கொள்ளலாம். அனுப்ப வேண்டிய தொகை மற்றும் தபால் சிலவுக்கு என்னை தொடர்பு கொள்ள வேண்டுகிறேன். அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

************************************************