Tuesday 12 September 2017

அகத்தியர் வழி வருபவர்கள் - அய்யா அருளுரை

அகத்தியப் பெருமான் அருள் வாக்கு

ஒரு மனிதன் எமக்கு பிரியமானவன், எமது வழியில் வருபவன் என்றால், எமது வார்த்தைகளை உள் நிறுத்தி, செவி கேட்டு, செயல் நடத்திக் காட்ட வேண்டும். ஒரு செல்வந்தன் இருக்கிறான். அவன் தனக்கு பிரியமான ஒரு உதவியாளனை அழைத்துக் கொண்டு பல்வேறு இடங்களுக்கு செல்லும்போது அவனுக்குக் கிடைக்கும் மதிப்பும், மரியாதையும் அவன் உதவியாளனுக்கும் கொடுக்கப்படுகிறது. ஆயினும், அந்த உதவியாளன் தவறுகள் ஏதேனும் செய்தால், அவனை அழைத்துச் சென்ற செல்வந்தனுக்குத்தானே அந்த கேவலமும், ஏளனமும். அகுதொப்பத்தான் மிகப் பெரிய மஹான்களின் உன்னத கருத்துக்களைக் கூறிக்கொண்டிருக்கும் எமக்கு, "எமது வழியில் வருபவன்  என்று கூறிக்கொண்டு, எமது வாக்கின் தன்மையை பிரதிபலிக்காமல் இருந்தால், அது எமக்கு ஏற்புடையதாக  இராது. எம்மையும், ஏளனப்படுத்துவதாகும். அப்படிப்பட்டவர்களுக்கு யாங்கள், பெயரளவுக்குத்தான் வாக்குகளை தருவோமே ஒழிய, ஆத்மார்த்தமாக அல்ல. புத்தி சொல்லி திருந்தவில்லை என்றால், "அவன் விதிப்படி வாழட்டும்" என்று விட்டுவிடுவோம். காலம், இடம், சூழல், சுற்றி உள்ள மனிதர்கள், வறுமை, வளமை, இல்லம், தொழில், இதில் எது சிக்கலாக இருந்தாலும், அதை ஒதுக்கி வைத்துவிட்டு, அறம், சத்தியம், இறை பிரார்த்தனையை மறவாதே. இவற்றை பின் தொடர்ந்து கொண்டே வா. யாம் உன் அருகில் இருந்து கொண்டே இருப்போம். ஆசிகள். சுபம்.

No comments:

Post a Comment