Tuesday 12 September 2017

அழகான கவிதை

நினைத்தது நடக்கும்வரை
அறிவே பெரிதாகத் தெரியும் !
நினைத்தது நடக்காதவரை
நம்பிக்கையே பெரிதாகத்
தெரியும்!
எதிர்பாராதது நடந்துவிட்டால்
தெய்வம் பெரிதாகத்
தெரியும் !
எதிர்பார்த்தது இடறப்பட்டால்
ஞானம் பெரிதாகத் தெரியும் !
திறமை எப்போது செயல்இழந்து போகிறதோ ஊழ்வினை பெரிதாகத் தெரியும் !
பெரிதாகத் தெரிந்தது எல்லாமே சிறிதாகும் போது உன்னை உனக்குத் தெரியும் !
உன்னை உனக்குள் தெரியும்போது கடவுள் உன்னிடம்
பெரிதாகத் தெரிவார்!

No comments:

Post a Comment