Friday 22 September 2017

நாரி குளியல் அபிஷேகம்

நாரி குளியல் அபிஷேகம்
இத்தகைய புனிதமான தலங்களில் இறைவனுக்கு ஆற்ற வேண்டிய விசேஷமான வழிபாடே நாரி குளியல் என்ற அபிஷேகம் ஆகும். புனிதமான இறை மூர்த்திக்கு புனிதமான அபிஷேகத்தைத்தானே நிறைவேற்ற வேண்டும் ? 108 இளநீர் தீர்த்தத்தை சுவாமியின் லிங்க பாகத்திற்கும் ஆவுடை பாகத்திற்கும் அபிஷேகம் செய்வதே நாரி குளியல் என்னும் சித்த முறை அபிஷேகம் ஆகும்.
முதல் இளநீரை லிங்கத்திற்கும், இரண்டாவது இளநீர் தீர்த்தத்தை ஆவுடைக்கும், மூன்றாவது இளநீரை லிங்கத்திற்கும், நான்காவது இளநீரை ஆவுடைக்கும் அபிஷேகம் செய்ய வேண்டும். அதாவது ஒன்றுவிட்டு ஒன்று மாறி மாறி லிங்கத்திற்கும் ஆவுடைக்கும் 108 இளநீர் தீர்த்தத்தை அபிஷேகம் செய்வதே நாரி குளியலாகும்.
அற்புதமான பலன்களை அளிக்க வல்லதே நாரி குளியல் அபிஷேகமாகும்.
இதற்கு மாறுதலாக முதலில் லிங்கத்திற்கு 54 இளநீர் தீர்த்தத்தையும் ஆவுடைக்கு 54 இளநீர்களை அபிஷேகம் செய்வதும் ஏற்புடையதே.
நாரி குளியல் அபிஷேகத்தால்
  1. நீதித் துறையில் பணி புரியும் நீதிக் காவலர்களான நீதிபதிகள், வக்கீல்கள் போன்றோர் நடு நிலைமையுடன் தங்கள் கடமைகளை நிறைவேற்றத் தேவையான மனோ தைரியத்தையும், தங்கள் துறையில் நல்ல பெயரையும் புகழையும் பெற இறையருள் கிட்டும்.
  2. சில பெண்களுக்கு மாத விடாய் சமயங்களிலும், கருவுற்றிருக்கும்போதும் மனம் பேதலித்து அதனால் குடும்பத்தில பல மன குழப்பங்கள் ஏற்படும். அது அத்து மீறி விவாகரத்து வரை கூட சென்று விடுவதும். அத்தகைய துன்பங்களுக்கு நிவாரணம் அளிப்பதே நாரி குளியல் அபிஷேகம் ஆகும்.
  3. படிப்பில் மந்தமாக இருக்கும் குழந்தைகள் தேவையான மனோ வளர்ச்சி பெற நாரி குளியல் அபிஷேகம் துணை புரியும்.
  4. தம்பதியரிடையே பணம், பதவி, படிப்பு, உடல் அழகு போன்ற ஏற்றத் தாழ்வுகளால் மன வேற்றுமை ஏற்படும்போது நாரி குளியல் அபிஷேகம் மன ஒற்றுமையை ஏற்படுத்துவதால் குடும்பத்தில் ஒற்றுமை வளரும்.

No comments:

Post a Comment