Sunday 16 September 2018

இல்வாழ்க்கையில் எப்படி வாழ வேண்டும் என்று ஸ்ரீ அகத்திய பெருமான் அருளிய ஜீவ வாக்கு

இல்வாழ்க்கையில் எப்படி வாழ வேண்டும் என்று ஸ்ரீ அகத்திய பெருமான் அருளிய ஜீவ வாக்கு



மதியாமை செய்கின்ற மாந்தனை,துதியாமை செய்வாய் ஆயினும்,

மிதியாமை செய்யாய் பதியாமை இறையை உள்ளத்தில் வாழ்ந்தால் நல் கதியாமை தொடராது.உணர்வாய்.சதியாமை செய்யும் மாந்தன் பிறன் நலன் கருதாமை செய்து வாழுங்கால்,கர்மாவை சேர்த்து,சேர்த்து தர்மத்தை மறக்கிறான்.அறத்தை,சத்தியத்தை புரியாமை வாழ்ந்து இவற்றை எல்லாம் விளங்காமை கொண்டு கல்லாமையில்,நல்லவற்றை கருதாமையால் பொல்லாமை கொண்டு, புகழாமை தேடி பிறரை புகழாமை வாழும் மாந்தன் நற்பண்பு அவனிடம் புகலாமையில்,மெய் புகழாமை அவனுக்கு வராது.எத்தனை அறியாமை தலை கனத்தால்,பிறரை மதியாமை,பொல்லாமை,பொறாமை என்று உணராமை காரணம். சித்தன் வாக்கு நடவாமை ஆனால் மட்டும் எம்மீது சின ஆமை கொண்டு,வெறுப்பாமை தொடர ,கர்மாவை மறக்கிறான் மாந்தன்.உண்மையை சொல்லாமை,அறத்தை செய்யாமை,சினத்தை விடாமை,கடமையை தொடராமை,காலத்தை பயன்படுத்தாமை என்று பல ஆமை மனிதன் கொள்ள,இவற்றால் உயராமை கொள்கிறான்.பொறாமை விட்டு போதாமையிலும்,பொல்லாமை கொள்ளாது, உள்ள ஆமையை நில் ஆமை என்று கட்டளையிட்டு,இவ்வுலகில் எல்லாம் நிலையாமை என உணர்ந்து பதவி கிடைக்காமல் போனால் அவற்றால் பலனாமை இல்லை.பதவி நிலையாமை,தனம் நிலையாமை, அழகு நிலையாமை,அறமே நிலைத்த ஆமை என்று உணர்ந்து துயிலாமை கொண்டு துடிக்கின்ற காலத்தை பயிலாமை,உள் அடங்கி மனதை சாந்தி ஆக்கி,தள்ளாமையிலும் தாளாமை கொள்ளாது,தேகத்தை வலுவாமை ஆக்க தேவையற்றதை ஏற்காமை,உண்மையாக நல்லனவற்றை ஏற்காமை இருக்காமை, என்றும் எதிலும் எவர் மீதும் சினவாமை, தேவை.தேவையல்லா பொறாமை,ஆற்றாமை, அடிக்கடி உள்ளத்தை மாற்றாமை,நல்ல செயலை தொடர்ந்து செய்யாமை இருக்காமையாக இருக்க,இறை தோழமை உண்மையாக தொடரும் என்பதை மெய்ம்மை மனத்தோடு உணர்ந்து,தேகம் நிலையாமை என்பதை உணர்ந்து, ஆத்மா உணராமை வாழாமை,தொட்டதற்க்கு எல்லாம் வருத்தாமை,வாழும் வழி தொடர, புரியாமை நடக்கின்ற செயல் எல்லாம் பரந்தாமன் திருவடி பற்ற புரியாமை,பரியாமை.தொடர்ந்து நரியாமை நகர்ந்து தெரியாமை,தொலைந்து உன் உள்ளத்தில் எரியாமை,அணைந்து பரியாமை வளர்ந்து, தெரியாமை,எது குறித்தும் வாழாமை,வாழும் மெய் கொண்டு வாழ அனைத்தும் நலமாம்.

ஆசிகள்.