Tuesday 25 September 2018

அகத்தியர் ஜீவ நாடி அருளுரை, எனக்கு உரைத்தது 24Sep18

ௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐ

நான் கடந்த வாரம் திருவண்ணாமலை பருவதமலை சதுரகிரி ஆகிய திருத்தலங்களுக்கு 3 நாள் தொடர்ந்து ஒரு யாத்திரையாக புறப்பட்டு சென்று வந்தேன்

பௌர்ணமி அன்று அகத்தியர் ஜீவ நாடியில் என்னை பற்றி கேட்ட போது அகத்தியர் உரைத்த வரிகள் கீழ்வருவன

என் மழலைக்கு சிறு சிறு இன்னல்களை கொடுத்து யாமே அழைத்து சென்றோம்

அவனுக்கு இயற்கையின் நிலையில் அற்புதங்களை தந்தோம்

வானர வடிவில் வந்து வந்து காட்சி தந்தோம்

யாம் மனம் மகிழ்ந்தோம்

அவன் கர்ம வினைகள் யாவையுமே விட்டு ஒழிந்தது

வாசனை வடிவில் வந்து புலன் உணர்த்தினோம்

வானரமாக வந்து அவனை ஆசீர்வாதம் செய்தோம்

தென்றலாக வந்து அவனை தொட்டு தழுவி சென்றேன்

பின்னர் ஒரு கோ பசு மாடாக வந்து அவனுக்கு குரல் கொடுத்தேன் மூன்று முறை

பைரவர் வடிவில் வந்து காட்சி தந்தேன்

 என் மழலையை பக்குவ நிலைக்கு அழைத்துச் செல்லவே யாம் தலங்களுக்கு அழைத்து சென்றோம்

பெரும் விபத்திலிருந்து அவனை காக்கவே அவனை சதுரகிரிக்கு அழைத்து சென்றோம்

எமது ஆலய திருப்பணியை ஐப்பசி கார்த்திகை நன்னாளில் ஆரம்பிக்கவும்

கண்டம் விட்டு கண்டம் வந்து முயற்சி கொடுப்பார்கள் ஏழு பேர் வெளிநாட்டில் இருந்து வந்து ஒன்று சேர்ந்து உதவி செய்வார்கள்

எல்லாமே என் மழலையின் முன்னிலையில் செய்ய வேண்டும் அவன் தான் முன்னிலை வகிக்க வேண்டும் அதற்கு வேண்டிய செல்வம் யாமே தருவோமே.

முற்றே.

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻