Saturday 1 September 2018

ஸ்ரீ சிவசுப்ரமணிய சுவாமி வேலுடையான்பட்டு நெய்வேலி



ஸ்ரீ சிவசுப்ரமணிய சுவாமி
வேலுடையான்பட்டு
நெய்வேலி

முருகப் பெருமான் பெரும்பாலும் வேலுடன் வேலாயுதபாணியாகவும், தண்டத்துடன் தண்டாயுதபாணியாகவும் திருக்காட்சி தருவார்.

ஆனால், வேலுடையான்பட்டு என்ற தலத்தில் கோயில் கொண்டருளும் முருகக் கடவுள், வில்லேந்திய கோலத்தில், வள்ளி, தெய்வானையுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.

மூவரின் திருவுருவங்களும் ஒரே கல்லில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இங்கு முருகப்பெருமான் சுயம்புவாக எழுந்தருளி உள்ளார்.

இந்தக் கோயில் இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், நெய்வேலி என்.எல்.சி. நிர்வாகம்தான் கோயிலை நிர்வகித்து வருகிறது

சஷ்டி, விசாகம், கார்த்திகை, திங்கள், செவ்வாய், ஆகிய நாட்கள் முருகப் பெருமானுக்கு உகந்த நாட்கள் ஆகும்.

முருகப் பெருமானுக்கு உகந்த மலர்கள் முல்லை, சாமந்தி, ரோஜா, காந்தன் முதலியவை ஆகும்.

முருகனின் மூலமந்திரம் ஓம்சரவணபவாய நம என்பதாகும்.

பிற கடவுள்களுக்கு இல்லாத சிறப்பு ஒன்று முருகனுக்கு உள்ளது. அது பிரமசரிய-கிருகஸ்த-சந்நியாசக் கோலங்களில் முருகனை மட்டுமே காண முடியும்.

ஆறு முகனான முருகன் அழித்த ஆறு பகைவர்கள் வேறு எங்கோ இல்லை. நம் மனதில் உறைந்திருக்கும் ஆணவம், கன்மம், குரோதம், லோபம், மதம், மாச்சர்யம் தான்.

தலவரலாறு

புராணக் காலத்தில் இந்தப் பகுதி அடர்ந்த வனமாக இருந்துள்ளது.

முருகப் பெருமானின் தரிசனம் வேண்டி, முனிவர்களும் தேவர்களும் இந்தப் பகுதியில் நீண்ட தவம் மேற்கொண்டனர்.

அவர்களுடைய தவத்துக்கு இரங்கிய முருகப்பெருமான், முதலில் ஜோதியாகவும், பின்னர் வில்லும் அம்பும் ஏந்திய வேடுவராகவும் திருக்காட்சி அளித்தார்.

தரிசனம் தந்த முருகப் பெருமானுக்கு சிறப்பான ஆலயம் அமைத்து வழிபட்டனர்.

காலப் போக்கில் ஆலயம் மண்மேடிட்டு மறைந்துவ� ஸ்ரீ சிவசுப்ரமணிய சுவாமி
வேலுடையான்பட்டு
நெய்வேலி

முருகப் பெருமான் பெரும்பாலும் வேலுடன் வேலாயுதபாணியாகவும், தண்டத்துடன் தண்டாயுதபாணியாகவும் திருக்காட்சி தருவார்.

ஆனால், வேலுடையான்பட்டு என்ற தலத்தில் கோயில் கொண்டருளும் முருகக் கடவுள், வில்லேந்திய கோலத்தில், வள்ளி, தெய்வானையுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.

மூவரின் திருவுருவங்களும் ஒரே கல்லில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இங்கு முருகப்பெருமான் சுயம்புவாக எழுந்தருளி உள்ளார்.

இந்தக் கோயில் இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், நெய்வேலி என்.எல்.சி. நிர்வாகம்தான் கோயிலை நிர்வகித்து வருகிறது

சஷ்டி, விசாகம், கார்த்திகை, திங்கள், செவ்வாய், ஆகிய நாட்கள் முருகப் பெருமானுக்கு உகந்த நாட்கள் ஆகும்.

முருகப் பெருமானுக்கு உகந்த மலர்கள் முல்லை, சாமந்தி, ரோஜா, காந்தன் முதலியவை ஆகும்.

முருகனின் மூலமந்திரம் ஓம்சரவணபவாய நம என்பதாகும்.

பிற கடவுள்களுக்கு இல்லாத சிறப்பு ஒன்று முருகனுக்கு உள்ளது. அது பிரமசரிய-கிருகஸ்த-சந்நியாசக் கோலங்களில் முருகனை மட்டுமே காண முடியும்.

ஆறு முகனான முருகன் அழித்த ஆறு பகைவர்கள் வேறு எங்கோ இல்லை. நம் மனதில் உறைந்திருக்கும் ஆணவம், கன்மம், குரோதம், லோபம், மதம், மாச்சர்யம் தான்.

தலவரலாறு

புராணக் காலத்தில் இந்தப் பகுதி அடர்ந்த வனமாக இருந்துள்ளது.

முருகப் பெருமானின் தரிசனம் வேண்டி, முனிவர்களும் தேவர்களும் இந்தப் பகுதியில் நீண்ட தவம் மேற்கொண்டனர்.

அவர்களுடைய தவத்துக்கு இரங்கிய முருகப்பெருமான், முதலில் ஜோதியாகவும், பின்னர் வில்லும் அம்பும் ஏந்திய வேடுவராகவும் திருக்காட்சி அளித்தார்.

தரிசனம் தந்த முருகப் பெருமானுக்கு சிறப்பான ஆலயம் அமைத்து வழிபட்டனர்.

காலப் போக்கில் ஆலயம் மண்மேடிட்டு மறைந்துவிட்டது.

கலியுகத்தில் நம்முடைய இன்னல்கள் அனைத்தையும் இல்லாமல் செய்து, நமக்கு அருள் புரியத் திருவுள்ளம் கொண்டுவிட்டார் முருகப் பெருமான்.

கி.பி. 13-ம் நூற்றாண்டில் வாழ்ந்த சித்ரகாடவன் என்ற பல்லவ வம்சத்து மன்னரின் பசுக்கள், இந்தப் பகுதியில் இருந்த காட்டுப் பகுதிக்கு மேயச் செல்வது வழக்கம்.

ஆனால், அரண்மனைக்குத் திரும்பியதும் பால் கொடுப்பதில்லை.

மன்னருக்கு ஒன்றும் விளங்கவில்லை.

ஒருநாள் மேயச் செல்லும் பசுக்களைத் தொடர்ந்து சென்றார்.

வனத்தில் ஒரு புதருக்கு அருகில் பசுக்கள் தானாக பாலைச் சொரிந்துகொண்டிருந்தது.

மன்னன் வியப்புற்ற வனாக, அந்த இடத்தை மண்வெட்டியால் வெட்டினான். அப்போது ரத்தம் பெருகி வரவே திடுக்கிட்ட மன்னர், அந்த இடத்திலிருந்த புதரை மெள்ள மெள்ள அப்புறப்படுத்திவிட்டுப் பார்த்தபோது, மண்வெட்டி பட்டதால் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டு, ரத்தம் பெருகிய நிலையில் காட்சி தந்தார் முருகப் பெருமான்.

அன்றிரவு மன்னரின் கனவில் தோன்றிய முருகப் பெருமான், தமக்கு அந்த இடத்தில் ஒரு கோயில் கட்டும்படி உத்தரவிட்டார்.

அப்படி உருவானதுதான் வேலுடையான்பட்டு வில்லேந்திய வேலவனின் திருக்கோயில்.

உற்சவர்

மூலவர் மண்ணிலிருந்து சுயம்புவாகத் தோன்றியவர் என்றால், உற்சவரோ கடலில் கிடைத்தவர்.

ஆம். இங்குள்ள உற்சவர் சிலை, கடலில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களால் கண்டெடுக்கப்பட்டு, கோயிலில் வழிபாட்டுக்கு வைக்கப் பட்டது.

இக்கோயில் சுமார் 700 ஆண்டுகளுக்கு முன் சித்திர காடவ பல்லவ வம்சத்து அரசரால் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது

1935 இல் வேலுடையான்பட்டு

கி.பி.1935 வரை வேலுடையான்பட்டு கிராமம் மற்றும் அதைச் சுற்றியிருந்த கிராமங்கள் செழிப்புடன் இருந்தன.

1935 ல் ஜம்புலிங்க முதலியார் என்பவர் தன் நிலத்தில் ஆழ்துளை கிணறு தோண்டினார். கிணற்றில் கருமையான நிறத்தில் பொருள் வெளிப்பட்டது.

அவர் அதனை அரசுக்கு அனுப்பி வைத்தார். அதை ஆராய்ந்தபோது அது நிலக்கரி என கண்டனர்.

அதன் பிறகு அந்த கிராமங்களைச் சுற்றிலும் உள்ள நிலங்களை ஆய்வு செய்து பூமிக்கு அடியில் படிந்திருக்கும். நிலக்கரியின் அளவை கணக்கிட்டனர்.

பின்னர், நிலக்கரியைத் தோண்டி எடுத்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தீட்டியது.
கி.பி.1956 ஆம் ஆண்டு சுரங்கம் தோண்ட நிர்வாக (corporate Body) அமைப்பு ஒன்றை நடுவணரசு அமைத்தது. கிராமங்களைக் காலி செய்து மக்களை வேறு இடங்களில் குடியமர்த்தியது.

காலி செய்யப்பட்ட கிராமங்களுள் வேலுடையான் பட்டு என்ற ஊரும் ஒன்று. ஊரைக் காலி செய்தாலும் மக்களால் வழிபாடு செய்யப்பட்டு வந்த சுப்பிரமணியர் கோயில் மட்டும் நிலைத்திருக்கிறது.

திருவிழாக்கள்

இந்தத் திருத்தலத்தில் ஒவ்வோர் ஆண்டும் பங்குனி உத்திர பிரம்மோற்சவத் திருவிழா விசேஷமானது.

12 நாள்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவின்போது, பக்தர்கள் பால் குடம் மற்றும் காவடிகள் எடுத்து வந்து வழிபடுவர்.

சுற்றிலுமுள்ள 18 கிராமங்களுக்கும் வேலுடையான்பட்டு வேலவன் குலதெய்வமாக இருந்து அருள்புரிந்து வருகிறார்.

பங்குனி உத்திரம்

பங்குனி மாதம் வளர்பிறை கார்த்திகை நட்சத்திரத்தில் இங்கு கொடியேற்றம். நடைபெறும். தொடர்ந்து பத்து நாட்கள் உற்சவம் நடைபெறும்.

தெருவடைச்சான் சப்பரம், முத்து இந்திர விமானத்தில் வீதி உலா, திருக் கல்யாணம், திருத்தேர் வடம் பிடித்தல், உத்திர நட்சத்திரத்தில் காவடி எடுத்தல், பின் தெப்ப உற்சவம் இறுதியில் விடையாற்றி உற்சவம் ஆகியவை நடைபெறும்.

கந்த சஷ்டியின்போது குழந்தைப் பேறு இல்லாதவர்கள், இந்தக் கோயிலுக்கு வந்து வேண்டிக் கொண்டால், குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

கடன், நோய் போன்ற பல பிரச்னைகளையும் தீர்க்கும் பிரார்த்தனைக்கடவுளாக பக்தர்கள் போற்றுகிறார்கள்.

ஒவ்வொரு மாதமும் கிருத்திகை, சஷ்டி, பெளர்னமியன்று சிறப்பு பூஜைகள் செய்யப்படும்.

ஆகம விதிமுறைப்படி தினமும் ஆறுகால பூஜைகள் செய்யப்படுகின்றன.

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை பூஜைக்கு உகந்த நாள் ஆகும்.

காலை 6 மணியிலிருந்து 12 மணி வரையிலும், மாலை 4.30-ல் இருந்து இரவு 9 மணி வரை கோவில் திறந்திருக்கும்.

கும்பகோணத்தில் இருந்து 83km.
கும்பகோணத்தில் இருந்து சேத்தியாதோப்பு வடலூர்
சென்று
வடகுத்து அடுத்து நெய்வேலி சாலையில்
நெய்வேலி டவுன் சிப்பில்   உள்ளது கோவில்.🌹🌹🌹வலங்கைமான் ஸ்ரீசீதளாதேவி அம்பாள்